Wednesday, 30 October 2019

katrathum petrathum-86


கற்றதும் பெற்றதும்-86
*மணி

ஒளகாரத்தைப் பிரித்து இரண்டெழுத்தாக்கி 'ஒ' என்றும்,'ள' என்றும் கூற முடியும்.ஆனால் ஊகாரத்தை அப்படிக்கூற முடியாது. கொள்கைப் பிடிப்புள்ளவர்களையும் அப்படித்தான் அவர்கள் சார்ந்த கட்சியிலிருந்து பிரித்துப் பார்க்க முடிகிறது.

-க.பொ.இளம்வழுதி.

#இந்திய கம்யூனிஸ்ட் இயக்க நூற்றாண்டு

கம்யூனிஸ்ட் பற்றி பேசினால் பலருக்கு வேப்பங்காய் போல் பேசினால் கசக்கும்.ஆனால் அவர்களின் எளிமையினையும் செயல்பாட்டினையும் பேசினால் அப்போதைக்கு வாதத்தில் உயர்த்தி பேசுவார்கள்.பின் மீண்டும் அவர்களுக்கு வேலை இல்லை, கொடிபிடிப்பார்கள் சண்டையிடுவார்கள் என்பர். வாதத்திலோ இணையத்திலோ அவர்களை பேச்சில் மடக்கியும் மட்டம்தட்டியும் பேசினால் ஒரு அறிவுஜீவிகளை வென்றதாக ஒரு புளகாங்கிதம் உள்ளூர ஏற்படுவதாக எண்ணுவர்.இன்றும் ஒரு அடிப்படை தேவைக்காக முதலில் குரல் கொடுத்து போராட்டம் நடத்துவது இடதுசாரி தோழர்களே.இன்றும் மகத்தான தலைவர்களாக நல்லகண்ணு,
சங்கரய்யா போன்றோர் தமிழகத்தில் உள்ளனர்.

#இந்திய கம்யூனிஸ்ட் கட்சி

நூறு ஆண்டுகளுக்கு முன்பு 1920 அக் 17ம் நாளில்தான் முந்தைய சோவியத் நாட்டின் தாஷ்கண்ட் நகரில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் முதல் கிளை ஏழு தோழர்களைக் கொண்டு உருவாக்கப்பட்டது.கட்சியின் செயலாளராக முகமது சஃபீக் தேர்வு செய்யப்பட்டார்.

பின் இந்தியாவில் 1920லிருந்து ஆரம்பமாகிறது.1923ம் ஆண்டு இந்தியாவிலேயே முதன்முதலாக சென்னையில் இரு இடங்களில் மேதினத்தை கொண்டாடினர்.
26-12 -1925ம் ஆண்டு கான்பூரில் ம.சிங்காரவேலர் தலைமையில் கூடியது.1934இல், மீரட் சதி வழக்கில் தண்டனை பெற்றிருந்தவர்கள் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட பின்னர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அகில இந்திய கட்சியாக செயல்படத்தொடங்கியது

தமிழகத்தில் 1936ல் கிளை துவங்கியது.பி.சுந்தரய்யா மற்றும் எஸ்.வி காட்டே முயற்சியில் துவங்கப்பட்டது.

#முதல் பிரகடனம் செய்தது இடதுசாரிகளே

*1921ல் ஆமதபாத் மாநாட்டில் கம்யூனிஸ்ட்களான ஸ்ரீசரத் மொகானி முழுவிடுதலை தீர்மானம் முன்மொழிய சுவாமி குமரானந்தா வழிமொழிந்தார்
*1922ல் கயா காங்கிரஸ் மாநாட்டில் சிங்காரவேலர், டாங்கே ஆகியோர் முழுவிடுதலை முன்மொழிந்தனர்
*1925ல் கெளகாத்தி மாநாட்டிலும் வீரேந்திர சட்டோபாத்தியாயா தீர்மானம் கொண்டுவந்ததை நிராகரித்து 1929 லாகூரில் காங் கொண்டு வந்தது ஏற்றுக்கொள்ளப்பட்டது.இதுவரை காங் தான் முதலில் கொண்டு வந்ததாக வரலாறு எழுதிக்கொண்டது.

#தடை

பிரிட்டனுக்கு கம்யூனிஸ்ட் என்றாலே ஆகாது.ஆதலால்  1934,,&1937ல் தடைவிதித்தது. பின் 1942ல் இரண்டாம் உலகப்போரின் காரணமாக தடையை நீக்கியது. அதற்கு பிறகு விடுதலை அடைந்தபின் காங்கிரஸ் கட்சி 1948ல் தடை விதித்தது.குறிப்பாக இவர்களை ஒடுக்க
1920-22 பெஷாவர் சதி வழக்கு
1923-லாகூர் சதி வழக்கு
1924-கான்பூர் சதி வழக்கு
1925-மீரட் சதி வழக்கு
இவ்வழக்குகளில் பலரும் கைது செய்யப்பட்டு சிறையிலடைத்தது குறிப்பிடத்தக்கது.

#தத்துவார்த்த ரீதியில் பிரிந்த கம்யூனிஸ்ட் கட்சிகள்

1964ம் ஆண்டு கம்யூனிஸ்ட் கட்சி வலது,இடது என பிரிந்தது.காரணம் சீன ஆக்கிரமிப்பு.சீனாவுடனான எல்லைப்பிரச்சனைக்கு பேச்சுவார்த்தை தான் தீர்வு என்றார் ஈ.எம்.எஸ்.நம்பூதரிபாட்.ஆனால் சீனாவுக்கு எதிரான நேருவின் ராணுவ நடவடிக்கை நிலைப்பாட்டை டாங்கே போன்றோர் ஆதரித்தனர்.ஈ.எம் எஸ் இவர்களை காங்கிரசின் வால் என விமர்சிக்க, பதிலுக்கு அவர்கள் சீன ஏஜெண்ட் என்றதால் கட்சி உடைந்து ஈ.எம் எஸ் அணி மார்க்சிஸ்ட் ஆகவும்,டாங்கே அணி இந்திய கம்யூனிஸ்டாகவும் இன்றுவரை தொடர்கிறது. இந்திராவின் எமர்ஜென்சியை இந்தியாவில் ஆதரித்த இரண்டே கட்சிகள் எம்.ஜி.ஆரின் அதிமுகவும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியுமே என்பது குறிப்பிடத்தக்கது.அப்போரில் இந்தியா தோற்றதும் ஒரு வரலாறு.

#மூன்று மாநிலங்களில் ஆட்சியை பிடித்த மார்க்சிஸ்ட்கள்

முதல் பொதுத்தேர்தலில் கேரளாவில் ஈ.எம்.எஸ் தலைமையில் இடதுசாரிகள் ஆட்சியை பிடித்தனர்.பின் மேற்குவங்கம், திரிபுராவில் ஆட்சியை பிடித்தனர்

#மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் (எம்.எல்)

1967-ம் ஆண்டு, மேற்கு வங்க மாநிலத்தின் டார்ஜிலிங் மாவட்டத்தைச் சேர்ந்த நக்சல்பாரி பகுதியில் எழுந்த உழவர் எழுச்சியினால் உந்தப்பட்டு ஆந்திரா, மேற்கு வங்கம், பீகார் போன்ற மாநிலங்களில் புரட்சியில் ஈடுபாடு கொண்டு 1969-ம் ஆண்டு ஏப்ரல் 22ம் தேதி மா-லெ  உருவாக்கப்பட்டது.சாரு மஜூம்தார் கட்சியின் அகில இந்தியப் பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.தமிழகத்திலிருந்து, எல் அப்புவும், ஏ எம் கோதண்டராமனும் மத்திய கமிட்டிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்
கட்சி சிறிது காலத்துக்குள்ளாகவே கடும் அடக்குமுறைகளையும், மிகப்பலத்த இழப்புகளையும் எதிர் கொண்டு நாடு முழுவதும் பின்னடைவைச் சந்தித்தது.

#கற்றதும் பெற்றதும்

தேர்தல் அரசியல் கடந்து இடதுசாரிகளிடம் பிடித்த விஷயம் எளிதில் அணுகலாம். விவாதம் செய்யலாம்.மக்களோடு மக்களாகத் தான் இருப்பார்கள்.நிரம்ப படிப்பார்கள்.படிக்காமல் அக்கட்சியில் நீண்டநாள் நீடிக்க இயலாது.அடித்தட்டு மக்களின் பிரச்சனைகளை குரல் எழுப்புவோர் அவர்களேயாவர்.இன்றும் ஜனசக்தியிலும்,தீக்கதிரிலும் வரும் கட்டுரைகள் சிந்திக்க வைக்கும். தன் கட்சியினருக்கு அனைத்து அறிவார்ந்த விஷயங்களையும் கற்பிக்க மெனக்கெடும்.

வலது,அதி தீவிர வலது என்று சென்றுகொண்டிருக்கும் காலகட்டத்தில் இடதுசாரிகளை வளர்க்க வேண்டிய கடமை நமக்குண்டு.ஆனால் அவர்கள் சுத்தமாக இல்லை எனக்கூறி நாம் அழுக்கான கையை கொண்டிருக்கிறோம்.
கம்யூனிஸ்ட்காரர்களை புறக்கணிப்பதாய் கூறி கம்யூனிசத்தை புறந்தள்ளுகிறோம். கம்யூனிசத்துக்கு அழிவில்லை அது இன்னும் பல்லாண்டு வாழும்

தொடர்ந்து வாசிப்போம்

தோழமையுடன் மணிகண்ட பிரபு

kavithai

பேசிக் கொண்டே
சிரித்துக் கொண்டே
விற்றுக் கொண்டே
வேடிக்கை பார்த்துக்கொண்டே
அநேகமாக...
உறக்கத்திலும் 
தொடுத்துக் 
கொண்டேதானிருக்கக் கூடும்-
பூக்காரியின் விரல்கள்.

-கண்மணி குணசேகரன்

Tuesday, 29 October 2019

29/10/19

எவ்வளவு முயன்றாலும்
காமிரா முன்
புன்னகை செயற்கையாகிறது
எப்படித் தவிர்த்தாலும்
கண்ணாடி முன்
புன்னகைக்கத் தோன்றுகிறது

-சுகுமாரன்


#பெண்களின் அழுகை பலவீனமாக புரிந்துகொள்ளப்படுகிறது. உண்மையில் அது கோபத்தின் வெளிப்பாடு. 'அல்லற்பட்டு ஆற்றாது அழுத கண்ணீர்' என்பது வள்ளுவர் வாக்கு. ஆண்களை போல் கோபப்பட்டு வன்முறையில் இறங்காமல் ஆற்றாமையில் அழுகிறாள் பெண்

-ஞாநி


#முளைச்சு மூணு இலை விடல" அதுக்குள்ள என்ன என அடிக்கடி கேட்டிருக்கிறோம்.

மூணு இலை கணக்கு என்பது விதை முளைத்ததும் செடி நிச்சயம் பிழைத்துவிடும் என்ற நிலை. மூணாவது இலைவிட்ட பிறகு பராமரிப்பு இருந்தால் போதும். பேரிடர் வந்தாலொழிய அழியும். இல்லையேல் நன்கு வளரும் என்பதற்கான குறியீடு


#எங்கோ ஏதோர் குழந்தை துயருறுகையில்
தம் பிள்ளைகளை இழுத்து 
அருகில் போட்டு படுத்துக்கொள்வது
ஒவ்வோர் தகப்பனின் 
ஒவ்வோர் தாயின் 
அனிச்சை
மற்றும்
எதற்கோ தேற்றிக்கொள்ளும் ஆறுதல்.

-யாத்திரி

Info


வந்தே மாதரம் என்போம்-எங்கள்
மாநிலத் தாயை வணங்குதும் என்போம்

இதில் வந்தே மாதரம் என்பது இந்திச்சொல் அல்ல வங்கச்சொல்.இதன் அர்த்தம் மாநிலத்தாயை வணங்குதும் என்போம் என்பது.மூலத்திற்கு அடுத்து அதை உரையாக பாரதி எழுதியுள்ளார்.

Tuesday, 22 October 2019

கற்றதும் பெற்றதும்-85*மணி

கற்றதும் பெற்றதும்-85
*மணி

வயது வளர வளர கோழைத்தனமும் வளர்ந்து வருகிறது..உண்மைதானே.!
 -கிருஷ்ணன் நம்பி

#கிருஷ்ணன் நம்பி கதைகள்

ஒவ்வொரு எழுத்தாளரின் கதைகளிலும் ஒரு மாஸ்டர் பீஸ் இருக்கும்.சொல்லிலோ கருத்திலோ தன் எண்ணத்தை சிறப்பாய் தெரிவித்து விடுவார்கள்.அவ்வாறு பாவண்ணனின் ஆழத்தை அறியும் பயணம் கட்டுரை தொகுப்பில் "மருமகள் வாக்கு" கதை குறித்து எழுதியிருந்தார்.
அக்கதையின் எளிமையும் நடையுமே மற்ற அவரின் எல்லா கதைகளை படிக்கத் தூண்டியது.சம்பவங்களை கோர்த்து சொல்லும் தற்காலத்திய கதை சொல்லிகளில் இருந்து நம்பியின் கதைகள் முற்றிலும் மாறுபட்டவை. கதையை படித்தவுடன் மனதில் ஏற்படும் வெறுமையை நிரப்ப கண்களும் மனதும் புற உலகை தீராத ஏக்கத்துடன் பார்க்குமே அவ்வாறுதான் இக்கதைகளை படித்தேன்.

சுந்தர ராமசாமியின் ஒத்திசைந்த இயல்பான எழுத்து நடைபோலே.. வார்த்தை சிக்கனத்துடன் படிக்கும்போதே அகஉலகில் அதை புரிய வைக்கும் மொழி இயல்பாய் கைவருகிறது நம்பிக்கு.

#நீலக்கடல்

எல்லார் வீட்டிலும் ஒரு இறப்பு ஏற்பட்டிருக்கும்.அப்போது அவ்வீட்டின் இயல்பு நமக்கு தெரிந்திருக்கும்.
அப்படித்தான் இக்கதையும்."பேரன் சங்கரனுடன் பாட்டி கூட்டாக வசித்து வருகிறாள். நீ எப்ப சாவாய் பாட்டி னு கேட்கிறான். கேட்டவுடன் பல வசைகள் வந்து விழுகின்றன.பின் ஒரு முறை விளையாடும்போது குருவி ஒன்று இறந்துவிடும்.தங்கையை சமாதானப்படுத்த அதன் கணக்கு முடிந்துவிட்டதாய் கூறுவான்.ஒரு
முறை அவனின் கடைசி தம்பி குழந்தையாய் இருக்கும்போது இறந்து விடுவான்.அப்போது இழவு வீட்டின் இயல்பை அழகாய் எழுதியிருப்பார்.மறுநாள் தன் அப்பாவிடம்.. வயதான் பாட்டி சாகாமல் குழந்தை ஏன் இறந்தது என சங்கரன் கேட்பான். இதை கேட்டுபாட்டி அழும்போது நம் மனமும் சிறிது கனக்கிறது.

குழந்தையின் மனதை மாற்ற அப்பா சினிமாவுக்கு அழைத்துச்செல்கிறார்
அதில் நீலக்கடலை பார்க்கிறான். அது அவனுக்கு கனவில் வருகிறது.
எல்லோரையும் கடலில் செம்படவன் தள்ளும்போது பாட்டியையும் தள்ளுவதாய் தெரியும். இதை காலையில் எழுந்தவுடன் குதூகலமாய் எல்லாரிடமும் சொல்ல, பாட்டி இதனை கேட்டு மூர்ச்சையாகி இறக்கிறாள்.ஓயாமல் சங்கரனும் தந்தையும் அழுகிறார்கள்.

அடுத்தநாள் இரவு சாப்பிடும்போது பாட்டி ஒவ்வொரு முறையும் கோபத்தில் 'கடலில் கொண்டு போய் போடு'என்பாள் அதை நினைவில் வைத்து அப்பாவிடம் கடலில் போடவில்லையா என்பான்.
பாட்டியின் கடைசி ஆசையை ஏன் நிறைவேற்றவில்லை என புரியாமல் அழுவான்.அப்போது கடவுளிடம் வேண்டுவான் நான் பெரியவனாகி மாலுமியாகி கப்பல் ஓட்டி பாறையில் முட்டி கடலில் மறைவேன் என. இறப்புகுறித்து என்னவென்றே அறியாத ஒரு சிறுவனின் பார்வையில்.கதை சொல்லப்பட்டிருக்கும்.

#சுதந்திரதினம்

தாய்-தகப்பன் இல்லாத பாண்டியனும் கருப்பையாவும் அண்ணன்-தம்பிகள். தாயும் தந்தையுமாகக் கருப்பையாவுக்குப் பாண்டியனே இருக்கிறான். சமைக்க மட்டும் உறவுக்கார ஆத்தாள் ஒருத்தி வந்துகூட இருக்கிறாள். ராத்திரி தம்பி தூங்கிய பிறகு கண் விழித்திருந்து தம்பிக்காக மூவர்ணக்கொடி செய்கிறான் பாண்டியன் சுதந்திரதினத்துக்காக

மறுநாள் பள்ளியில் கொடியேற்ற கலெக்டர் வருகிறார் என ஏக கெடுபிடி.தாமதமானதால் அனைவருக்கும் பசி.. உணவருந்துகின்றனர்.பாதிச் சாப்பாட்டின் போது ஹாரன் சத்தம்கேட்கும்.கலெக்டர் வருவதால்
பாதியிலேயே எழுப்பிவிடுவார்கள்.அப்போது மழை வர அனைவரும் ஓடுகிறார்கள்.சுதந்திர தினத்தின் பொருளே இதுதான் என்பது போல மெல்லிய நகைச்சுவையாய் காட்டுயிருப்பார் நம்பி.

#மாமியார் வாக்கு

ஒவ்வொரு மருமகள்களும் மாமியாருக்கு ஒரு ரேட்டிங் கொடுத்து மனதில் வைத்திருப்பார்கள். அது வெளியில் என்னதான் சாம்பிராணி போட்டாலும் உள்ளே அந்த ரேட்டிங்கிலிருந்து அம்மஞ்சல்லி கூட அங்கிட்டு நகராது. அப்படி ஒரு கதை.பத்தாண்டுக்கு முன் படித்தது இன்னும் பசுமரத்தாணி போல் மனதில் இருக்கிறது.

மீனாட்சி அம்மாள் கணவனை இழந்தவள்.ஒரே மகனுக்கு ருக்மணியை திருமணம் செய்திருப்பார்கள். வீட்டு வேலை முதல் தோட்ட வேலை, பால் கறப்பது வரை சார்ஜ் குறையாத பேட்டரியாய் உழைப்பாள். அப்போது அந்த ஊரில் தேர்தல் வரும். பூனை சின்னத்தில் பெருமாளும்,கிளிச்சின்னத்தில் வீரபாகுவும் நிற்பார்கள்.

மாமியார் பூனைக்குதான் தன் வீட்டில் அனைவரும் வாக்களிக்க வேண்டுமென சொல்லியிருப்பார். ருக்மணிக்கு கிளிச் சின்னத்தில் தான் வாக்களிக்க விருப்பம்.மாமியார் சொல்லை மீற முடிவெடுப்பாள்.
கிளி சின்னத்துக்கு ஓட்டளிக்க ஓராயிரம் முறை சொல்லிக்கொள்வாள்.
மதியத்துக்கு பின் சாவதானமாக ஓட்டளிக்க கிளம்பிச் செல்வாள்.
மாமியாரின் பேச்சை எதிர்த்து ஓட்டளிக்க அவளுக்கு விருப்பம்.அதை கற்பனை செய்து ரசிப்பாள்.ஓட்டுப்பெட்டி அருகே செல்லும்போது அவளையறியாமல் ஒரு போராட்டம் வரும்.கை தானாக பூனை சின்னத்திலேயே ஓட்டளித்துவிடும்.
வெளியில் இருந்த பெண்கள் யாருக்கு ஓட்டுப்போட்ட எனக்கேட்க அவளையறிமால் மாமியாருக்கு என்பாள்.அனைவரும் சிரிக்க.. மீண்டும் வீட்டு வேலை செய்ய ஓடுவாள். இயலாமையின் கோபம் அவளை துரத்துவதாக அவளை துரத்துவதாக வாசகனுக்கு புரிய வைத்துவிடுவார்.

#கற்றதும் பெற்றதும்

நீலக்கடல் கதையில் இறப்பை விரும்பும் பாட்டி அதைப்பற்றி சொன்னவுடன் கோபம்படும் போது ஒவ்வொரு மனிதர்களும் இவ்வுலகில் வாழ கடைசி மூச்சுவரை பேராசைப்படுவதாக எழுதியிருப்பார். சுதந்திர தினம் கதையில் அதிகாரமும் புறச்சூழலும் எவ்வாறு கீழ் தட்டு மக்களின் மேல் அதிகாரம் செலுத்துவதை உணர்த்துகிறது.

மருமகள் வாக்கு ஒவ்வொரு பெண்ணும் மாமியார் மீதான அச்சம் கலந்த பயம் அன்றிலிருந்து இன்று (ஒரு சிலருக்கு)வரை இருப்பதை காணமுடிகிறது.அவர்களிடம் காட்ட வேண்டிய அத்தனை கோபத்தையும் கணவர்கள் மீது காட்டும் மனைவியின் மனநிலைகள் இன்றுவரை மாறவில்லை.

கதை என்னை இழுக்க வேண்டும் நான் அதன் பின்னால் ஓட மாட்டேன்
எனும் அவரின் வார்த்தையில் அமைந்தவை நம்பியின் கதைகள்

தொடர்ந்து வாசிப்போம்

தோழமையுடன் மணிகண்டபிரபு

Monday, 21 October 2019

யூமா

இனி ஒண்டுவதற்கு
எதுவுமில்லாத வெற்று வீதி.
அணையாது காத்து வந்த
சிகரெட்டின் கடைசிப் புகையுடன்
மடியின் கனம் அகல
வழிப்பயமற்ற மழைப் பயணம்

-யூமா வாசுகி

அல்லாடுவது

அல்லாடுவது

அல் என்றால் இருள்.இருளில் ஒருவர் நடக்க நேர்ந்தால் தடுமாற்றமும்,
பதற்றமும் ஏற்படும். எனவே அல்லாடுபவர்கள் இந்நிலையில் இருப்பவர்கள்

Tuesday, 20 August 2019

மணி

[05/08, 6:52 am] மணிகண்ட பிரபு: No man has a good enough memory to be a successful lier

"யார் ஒருவரும் வெற்றிகரமாகப் பொய் சொல்லுகிற அளவுக்கு மிகத் தேர்ந்த நினைவாற்றல் உடையவராக இருக்க முடியாது

-லிங்கன்

[05/08, 7:05 am] மணிகண்ட பிரபு: ஆண் தெய்வங்கள் கோயில்கள் அனைத்தும் கிழக்கு நோக்கியும், பெண் தெய்வங்கள் கோயில்கள் வடக்கு நோக்கியும் இருக்கும்.

*பெண்களே அக்காலத்தில் போருக்கு தலைமை தாங்கியதால் வடக்கு நோக்கி ஆயுதமேந்தியபடி நிற்கின்றன.மூன்று திசையில் கடல் இருப்பதால் வடக்கில் இருந்துதான் பகை வந்திருக்கக்கூடும்.
அதனால் வடக்கு நோக்கி நிற்கின்றன.
காளி போன்ற தெய்வங்கள் ஆவேசமுடன் நிற்பதை காண முடிகிறது.

-தொ.பரமசிவன்

[05/08, 8:01 am] மணிகண்ட பிரபு: சிந்தனைகளில் ஈடுபாடு கொள்வது மிகப் பெரிய மனப்புரட்சி

-சுந்தர ராமசாமி

[05/08, 7:47 pm] மணிகண்ட பிரபு: ஒரு சூழ்நிலையைச் சரியாக,முழுமையாக நீங்கள் புரிந்து
கொள்வதற்கு முன்பு இருந்த
மனநிலைதான் "தன்னம்பிக்கை"

[06/08, 7:10 am] மணிகண்ட பிரபு: இட்டவி

அன்றாட உணவில் இட்லி என்பது முக்கியமானது.9ம் நூற்றாண்டை சேர்ந்த திவாகர் நிகண்டில் இட்லி என்பது இட்டவி என இருக்கிறது.இட்டு அவித்தல் என்பதை இட்டவி என்னும் சொல்லாய் வழங்கியிருக்கலாம்.

-சுப.வீ

[06/08, 7:11 am] மணிகண்ட பிரபு: வாழ்த்துக்கள் வளர்த்துமளவிற்கு தன்னம்பிக்கை கூட வளர்க்காது

*கமல்ஹாசன்

[07/08, 9:12 am] மணிகண்ட பிரபு: நீ என்பது ஒருமை
நான் என்பது தனிமை
நாம் என்பதல்லவோ இனிமை

#கலைஞர்

[08/08, 7:20 am] மணிகண்ட பிரபு: நீ கிடைத்துவிடாதே
உன்னைத் தேடுவதில்தான்
என் இருத்தல்
இருக்கிறது
-அப்துல் ரகுமான்

[08/08, 7:44 pm] மணிகண்ட பிரபு: வேறு ஏதோர் கலக்கத்தில்,
வேறு ஏதோர் மனவருத்தத்தில் இருப்பார்கள்.
ஆனாலும்
நம்மால்  காயப்பட்டுவிடவில்லை என்பதை
உறுதிசெய்து கொள்ளப் பிரயாசை கொள்கிறது-
அன்பாலே  ஆகிப்போன மனம் ஒவ்வொன்றும்.

-யாத்திரி

[08/08, 7:47 pm] மணிகண்ட பிரபு: "நானொரு பறவை; இவ்வுடல் எனது கூண்டு.
அதை அடையாளமாக வைத்துவிட்டு நான் பறந்து செல்கிறேன்..."
-
ரூமி

[09/08, 7:33 am] மணிகண்ட பிரபு: முதுமை

முதுமை
நிமிஷக் கறையான்
அரித்த ஏடு

இறந்தகாலத்தையே பாடும்
கீறல் விழுந்த இசைத்தட்டு

ஞாபகங்களின்
குப்பைக் கூடை

வியாதிகளின்
மேய்ச்சல் நிலம்

காலத்தின் குறும்பால்
'கார்ட்டூன்' ஆகிவிட்ட
மாமிச ஓவியம்

-அப்துல்ரகுமான்

[09/08, 7:43 am] மணிகண்ட பிரபு: தன் மனைவியின் பிறந்தநாளை மறந்த கணவன் இரவு வெகுநேரம் கழித்து வீடு திரும்பினான்.
மனைவி அவனிடம் என்னை 4 நாட்கள் பார்க்காவிட்டால் என்ன செய்வீர்கள் என்று கேட்டாள்.
உடனே கணவன் சந்தோஷத்தில் அவனையறியாமல் குதித்து எழுந்து ஆஹா அருமை என்றான்.

முதல் நாள்.
மனைவியை பார்க்கமுடியவில்லை.
...
இரண்டாம் நாள்.
அன்றும் மனைவியை பார்க்கமுடியவில்லை.

முன்றாம் நாள்.
அன்றும் மனைவியை பார்க்கமுடியவில்லை.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
நான்காம் நாள்.
வீக்கம் சிறிது குறைந்ததால் இடது கண்ணோரம் மனைவி சிறிது மங்கலாக தெரிந்தாள்..

😷😷😷

[09/08, 7:49 am] மணிகண்ட பிரபு: #புத்தம் புதுக் காலை..

இன்று ஆகஸ்ட் 9..
"வெள்ளையனே வெளியேறு" தினம்..!

1942 ஆம் வருடம், ஆகஸ்ட் ஒன்பதாம் தேதி அன்று, மகாத்மா காந்தி துவக்கிய இந்த வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில், லட்சக்கணக்கான மக்கள் திரண்டு ஆங்கிலேயருக்கு எதிராக போராட்டம் நடத்தினர்..
இதில் இறந்த வீரர்களுக்கு, அஞ்சலி செலுத்தும் விதமாக இந்த தினம், ஒவ்வொரு ஆண்டும் கடைப்பிடிக்கப்படுகிறது..

"Quit India.."
"வெள்ளையனே வெளியேறு.."
என்ற வார்த்தையை முதன்முதலாக பயன்படுத்தியது மகாத்மா காந்தியடிகள் என்றாலும், அது உருவான நிகழ்வு சுவாரசியமானது..

போராட்டத்திற்கு ஒரு தினம் முன்பாக, 1942 ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 8ம் தேதி அன்று, மும்பையில் கௌலியா மைதானத்தில் நடந்த காங்கிரஸ் மாநாட்டின் போது..
"Do or Die.."
"செய் அல்லது செத்துமடி.."
என்று காந்தியடிகள் தனது உரையைத் துவக்கினார்..

மறுநாள் நாடெங்கும் நடக்கவிருக்கும் போராட்டத்திற்கான, சிறந்த வாசகத்தை முன் வைக்குமாறு மகாத்மா காந்தி, போராட்டக் குழு உறுப்பினர்களைக் கேட்டுக் கொள்ள..

"Retreat..!"
"Withdraw..!"
"Get Out..!"
என்ற பல முழக்கங்களை ராஜாஜி உட்பட பலரும் கூறினர்..

அப்போது,
"யூசுப் மெஹெரெலி" என்ற அந்த 39 வயது காந்தியவாதி எழுந்து நின்று,
"Quit India.."
என்று முழங்க..
காந்தியடிகள்,
"Amen.." என்று ஆமோதித்தாராம்..!

"வெள்ளையனே வெளியேறு'
என்ற தீர்மானம் அன்று நிறைவேற்றப்பட்டது..

அதில் பேசிய
மகாத்மா காந்தி,
"In the democracy which I have envisaged, a democracy established by non-violence, there will be equal freedom for all.
Everybody will be his own master. It is to join a struggle for such democracy that I invite you today.." என்ற தனது
உரையை,
"செய் அல்லது செத்துமடி.." என்ற கோஷத்துடன் துவக்கி வைத்தார்..

"வெள்ளையனே வெளியேறு.."
என்ற வாசகம், மக்கள் மனதில் சுதந்திர வேட்கையை ஏற்படுத்தியது..

ஆகஸ்ட் 9ம் தேதி மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு, வல்லபாய் படேல் உள்ளிட்ட தலைவர்களை ஆங்கிலேயர் சிறை பிடித்தனர்..

இருப்பினும் போராட்டம் நாடு முழுவதும் தீவிரமடைந்தது..
ஆங்கிலேயரின் அடக்குமுறைக்கு பயப்படாமல் மக்கள் வீதிகளில் இறங்கி போராடினர். அறவழியில் துவங்கிய இப்போராட்டம் வன்முறையாக மாறியது. லட்சக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர்..

அதன் பின் ஐந்து ஆண்டுகள் கழிந்து, அதே ஆகஸ்ட் மாதத்தில் இந்தியா சுதந்திர நாடாக உருவானது..

"வெள்ளையனே வெளியேறு.."
இயக்கத்தின் 75 வது ஆண்டை குறிக்கும் வகையில் இன்று இந்த தினம் நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது..
நாடாளுமன்றத்தில் சிறப்புக் கூட்டத்திற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது..

#ஆகஸ்ட்புரட்சி..

#மொழிபெயர்ப்பு

-சசித்ரா தாமோதரன்
[09/08, 7:54 am] மணிகண்ட பிரபு: மனது  எல்லைகளை மட்டுமே பார்க்கும். அன்புக்கு மட்டுமே எல்லைகளை கடந்து செல்கிற ரகசிய பாதை தெரியும் .

ரூமி

படித்தது

[10/08, 11:47 am] மணிகண்ட பிரபு: கடல் பார்க்க
போயிருந்த சிறுமி  கரையில் அமர்ந்து
கைகளால் மணலை அளைந்த பொழுது
விரல்களில் சிக்கிய
பழுப்புநிற
அரைவட்ட கிளிஞ்சல் ஒன்றை வெகுநேரம்
உள்ளங்கையில் வைத்து
அழகு பாரத்த பின்

ஏதோ நினைத்தவளாய்
கடலில் வீசியெறிந்து
திரும்பினாள்,

தேடும் அலைகளின்
தேவையை தீர்த்துவைத்த
நிம்மதியில்.

-சிவசங்கரி

[10/08, 12:06 pm] மணிகண்ட பிரபு: காற்றின் வீடு

கைவிடப்பட்ட வீட்டின் உள்ளே
காற்றுதான் நுழைய துணிகிறது.
இயல்பாக தன்னந்தனியாக
சன்னல் கதவை அசைத்துக்கொண்டு
உள்ளே செல்கிறது
சுவர்களை வருடியபடி
காலியான அறைகள் தோறும்
ஒழுகிச்செல்கிறது
ஒட்டடைகள் மீது
மெல்ல ஊதி அதிரச்செய்கிறது
தரையின் குப்பைகளை அள்ளி
சுவரோரமாகக் கூட்டுகிறது.
பயனிழந்துபோன அனைத்தையும் தொட்டு
மர்மமாகச் சிரித்துக்கொள்கிறது
வெளியேறும் முன்பு
தூசுப்படலத்தின் மென்மைமீது
தன் விரல்களால்
எதையோ கிறுக்கிச் செல்கிறது

-ஜெயமோகன்

[11/08, 6:59 am] மணிகண்ட பிரபு: வாழ்க்கைத் தேர்வில்
வெற்றி பெறுகிறவர்கள்
விடைகளை அறிந்தவர்கள் இல்லை
வினாக்களை அறிந்தவர்களே
-அப்துல்ரகுமான்
[11/08, 7:02 am] மணிகண்ட பிரபு: நல்லவர்களை அடையாளம் காண ஒரு வழி?
"மாசக்கடைசியில் அவர்கள் கஷ்டப்பட்டுக்கொண்டு இருப்பார்கள்
-மதன்
[11/08, 8:29 am] மணிகண்ட பிரபு: முதலில் கம்யூனிஸ்டுகளை பிடித்துக்கொண்டு போக வந்தனர்
நான் வாயைத் திறக்கவில்லை
ஏனெனில் நான் கம்யூனிஸ்ட் அல்ல.

பிறகு அவர்கள் யூதர்களைப் பிடித்துக்கொண்டு போக வந்தனர்
நான் ஏதும் பேசவில்லை
ஏனெனில் நான் யூதன் அல்ல.

பிறகு அவர்கள் தொழிற்சங்கவாதிகளைத் தேடிக்கொண்டு வந்தனர்
நான் ஏதும் பேசவில்லை
ஏனெனில் நான் தொழிற்சங்கவாதி அல்ல.

பிறகு அவர்கள் கத்தோலிக்கர்களைத் தேடிக்கொண்டு வந்தனர்
நான் ஒரு புரொட்டஸ்டன்ட்
எனவே நான் ஏதும் பேசவில்லை.

பிறகு அவர்கள் என்னைப் பிடிக்க வந்தனர்
அப்போது எனக்காகப் பேசுவதற்கு யாருமே இல்லை.

- மார்ட்டின் நீய்மொல்லர்

[12/08, 7:42 am] மணிகண்ட பிரபு: இந்த உலகம் காலந்தோறும் குழந்தையைப் போன்ற வெகுளித்தனம் கொண்ட மனிதர்களால் மட்டுமே பாதுகாக்கப்படுகிறது.

ஓஷோ

[12/08, 7:46 am] மணிகண்ட பிரபு: எங்கள் ஊர் யானைகள்
பத்து பைசாவுக்காக
எவரெவர் காலிலோ விழுகின்றன

- மு. சுயம்புலிங்கம்
(யானைகள் தினம்)

[12/08, 7:51 am] மணிகண்ட பிரபு: சென்னையில் மிகப்பெரிய கட்டுமான நிபுணராக விளங்கிய நம்பெருமாள் செட்டியார் வாழ்ந்த பகுதி "செட்டியார் பேட்டை" என அழைக்கப்பட்டது. பின்னாளில் அது "சேத்துப்பட்டு" என மாறியது-p

#Info

[12/08, 8:03 am] மணிகண்ட பிரபு: பகிரப்படாத நேசத்தின்
துயரென்னைத் தின்கிறது
தனக்குத்தானே கட்டிக்கொண்ட
கைகளின் தனிமை போல

-தமிழச்சி

[12/08, 1:59 pm] மணிகண்ட பிரபு:

You know
you've read a good book
when you turn the last page
and feel a little
as if you have lost a friend ...
-Paul Sweeney -

[13/08, 6:54 am] மணிகண்ட பிரபு:

இருட்டு எனும் சுகம் நிம்மதி. தூங்கிவிட்டால் போதும் பதிலற்ற கேள்விகள் அப்படியே இருளில் ஆழ்ந்து போகும்

-ஜெமோ

[13/08, 7:34 pm] மணிகண்ட பிரபு: பேருந்து பயணம்பற்றி
-லா.ச.ரா வின் காட்சி

இந்தக்காலத்தில் பஸ்ஸில் போவதென்றால் என்ன என்று தெரியுமா..

ஒவ்வொரு வண்டியும் ஒரு மகாமக உற்சவம்-சினிமாக் கொட்டகையின் புதுப்படத்தின் முதல்நாள் கூட்டம். உள்ளே புகுவதே பிரயாசை-புகுந்து தோல்வாரைப் பிடித்துத் தொங்க இடம் கிடைப்பதே துர்லபம். உட்கார இடம் கிடைத்தால்.. அடேயப்பா!

முறைத்துப் பார்க்கும் எண்ணத்துடனேயே,ஓர் ஆளை உன்னிப்பாய் பார்ப்பார்கள்.
ஒவ்வொருவர் மனதிலும் எத்தனையோ குருட்டு யோசனைகள்.

[14/08, 7:56 am] மணிகண்ட பிரபு: மனிதர்கள் எப்போது சிந்திக்கிறார்கள்?

தேர்தலுக்குப் பிறகு

-சோ

[14/08, 7:05 pm] மணிகண்ட பிரபு: பக்குவம் என்பது நாமே இறங்கி, அனுபவித்து,அடிபட்டு கற்றுக்கொள்வதல்ல.. ஒவ்வொரு விசயத்திலும் மற்றவர்கள் என்னென்ன அனுபவிக்கிறார்கள்,அடிபடுகிறார்கள் என வெளியிலிருந்தே கண்டுணர்ந்து அதில் நாம் இறங்காமலே கற்றுக்கொள்வது.

கு. விநாயக மூர்த்தி.
[14/08, 7:48 pm] மணிகண்ட பிரபு: வரலாறு என்பது துரோகத்தின் மிச்சம்
வாழ்க்கை என்பது துயரத்தின் மிச்சம்

-நாஞ்சில் நாடன்

படித்தது

[15/08, 7:57 am] மணிகண்ட பிரபு: செயலில் உயிர்பெறாத சொல்
குறைந்த பட்சம்..
வயதுக்கு வராத கிழவி!
அதிகபட்சம்..
புதைக்க இடம் கிடைக்காத பிணம்!

-வலம்புரி ஜான்

[15/08, 1:05 pm] மணிகண்ட பிரபு: சுதந்திரம் நாம் பெற்றுவிட்டோம், இனி எந்த தவறு செய்தாலும் ஆங்கிலேயர் மீது பழி போட முடியாது
#ஜனாதிபதி ராதாகிருஷ்ணனின் சுதந்திர உரை

[16/08, 7:16 am] மணிகண்ட பிரபு: மூவேந்தர் கொடி தொடங்கி,
மூவர்ணக் கொடி வரையில்
எல்லாக் கொடிகளும் பறப்பது'
எந்த நூலில்?

பூணூலில்!

-இன்குலாப்

[16/08, 7:17 am] மணிகண்ட பிரபு: எது வேரில் கசக்கிறதோ
எது இலையில் துவர்க்கிறதோ
அதுவே கனியில் இனிப்பாகிறது

-ஜெயமோகன்

[16/08, 7:22 am] மணிகண்ட பிரபு: மழைதான் பெய்கிற நேரத்தை அழகாக தேர்ந்தெடுத்துக் கொள்கிறது

-வண்ணதாசன்

[17/08, 10:37 am] மணிகண்ட பிரபு: ஒரு நிமிடத்திற்கு யாரேனும்
அறுபது நொடியென்றால்
நம்பவே முடிவதில்லை இப்போது.

ஒரு நிமிடத்தை
ஒரு நிமிடமாய்
இருக்கவிட்டதில்லை
எப்போதும் நாம்.

-படித்தது

[19/08, 7:08 am] மணிகண்ட பிரபு: தனிமனித வழிபாடு மந்தைக் கூட்டத்தை உருவாக்குமே தவிர சிந்தனைவாதிகளை உருவாக்காது

-படித்தது

[19/08, 7:12 am] மணிகண்ட பிரபு: நிராகரிக்கப்பட்டவர்களால்தான்
உலகம் இயல்பாக
இயங்கிக்கொண்டிருக்கிறது
ஆசிர்வதிக்கப்பட்டவர்களால் அல்ல

-சௌவி

[20/08, 7:06 am] மணிகண்ட பிரபு: நெடுங்குகை இருளுக்குள்
முடிவற்றுப் போய்க் கொண்டிருக்கிறான்
ஓடும் ரயிலில்
புல்லாங்குழல் வாசிக்கும்
கண் தெரியாத இசைஞன்

-கலாப்ரியா

[20/08, 8:50 pm] மணிகண்ட பிரபு: சில சமயம் இரவில் கண்விழிக்கும்போது,
அதிசயமாய்ப் போதை தெளிந்து,மிகத் துல்லியமான ஒரு மனநிலை ஏற்படும். முன்னும் பின்னும் மனம் பெண்டுலம் போல அசையும்.அந்தக் கணம் வரை செய்துவந்தவை முழுக்க எப்பேற்பட்ட அற்பத்தனங்கள் என்று மனம் திடுக்கிடும்.அந்த அற்பத்தனங்களுக்காய் உள்ளூறத் தன் மனம் வெட்கிச் சுருண்டு கொள்வது தெளிவாய் தெரியும்

-ஜெயமோகன்

Saturday, 22 June 2019

மணி

[19/06, 5:49 pm] Mani: சிந்திப்பது படைப்பதற்கே.
அதைத்தவிர வேறு படைப்பேதுமில்லை.ஆனால் முதலாவதாக படைத்தல் என்பது சிந்தனையில் சிந்திப்பதை தோற்றுவிப்பதே."

-டெல்யுஸ்
[19/06, 6:09 pm] Mani:

தற்போது ஓரமாய்
நடுரோட்டில்
நசுங்கிய நாய்.

-துரை.நந்தகுமார்
[19/06, 9:41 pm] Mani:

பகிரப்படாத நேசத்தின்
துயரென்னைத் தின்கிறது
தனக்குத்தானே கட்டிக்கொண்ட
கைகளின் தனிமை போல

-தமிழச்சி தங்கப்பாண்டியன்
[20/06, 7:18 am] Mani:


பொருளுக்கு இரையாகுபவன் உண்மைப் பொருளைக் காணமாட்டான். அதுவே எல்லா வகை மயக்கத்திற்கும் அடிப்படைக் காரணம்.இதுதான் முதலாளியம் வளர்த்த பெரும் மயக்கம

-கார்ல் மார்க்ஸ்
[20/06, 7:54 am] Mani:



வேண்டாத எண்ணங்கள் மனதில் அடையாத வரை
எல்லா காலமும் சிறப்பானதே
எல்லா மனிதர்களும் மகிழ்ச்சியானவர்களே.!

-ஜப்பானிய கவிதை
[20/06, 7:12 pm] Mani:


அ வுக்கு முந்திய எழுத்துக்கள் இல்லையெனினும், அ எழுதப்பழகிய என் கிறுக்கல்களெல்லாம்,அ வுக்கு முந்திய எழுத்துக்களே

-தபூசங்கர்
[21/06, 6:59 am] Mani:

'கொஞ்சமாகத் தெரிந்துகொண்டிருக்கும்போது தெரிந்து கொண்டுவிட்டோம் என்றும், அதிமாகத் தெரிந்துகொள்ள முற்படும்போது தெரிந்துகொள்ளவில்லை என்ற எண்ணமும் ஏற்படுகிறது. ஒரு கதவு திறக்கும்போது திறக்காத பல கதவுகள் தெரியும் விசித்திரக் கோட்டை இது. அவற்றையும் திறக்கும்போது மேலும் பல கதவுகள் மூடிக்கிடப்பதை பார்க்கிறோம். அப்படியானால் இதற்கு முடிவு என்ன ? திறப்பதே திறக்காத கதவுகளை பார்க்கத்தானா ? பெரிய சவால்தான் இது'.

-சுந்தரராமசாமி
ஜே.ஜே. சில குறிப்புகள்

மணி

சிறகு பறந்து செல்லும் திசையெல்லாம் சுதந்திரம்

-பிரமிள்.

ஒரு மனிதனுக்கு இன்றைய நாளைக்காட்டிலும் மிஞ்சுவது வேறெதுவும் இல்லை
-ஜி.நாகராஜன்

கடன் வாங்கி கழித்தல் கணக்கை பள்ளியிலிருந்து செய்கிறோம்.இதில் பக்கத்து எண்ணிலிருந்து கடன் வாங்க கற்பிக்கப்படுகிறோம்.வாங்கிய கடனுக்கு இந்த எண் அந்த எண்ணுக்கு திருப்பிக் கொடுத்ததா என்றால் இல்லை.

ஆனால் சீனாவில் அந்தக் கணக்குகளுக்கு கடன் வாங்கிக்கழித்தல் எனும் பெயர் இல்லை.இங்கே குறைவாக இருக்கிறது.அங்கு தேவைக்கு மேல் கூடுதலாக இருக்கிறது. எனவே அங்கே இருந்து எடுத்துக்கொள்ளுங்கள் என சொல்லிக்கொடுக்கிறார்களாம்

-படித்ததில் ரசித்தது
-மணி

உருவத்தில் நின்று உருவமற்றதை காண்பதே இன்பம்.. சொல்லை மந்திரம் என்பார்கள்.சொல்லைக் கொண்டே சொல்லற்ற நிலையைக் காட்ட முயல்வதுதான் இலக்கியம்.

-ந.பிச்சமூர்த்தி

1G-ஒருவர் பேசி முடித்தவுடன் பேசுவது-உ.ம் வாக்கி டாக்கி

வேகம்:2.4 முதல் 14.4 kbps 

1980-அமெரிக்காவில் அறிமுகம்

2G-இருவர் பேசுசது-மொபைல்போன்

பின்லாந்தில் 1991 ல் அறிமுகம்

3G-முகம் பார்த்து பேசுவது-வீடியோ கால்

2001-ஜப்பானில் அறிமுகம்

4G-இணைய வேகம் அதிகம்.நொடிக்கு 100 மெகா பைட் வேகம்.

2009-ம் ஆண்டு தென்கொரியாவில் அறிமுகம்

5G-இணைய வேகம் 4ஜியை விட அதிகம்.

2022 ல் இந்தியாவுக்கு முழுவதும் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது

மணி

நம்முடைய
கூலிங் கிளாஸை
எடுத்து அணியும் போதும்

நம்முடைய                 

செருப்பை அணிந்து
நடை பயிலும் போதும்

நம்முடைய
சட்டையை எடுத்து
மாட்டிக்கொள்ளும் போதும்
                                                                                     

நாமாக மாற
முயற்சிக்கிறது குழந்தை.

அதை ரசிக்கும்
பொழுதுகளில்
குழந்தையாக
மாறி விடுகிறோம்
நாம்..!”
                  -  ந. சிவநேசன்.




கரிய பெரிய மேகம் ஒன்று திங்களை விழுங்கி இறுமாந்து நிற்கிறது.அந்த ஏழைத்திங்கள் அந்நிலையிலும் தன்னாலான ஒளியை உலகிற்கு அளிக்கவே செய்கிறது

-மு.வ

கற்றதும்பெற்றதும்-74



கற்றதும் பெற்றதும்-74

*மணி

"எனக்கென்னவோ ஊர் என்பது மனிதர்கள் மூலமாகவும் மனிதர்கள் என்பவர்கள் தங்களது பேச்சு மூலமாகவுமே பளிச்பளிச்சென்று அடையாளம் காட்டிக்கொள்வது போலவும் தோன்றுகிறது.

-வண்ணதாசன்

(சில வாழைமரங்கள்)

"சமீபத்தில் என் நண்பருடன் உரையாடிக்கொண்டிருக்கும் போது

ரசனை குறித்த விவாதமாய் மாறியது.மிஷினையும் மனிதனையும் வேறுபடுத்துவது ரசனைகளே.சின்ன விஷயங்களை ரசிக்காமலும் பிரம்மிக்காமலும் இருக்கும்போது மனம் மிருகமாய் கொஞ்சம் கொஞ்சம் மாறுகிறது.பொறுமையும் அன்பும் மறைந்து எதிர்படும் மனிதர்களை நேசிக்காமல் கடந்துவிடுகிறோம். வண்ணதாசன் காட்டும் ரசனை நயம்.அலாதியானது.அதை நினைத்து பயணம் செய்தாலே மனம் புனிதமடைகிறது.

சகமனிதர்களை கவனித்து அவர்களை உள்வாங்கி கவனிப்பது தவறி வருகிறோம் .இதனால் என்ன இலாபம் என கேட்கும் வியாபார மூளை வந்த பிறகு எதிரில் வருபவன் எப்போதும் ஒரு பிண்டமாகத்தான் தெரிவான். மிஷின் யுகத்தில் நாமும் ஒரு மிஷினாக மாறியதை உணர நீண்ட காலம் ஆகும்.மனிதன் ரசிப்பு தன்மையை உணர வைப்பதில் வண்ணதாசன் எழுத்துக்கு ஆற்றலுண்டு. 

#ஈரம்

கதை முழுவதும் எழுத்துகளில் ஈரம் இருந்துகொண்டே இருக்கும்.பக்கத்து வீட்டில் போர் போடும்போது அந்த வீட்டுத்தலைவன் முதலில் பீய்ச்சி வரும் தண்ணீரை எடுப்பான்.அந்த ஈரம் தான் கதை.

தன் மதனி (அண்ணி)வீட்டுக்கு செல்லும் காட்சி..முதல் பத்தி ஆரம்பிக்கும்..

" போன வருடம் இதே மாதிரி ஒரு சனிக்கிழமை மத்தியானம் நான் போயிருந்தேன். அன்றைக்கும் மதனி பாக்கு கலர் சேலை கட்டியிருந்தாள். அப்போதுதான் கதவை சாத்தி இருப்பார்கள் போல கையிலே வைத்திருந்த உடுமாத்து துணி தோளில் போட்டுக் கொண்டு வந்தார்கள்.இப்பதான் வர்றியா என்று கேட்ட முகத்தில் சிரிப்பு எப்படி. இப்படி சிரித்துக்கொண்டே இருக்க முடிகிறது மதனிக்கு என்று தெரியவில்லை. தலைக்கு எண்ணெய் தேய்த்த கையை கடைசியில் முகத்தில் பூசிக் கொள்வது போல் லேசான எண்ணெய் பசை இருக்கிற அந்த முகத்தில், இன்ன இடம் என்று சொல்ல முடியாமல், எல்லா இடத்திலும் அந்தச் சிரிப்பு தெரியும்"

இவ்வாறு ஒரு பத்தியை துவங்கினால் யார்தான் அக்கதையில் பங்குகொள்ளாமல் அடுத்த பக்கம் விலகிப்போவார்கள்.அந்த வீட்டிற்கே கைபிடித்து அழைத்துச் செல்கிறது.

#அச்சிட்டு வெளியிடுபவர்

கோமு அக்காவுக்கு சாகிற வயசா னு கேட்டு பஸ் ஸ்டாப்பிலிருந்து நகர்கிற ராமையாவின் பார்வையில் விரியும் கதை.இறந்த அக்காவின் வீட்டின் வெளியிலிருந்து வழக்கம்போல்.சிறுவயதில் அழைத்தது போல் கோமு அக்கானு கூப்பிடுவார்.உள்ளே குழந்தையின் அழுகுரல் கேட்கும்.நேரில் வாழ்வதை விட சிறந்தது நினைவில் வாழ்வது போல திரும்பிச்செல்வான்.கனத்த இதயத்துடன்..

சின்ன வயசில் நம் தெருவிலும் கோமு அக்கா போல் அழகான யுவதிக்கு எஸ் கார்டா போவோம். நம்மிடம் சிரித்து பேசும்போது நம்மைதான் விரும்புறாங்கனு நெனைப்போம்.அதான் ஆண்களுக்கான first love failure.நம்ம றெக்க படத்தில வரும் இளம் விஜய் சேதுபதி மாதிரி.

#அரசமரம்

இருபிள்ளைகளின் வீட்டில் இரு மாதம் தங்கிவரும் அப்பாவை நாகலிங்கம் எனும் உறவினர் சந்தித்து என் வீட்டிலும் இரு மாதம் தங்கு என கைப்பிடித்து இழுத்துப்போவது கதை.அப்போது அவர் கையைப் பிடித்து இழுப்பார்.

 "சமீபத்தில் யாருமே இப்படி தன் கையை பிடிக்காததும், காய்ப்பும் சொர சொரப்பும் நிறைந்த இன்னொரு ஆணின் கைகள் இவ்வளவு ஆதரவுடன் எளிய பரிவுடன் பட்டும் படாமலும் தனக்கு உதவ முன்வந்து ரொம்ப காலம் ஆகிவிட்டது என்பதை உணர உணர அவருக்கு அழுகிற நிலைக்கு வந்துவிட்டிருந்தார்.

வீடு வீடாக மாறி தங்கும் முதிர்ந்த வயதில் ஏற்படும் கூச்ச உணர்வை மிக அழகாய் உணர்த்தியிருப்பார்.

#சில வாழைமரங்கள்

ஊர் ஞாபகம் வந்தால் தன் ஊர்க்காரரை தேடிச்சென்று பேசுவது ஊருக்கே போய்விட்டு வந்த சுகம்.அப்படித்தான் சைலப்பன் வீட்டுக்கு சென்று அலவலாகி வருகிறார் இக்கதையில்.நகரத்து வாழ்வின் அவசரத்தில் சொந்த ஊர் பற்றி பேசுவதே சுகம்தான்.

அப்போது வீட்டிலிருந்த 

தங்கம்மை அத்தையை பார்க்கத்தோன்றியது.குரல் மட்டும் கேட்டது அடுப்படியில்..அது வாழைமரத்தை தொட்ட மாதிரி இருந்ததாக சொல்லியிருப்பார்.

#கற்றதும் பெற்றதும்

கதை இருக்கா..ஜெட் வேகத்தில் ஓடும் உலகில் ஈரச்சாக்கை வெறும் காலில் மிதித்த பாதம் உணரும் குளுமை போல் வண்ணதாசனின் எழுத்துக்கள். இவரின் மொழிநடை அபாரமானது. இயல்பாய் எழும் காலடி ஓசையை போல மென்மையானது.அவசர உலகில் நாம் கவனியாது விட்ட எல்லாவற்றையும் அவர் கவனப்படுத்துகிறார்.வண்ணதாசனின் கதைகளை படிக்க படிக்க நாம் மென்மையாகவே மாறிவிடுகிறோம். மேலும், எதிர்படும் மனிதர்களை நேசிக்கவும் புரிந்து கொள்ளவும் தொடங்கிவிடுவோம். ஜிமிக்கி அணிந்த பெண் அதற்கு வெல்ட் வைத்தது போல் தலையாட்டாமல் அமர்ந்திருப்பது ஜிமிக்கிற்கு செய்யும் துரோகம்.அதற்கு அவள் கல் கம்மலோ மொட்டுக்கம்மலோ கூட அணிந்து கொள்ளலாம்.

#ரசித்தவை

*கடுகை இப்படிக்கொட்டி,அகலமாக விரலால் பரப்பி விடும்போது விரல்களின் கீழே கடுகுகள் உருள்வது நன்றாக இருக்கும். 

*இன்னைக்கு என்ன சொல்லப்போகிறாளோ தெரியவில்லை.என்ன சொல்லப்போகிறோம் என்று முன்தீர்மானம் செய்யாமல் அவ்வப்போது தோன்றுகிறதைச் சொல்லும்போதுதான் நன்றாக இருக்கும்.

* அழகு என்றால் என்ன? தன்னைப் போலவே இன்னொன்றை ஞாபகப்படுத்த வேண்டும். அப்படி உண்டாக்குகிற ஞாபகங்களின் அடுக்குகள் முடிவற்றதாகிப் பெருகவேண்டும். பெருக்கத்தின் தளம்பல் அற்ற நிலையில்- கிணற்றில் மிதக்கிற புளிய இலை மாதிரி- தானும் அசையாமல் இருந்து நம்மையும் அசையாமல் இருக்கப் பண்ண வேண்டும்

*சிலரை பார்த்த உடனேயே அவரைப்போல் பேச வேண்டும், நடக்க வேண்டும் எனத் தோன்றுவிடுகிறது.

*இன்னொரு முகத்தை ஞாபகப்படுத்தாத முகம் என்ன முகம்?சிரிப்பு என்ன சிரிப்பு?

*நிஜத்துக்கு பயப்பட்டு என்ன ஆகப் போகுது?

*ஒரு புத்தம் புதிய தீப்பெட்டி

வாங்கி.ஒரே ஒரு குச்சியையாவது உபயோகித்து இருப்பார்களோ என்னவோ. தவறிக் கீழே விழுந்து இருக்கவேண்டும். நறுக்கி வைத்தது மாதிரி, ஒரே சீராகவும் நெருக்கமான அடுக்குக இருந்த தீப்பெட்டியை மூடி, ஒரு தடவைக்கு இரண்டு தடவை குலுக்கிப் பார்த்தார்.கைக்கு அடங்கின அந்தக் கனமும்,குலுக்கின போது ஏற்பட்ட சத்தமும் அவருக்குப் பிடித்து இருந்தன.

தொடர்ந்து வாசிப்போம்

தோழமையுடன் மணிகண்ட பிரபு