Sunday, 23 August 2026

இளங்கோ


பரிணாம வளர்ச்சி விகிதத்தில் இதுவரை வந்த தலைமுறைகள் முந்தைய தலைமுறையை விட அடுத்த தலைமுறை சிறப்பான கற்கும் திறன் செயல்திறன் புரிதல் போன்ற அளவுகோல்களில் சிறந்து இருந்தது நரம்பியல் நிபுணர்களால் நிறுவப்பட்டுள்ளது.
 ஆனால் 1990 களுக்குப் பின்னர் பிறந்த தலைமுறை கற்கும் திறன் குறைவாக உள்ளது என்று பல ஆய்வுகள் காட்டுகின்றன. நாம் நினைப்பது போல தொழில்நுட்ப வளர்ச்சி அவர்களின் எந்தத் திறனையும் வளர்த்தெடுக்கவில்லை. இரசனை என்று ஒன்று கூட இல்லை. குழந்தைகள் பிறக்கும் போதே குறைவான திறனுடன் பிறக்கின்றன. 
மொழியை உள்வாங்குவதில் இளம் வயது மூளை சிறப்பாக இருக்க வேண்டும். ஆனால் மொழியை ஏற்கும் திறன் குறைய குறைய மற்ற தொடர்பு வழிமுறைகளும் திறன்களையும் குழந்தைகள் இழக்கிறார்கள். இதில் திரை நேரம் என்று சொல்லப்படும் ஸ்க்ரீன் டைம் இரண்டாம் சேதாரத்தை ஏற்படுத்துகிறது. 
உற்பத்தி அறிவு ஆக்க அறிவு தர்க்க அறிவு போன்ற மூளையை குவியப்படுத்தும் திறன் இல்லாமல் ஆகிறது. 
இதெல்லாம் முன்பு அறம் சார்ந்த சிக்கல்கள் என்று தான் கல்வியாளர்கள் கருதினார்கள். இப்போது வரும் பல ஆய்வு முடிவுகள் உள்ளார்ந்த சேதாரத்தை ஸ்கேன் செய்து காட்டுகிறார்கள். மித மிஞ்சிய கோபம் குரோதம் என எல்லா வகையான எதிர்மறையான விளைவுகளை காட்டுகிறது. 
உண்மையில் ஒழுக்கம் சார்ந்த பார்வை அல்ல. மூளையின் பிரச்சினை இது.

No comments:

Post a Comment