Tuesday, 10 March 2026

tea-24


#மனசுக்கு_ஒரு_தேநீர்_24

Failure to Finish Syndrome

மனித வாழ்க்கையில் பலர் புதிய செயல்களை ஆர்வத்துடன் தொடங்குகின்றனர். ஆனால் அந்த செயல்களை இறுதி வரை கொண்டு செல்ல முடியாமல் பாதியில் நிறுத்திவிடுகின்றனர். இந்த மனநிலையே Failure to Finish Syndrome.

 தொடங்கும் உற்சாகம் இருப்பினும், அதை நிறைவு செய்யும் பொறுமை மற்றும் உறுதி இல்லாத நிலைதான் இதன் அடிப்படை.
வாழ்க்கையில் ஒரு செயலை தொடங்குவது எளிதானது. ஆனால் அதை முடிக்கும் வரை தொடர்ந்து முயற்சி செய்வது சாதனை. புத்தாண்டில் பலரும் செய்த தீர்மானங்களுக்கு ஏறக்குறைய கல்லறை கட்டியிருப்போம் அல்லது கட்டும் தருவாயில் இருப்போம்

 பலருக்கு புதிய விஷயங்கள் மீது ஆர்வம் அதிகமாக இருக்கும். ஆனால் அந்த ஆர்வம் குறுகிய காலமே நீடிக்கும்.தொடர்ச்சியின்மை காரணமாக கைவிடுகிறோம். புதிய யோசனை வந்தவுடன் பழைய முயற்சியை கைவிடுகிறோம்.ஒரு வார இதழை வாங்கிவிட்டு படிக்கவில்லையெனில் அந்த வார இதழை வாங்காமல் இருப்பபரின் உணர்வுதான் நமக்கும் வரும்.
வாங்கிவிட்டு கூட படிக்கைவில்லையே எனும் ஆதங்கமும வரும்

ஒவ்வொரு புத்தாண்டிலும் பலரும் புத்தகம் படிக்கத் தொடங்குவதைப் பார்க்கலாம்.ஆரம்பத்தில் சில பக்கங்களை ஆர்வத்துடன் படிக்கிறோம். பிறகு மற்றொரு புத்தகத்தைப் பார்த்ததும் அதில் ஆர்வம் கொள்கிறோம். இதனால் பல புத்தகங்கள் தொடங்கப்பட்டிருக்கும்; ஆனால் ஒன்றும் முழுமையாக முடிக்கப்பட்டிருக்காது. உடற்பயிற்சியும் நடைப்பயிற்சியும்
 சோம்பல் அல்லது வேறு காரணங்களால் நிறுத்திவிடுவதைப் பார்க்கிறோம்.

ஒருநாள் நிறுத்தினாலும் மீண்டும் துவங்க முயற்சிக்க வேண்டும். அதன் மீது ஆர்வத்தை ஏற்படுத்த வேண்டும்.
கடினமானதை செய்ய முயற்சிப்பது, முக்கியத்துவத்தை புறக்கணிக்காமல் இருப்பது, இன்றைய வேலையை ஒத்திப்போடாமல் குறைந்தபட்சமாவது மேற்கொள்ள உறுதி செய்ய வேண்டும்.

வாழ்க்கையில் பெரிய சாதனைகள் அனைத்தும் தொடர்ச்சியான முயற்சியின் விளைவாக உருவாகின்றன. 
“Genius is one percent inspiration and ninety-nine percent perspiration.”
என்று தாமஸ் எடிசன் கூறுகிறார்.

“Well begun is half done.”
ஆனால் உண்மை என்னவென்றால்:
“Well finished is fully done.”
ஆரம்பிப்பதை விட
முடிப்பதே உண்மையான சாதனை.

என்ன செய்யவேண்டும் என்பதில் செலுத்தும் கவனத்தை, என்ன செய்யக்கூடாது என்பதில் நாம் கவனம் செலுத்தினால் தீர்மானங்கள் வெற்றி பெறும் என்கிறார் ஸ்டீவ் ஜாப்ஸ்.

புத்தம் புது காலை

தோழமையுடன் மணிகண்டபிரபு

No comments:

Post a Comment