#Reading_Marathon2026
#26RM009
Book No:33/150+
Pages:-318
ஒரு துறவியைப் போல் சிந்தியுங்கள்
-ஜே ஷெட்டி
சுயமுன்னேற்ற நூல்களின் வெற்றியே அறியாத தகவல்களை ஜெயித்தவர்களின் கதையை, உளவியல் பார்வையை பயிலும் போது ஏதேனும் ஒரு தருணத்தில் ஏதேனும் ஒரு கருத்தில் ஒன்றி விடுகிறோம்.பலரின் அனுபவங்கள் மேற்கோள்கள் படிக்க சுவாரஸ்யமளிப்பவை. மூன்று பகுதிகளா இப்புத்தகம் பகுக்கப்பட்டுள்ளது. முதலாவதாக விட்டுத்தள்ளுங்கள் பகுதி.
'துறவிகளைப் போல் ஏன் சிந்திக்க வேண்டும்? எனும் கேள்வியை வலியுறுத்தி வாழ்வை பார்ப்பதற்கான அணுகுமுறையை அதற்கான பதிலைத் தருகிறது.
இப்புத்தகத்தை பார்த்தவுடன் ஆசிரியர் யாரையும் துறவி ஆகச் சொல்லவில்லை. இன்றைய வாழ்க்கைச் சூழலில் துறவு மனம் ஏன் தேவைப்படுகிறது என்பதை விவரிக்கிறார்.கவனச் சிதறல் இக்காலத்தில் இருக்கும் மக்களுக்கு இருக்கும்.பெரும்குறை. இதை களைவதற்கான பயிற்சிகளை சொல்கிறார்.இதன்மூலம் ஆற்றல் அதிகரித்து நிகல்கணத்தில் கவனத்தை குவிக்க உதவுகிறது.
மனநிறைவான வாழ்க்கையே கவனச்சிதறல்களை திசை திருப்பதிலிருந்து காக்கிறது.
#வளருங்கள்
ஒரு தலை சிறந்த மனிதன் எதைச் செய்தாலும் அதைச் சாமானிய மனிதர்கள் பின்பற்றுவார்கள் எனும் கருத்தை சொல்லி கற்றுக் கொள்வதன் மூலம் வளர்வதற்கான சிந்தனைகளை சொல்கிறார். அகத்துக்குள் செய்யும் பயணம் நம்.வளர்ச்சிக்கு உதவுகிறது. வளர்ச்சிக்கான பாதை என்பது பலங்களை வளர்ப்பதில் அல்ல, பலவீனங்களை கண்டறிவதில் தான்.
ஒரு செயல் அல்லது ஒரு திறன் நம்க்கு வரவில்லையெனில் விட்டுவிடுகிறோம்.நமது அனுபவமின்மையை பலவீனத்திடன் ஒப்பிடாமல், பலப்படுத்த முயற்சி செய்ய வேண்டும்.
துறவு என்பது வாழ்நிலை மட்டுமல்ல, மனநிலையும் கூட. இருப்பது அனைத்தையும் துறக்கும் எண்ணம் வேண்டும். ஆசை இல்லாத தூய வாழ்வு.மனித மனம் ஒன்றிலிருந்து மற்றொன்றிற்கு ஓடுகிறது. நிலையாக இருப்பதில்லை.இதற்கு துறவு மனப்பான்மை உதவுகிறது. பற்றே வேதனை என்றார் புத்தர். எதிர்பார்ப்புகளே பல ஏமாற்றங்களுக்கும் காரணம். இந்த எதிர்பார்ப்பு மனம் ஏற்படுத்திய ஒன்றுதான். அதிலிருந்து முதலில் அகவிடுதலை கிடைக்கும்போது நிம்மதி கிடைக்கிறது.
தீங்கு விளைவிக்கும் செயல்களை எண்ணுவதை துறவு மனம் தடுக்கிறது.எதிர்மறை சிந்தனைகளை கைவிடுதல்.
அந்த வெற்றிடத்தில் நல்ல சிந்தனைகளை துளிர்க்கச் செய்கிறது.நிகழ்காலத்தில் வாழ அனுபவிக்க கற்றுக் கொடுகிறது. பயத்தை கையாளும் திறன் வாய்க்கும் போது தான் புரிதலுக்கான கதவுகள் திறக்கப்படுகின்றன. மகிழ்ச்சி என்பதை ஏதோ ஏழுகடலுக்கு அப்பால்.உள்ளது போல் நினைகிறோம். அதனை துரத்துகிறொம். இறுக்கமான வாழ்க்கைச் சூழலில் நமது ஓய்வு நேரத்தில் நாம் என்ன செய்கிறோம் என்பது, நாம் எதற்கு மதிப்பளிக்கிறோம் என்பதைக் காட்டுகிறது. நோக்கத்துடன் வாழ்தல் என்பது புற இலக்குகளை புறந்தள்ளிவிட்டு, உள்.நோக்கிப் பார்ப்பதாகும்.
துறவியின் முக்கிய செயல்களில் ஒன்று நேரம். அதிகாலை எழுவது, ஒரு முழுநாளையும் நோக்கத்துடன் செலவழிக்கத் தயார்படுத்திக் கொள்வது, திட்டமிட்டபடி செயல்களை செய்வது,நிகழ்காலத்தில் வாழ்வது என நேரத்தை அவர்களின் வாழ்க்கைக்கு ஏற்றாற்போல் வசமாக்கிக் கொள்கின்றார்.நேரத்திற்கு நினைவாற்றல் உண்டு.தினசரி அதனை செய்யும்போது அப்பழக்கம் வழக்கமாகி விடுகிறது.
ஒரு புகழ்பெற்ற வயலின் கலைஞர் மக்கள் அதிகம் பயணிக்கும் ஒரு ரயில் நிலையம் அருகில் சிறந்த இசையை வாசிக்கிறார்.ஆனால் 30டாலர் மட்டும் பெறுகிறார். முந்தைய நாள் வேறு ஊரில் 100 டாலர் சம்பாதித்தார்.ரசிக்காமல் செல்ல பல காரணங்கள் இருக்கலாம். ஆனால் அவர் திறமைசாலி இல்லை என ஆகிவிடாது. மக்களை பாராட்டும் போது குளிர்விப்பதற்காக பாராட்டுகிறார்கள் எம சந்தேகம் கொள்கின்றனர். ஒருவரும் பாராட்டவில்லையெனில் ஏங்குகின்றனர்.ஆகவே எண்ணங்களில் தெளிவு நமக்கு வேண்டும் என்கிறார்.
ஒவ்வொன்றுக்கும் உவமையாக குரங்கினை சொல்கிறர். அதன மூலம் மனம் பற்றிய கண்ணோட்டத்தை கூறுகிறார்.
ரோமானியர்களிடம் போரை வென்று வரும் தளபதியின் காதில் நீங்கள் ஒரு சாதாரண மனிதர் என்று ஒருவர் காதில் கூற வேண்டும். அதன் மூலம் தான் பெரிய சாதனை செய்யவில்லை என நினைக்குமாறு செய்வார்களாம்.பணிவுக்கான பாதையில் தலைக்கனம் இருக்க கூடாது என்கிறது துறவு.
#கொடுங்கள்
நன்றியுணர்வை வளர்க்க வேண்டியதின் அவசியத்தை கூறுகிறார்.நாம் நேர்மறை எண்ணங்களை மனதில் உருவாக்க நன்றியுணர்வு அவசியம்.துறவிகளின் முக்கிய விசயமாக இதனை பகிர்கிறார்.
கோப்பையில் உப்பிட்டால் உவர்க்கும். அதுவே ஏரியில் இட்டால் சுவை தெரியாது. உன்னுடைய உணர்வுகளை விசாலமாக்கிகொள் என வலியுறுத்துகிறார்.
*அன்பு கிடைக்காதது போல் உணரும்போது, எதையும் எதிர்பார்க்காமல் நமக்குக் கொடுப்பவர் யார் என்று சிந்திக்குமாறு அவர் நம்மிடம் கூறுகிறார்
*கைவிடுதல் நமக்கு விடுதலையைத் தருகிறது, மகிழ்ச்சிக்கு விடுதலை மட்டுமே ஒரே நிபந்தனை. நம் இதயத்தில் கோபம், கவலை அல்லது உடைமைகள் என எதையேனும் நாம் இன்னும் பற்றிக்கொண்டிருந்தால், நம்மால் விடுதலை அடைய முடியாது.
*உங்களுடைய நேரம்.குறுகியது. வேறொருவருடைய வாழ்க்கையை வாழ அதை வீணாக்கிவிடாதீர்கள்
*ஒவ்வொரு நாளும் கண் விழிக்கும்போது, 'இன்று நான் உயிரோடு இருப்பதற்குப் பாக்கியம் செய்திருக்கிறேன், எனக்குக் கிடைத்திருப்பது ஒரு விலைமதிப்பற்ற மனித உயிர், நான் அதை வீணாக்கப் போவதில்லை' என்று எண்ணுங்கள்-தலாய் லாமா
அமைதி மற்றும் நோக்கத்தை அடைவதற்கு எல்லோருக்கும் ஏற்றப் பாதை என்ற ஒன்று கிடையாது. நம்முடைய சொந்த வழியில், நமக்கு ஏற்ற ஒரு வேகத்தில் சென்று, வாழ்க்கையில் நமக்கு என்ன வேண்டுமோ அதில் நம் கவனத்தைக் குவிப்பதன் மூலம் மட்டுமே அதை நம்மால் அடைய முடியும்.துறவு என்பது வெறுமனே அமர்ந்துருப்பது மட்டுமனறு மனமதை செம்மையாக்கும் முயற்சி. இன்றைய அவசர உலகில மனதை செம்மையாக்கவே நாம் முயல வேண்டும்.
தொடர்ந்து வாசிப்போம்
தோழமையுடன் மணிகண்டபிரபு
No comments:
Post a Comment