கைப்புண்ணுக்குக் கண்ணாடி தேவையா?’ கழுத்திலோ, காதிலோ, தலையிலோ ஆபரணங்களைப் பூண்டால், அவற்றை அணிந்துகொள்கிறவர்கள் கண்ணாடியின் உதவியோடுதான் அவற்றைப் பார்க்க முடியும். ஆனால், மோதிரம், வளையல் போன்ற ஆபரணங்களைக் கையிலே பூணும்போது, கண்ணாடியின் உதவியின்றியே அவற்றைப் பார்க்கலாம். இதைத்தான் ‘கைப்பூணுக்குக் கண்ணாடி தேவையா?’ என்று சொன்னார்கள். நாம் ‘பூண்’ என்பதைப் புண்ணாக்கிவிட்டோம்!-ரவிஷங்கர்
No comments:
Post a Comment