டார்வின் ஸ்கூல்
-ஆயிஷா இரா நடராசன்
தமிழ் சிறார் இலக்கியத்தில் அறிவியலையும் சுவாரஸ்யமான கதை சொல்லலையும் இணைத்துப் படைப்பதில் குறிப்பிடத்தக்கவர் எழுத்தாளர் ஆயிஷா இரா. நடராசன். குழந்தைகளிடம் அறிவியல் ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையில் பல படைப்புகளை உருவாக்கியுள்ள அவர், எளிய மொழியில் ஆழமான சிந்தனைகளை முன்வைப்பவர். அந்த வகையில் ‘டார்வின் ஸ்கூல்’ குறிப்பிடத்தக்க நூலாகும்.
டார்வின் என்ற பெயர் கேட்டவுடன் நினைவுக்கு வரும்போது பரிணாம வளர்ச்சியும் உயிரினங்களின் தோற்றமும்.கதையின் நாயகனான ரோச் பீட்டர் எனும் சிறுவனின் மூளைக்குள் விலங்குகளின் மொழியைப் புரிந்து கொள்ளும் மைக்ரோ சிப் ஒன்றை அவரின் அப்பா பொருத்தியதால்..எல்லா விலங்குகளின் மொழியும் அவனுக்குப் புரிகிறது.
மாரி எனும் ஆந்தையுடன் ரோச் பீட்டர் விலங்குகள் படிக்கும்.பள்ளியை அறிகிறான். அதனை பார்க்க ஆவல் கொள்கிறான்.மாரியின் உதவியிடன் அங்கு செல்கிறான்.பாரதி எனும் முயல் உடன் வருகிறது.அது அடிக்கடி கவிதை பாடுகிறது.ஆனால் சிறிது நேரத்தில் மாரி, பாரதி,ஆர்.பி மோப்ப சக்தி நாய் ஆகியோர் தொலைந்து விடுகின்றனர்.பெரும் ஒளி அவனை நோக்கி வருகிறது.மின்மினி ஒளி என தெரிகிறது.
ஒவ்வொரு விலங்கின் உதவியுடன் நண்பர்களை தேடும்போது ஒவ்வொரு உயிரினங்களின் அமைப்பை அறிந்து கொள்கிறான்.வெளவால்களின் பதிலகள் தலைகீழாக எழுத்துக்கள் அமைந்தது நாமும் காட்டிற்குள் இருக்கும் உணர்வை தருகிறது.
உணவு சங்கிலியின் முக்கியத்துவம் கூறப்பட்டுள்ளது.
காடுகளின் பல்லுயிர்ப் பாதுகாப்பு, காடுகளை பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தையும் எடுத்துரைக்கிறது.
ஃபிலோஸ் எனும் எலி, கோவிங்டன் ஆகியோர் உதவுகின்றனர்.
இப்புத்தகம் குழந்தைகளை கேள்வி கேட்கும் மனப்பான்மையை ஊக்குவிக்கும் வகையில் இருக்கிறது.
இயற்கைத் தேர்வு, உயிரினங்களின் தோற்றம் போன்ற அறிவியல் கருத்துகள் நமக்கு நினைவுக்கு வருகின்றன. ஆனால், இந்நூல் வெறும் அறிவியல் தகவல்களை எடுத்துச் சொல்லும் நூலாக மட்டும் அமையாமல், குழந்தைகளின் உலகத்தையும் அவர்களுடைய கேள்விகளையும் சிந்தனைகளையும் மையமாகக் கொண்டு அறிவியலை அணுகுகிறது.டார்வினின் ஃபிலோஸ் எனும் பெயரையே நாயகனை அழைக்கின்றனர்.
சிறுவனுக்கு உதவி செய்த கோவிங்டன் எனும் பெயர் கொண்ட எலி. இந்தப் பெயர் டார்வின் பயணம் செய்த கப்பலில் உதவியாளராக இருந்த கர்னல் கோவிங்டன்.
ஆந்தைக்கு ஏன் இரவில்.கண் தெரிகின்றன?
பறவை இனம் எப்போது தோன்றியது? என கேள்விகளும் பதில்களும்
தேன்சிட்டு, பாம்பு, யானை, கானகத்தின் பயன்கள் உள்ளிட்ட பல்வேறு தகவல்களை கூறியுள்ளனர்.
*மனிதன் உணர்ச்சிகளுக்கு அடிமையாகும் போது விலங்குகள எல்லாவற்றையும் விட பலமாகவும் பலவீனனாகவும் ஒரே சமயத்தில் ஆகிவிடுவான்.
* பாம்பு நாக்கை நீட்டி மடக்குவது காற்றை சுவை கொண்டு அறிவதற்கு.காற்றில் பரவியுள்ள வேதிப்பொருளை அறிந்து தற்காத்துக் கொள்ள உதவுவதாக கூறியுள்ளன்ர்.
குழந்தைகளிடம் ஆதாரத்துடன் சிந்தித்தல், சந்தேகம் எழுப்புதல், காரணத்தைத் தேடுதல், மூடநம்பிக்கைகளை ஆராய்ந்து பார்க்கும் மனப்பான்மை போன்ற அறிவியல் குணங்களை வளர்க்கும் வகையில் இந்நூல் அமைந்துள்ளது.
இறுதியில் கானகத்திற்கு வரும் ஆபத்தை எவ்வாறு சிறுவனும் அவனுடைய நண்பர்களும் எதிர்கொண்டனர் என்பதை கூறியுள்ளனர். குழந்தைளுக்கு படிக்க உகந்தது
தொடர்ந்து வாசிப்போம்
தோழமையுடன் மணிகண்டபிரபு
No comments:
Post a Comment