#Reading_Marathon2025
#25RM055
Book No:120/150+
Pages:-216
எரியும் சமவெளி
-யுவான் ரூல்ஃபோ
தமிழில் இல.சுபத்ரா
மெக்ஸிகோ இலக்கியத்தின் முக்கிய எழுத்தாளராக கருதப்படுபவர் யுவான் ரூல்ஃபோ.கிராமப் புற மாந்தர்களும், அந்த நில அமைப்பும் தான் இவரின் எழுத்துக்களில் வலிமையாக கூறப்பட்டுள்ளது.
மெக்ஸிகோபுரட்சி மற்றும் கிறிஸ்டேரோ போர்களுக்கு பின் உள்ள நெருக்கடிகள் இவரின் படைப்புகளில் காண நேரிடுகிறது.17 கதைகள் இத்தொகுப்பில் உள்ளன
கதைகள் வெறும் சம்பவங்களை சொல்வது மட்டுமல்ல உணர்வுகளை கடத்துவதும் தான். உணர்வுகளை கடத்துவதற்கு சொற்கள்மிக அத்தியாவசிய தேவையாகின்றன.அந்த மொழியின் வழியே அவர் கை காட்டும் நோக்கில் வாசிப்பின் வழியே நம் மனம் பயணிக்கிறது." கிராமம் இன்னும் வெகு தொலைவில் இருக்கிறது. காற்றுதான் அதனை அருகில் உணரச் செய்கிறது" எனும் வரி கிராமத்தை நோக்கிய பயணத்தில் நம்மையும் இழுத்துச் செல்கிறது.தரிசு நிலத்தை வழங்கிய கிராமத்தில் வெப்பம் மிகுந்த சூழலை நம்முள்ளும் அந்த பயணம் கடத்துகிறது.நிலம் தான் மனிதர்களுக்கு நம்பிக்கையூட்டுவதாகவும் வெறுமையில் உழல்வதையும் சுட்டிக் காட்டுகிறது.
கொமாத்ரே மலை கிராமத்தில் எல்லா அதிகாரத்தையும் கைப்பற்றிய டோரிகோ சகோதர்கள் பற்றிய ஒரு ஆணின் பார்வையில் கதை சொல்லப்படுகிறது.இவர்கள் மீது கொண்ட பயம் காரணமாக மக்களெல்லாம் வெளியேறுகிறார்கள். துண்டு நிலத்தில் விவசாயம் செய்யும் விவசாயிதான் கதைசொல்லி.டாரிகோ சகோதரனில் ஓரிலானை கொலை செய்யும் போது.." அவனது இதயம் இருக்கும் எனநான் கருதிய இடத்தில் குத்த முடிவு செய்து குத்திய நிகழ்வை விளக்குகிறார்.
அத்தை ஜெஸிந்தா இறந்த சோகத்திலிருக்கும் சிறுமிக்கு வெள்ளத்தின் தான் ஆசையாய் வளர்த்த பசு மாடு அடித்துச் செல்லப்பட்டது இன்னும் வேதனையைத் தருகிறது.இயற்கையின் கசப்பான அனுபவம் எவ்விதமான உணர்ச்சிக்கு ஆளாகிறாள் என்பதை சொல்கிறது.ஒரு குடும்பத்தையே கொன்றுவிட்டு தப்பிச்செல்லும் ஒரு மனிதனின் மன உணர்வுகள் தான் கதை.பழிவாங்கல்,பயம், குற்ற உணர்வு வாட்டிவதைப்பதை அழகாய் சொல்லியிருப்பார் அந்த மனிதன் கதையில்.
தவளைகள் வெளியே வருவதற்காகக் காத்திருந்தபடி நான் சாக்கடையின் அருகே அமர்ந்திருக்கிறேன் என துவங்கும் மகாரியோ கதை மனநிலை குன்றிய சிறுவனின் பார்வையில் தன் தாயையும் தன் மீது அன்பு செலுத்தும் ஃபெலிபா எனும் தாயையும் பற்றி சொல்லும் போது தன்னுள் ஏற்படும் உள்ளார்ந்த உரையாடல் தான் கதை. பத்திகளின்றி நீள்வாக்கில் ஒரே மூச்சில் படித்து விடும்படி உள்ளது
அசட்டுத்தனமாக ஒரு மனிதன் கொலைக்குத் தள்ளப்பட்டான் என்று சொல்லப்படும் எளிய சம்பவத்தில், சமூகம் ஏழை வேலைக்காரரை எவ்வளவு எளிதில் பலியாடாக்குகிறது என்பதைப் பேசும் கதை ஒன்று நெகிழ்ச்சியானது
எரியும் சமவெளி ஒரு நீள்கதை. பள்ளத்தாக்கின் புரட்சிக்கும்பல் பெட்ரோ ஜிமோராவுடன் துவங்குகிறது.அக்கும்பலில் உள்ள பிஷோன் எனும் இளைஞனின் பார்வையில் கதைநகர்கிறது. ஆயுதமேந்திய புரட்சி ஏற்படும்போது எளிய மக்களுக்கு ஏற்படும் இழப்புகளும், வலிகளும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
நிலமும் வறுமையும் இக்கதைகளின் மையச்சரடாக சொல்லப்பட்டுள்ளது. கதை மாந்தர்கள் அனைவருமே எளிய கிராமத்து மக்கள். தேர்ந்தெடுக்கப்பட்ட வார்த்தைகள் கதையை மெதுவாக உள்வாங்க வைக்கின்றன.இலத்தின் அமெரிக்க மக்களின் வாழ்வியலை புரிந்து கொள்ள முடிகிறது.மொழிபெயர்ப்பு கடினமின்றி எளிய மொழியில் அதே சமயம் அடத்தியுடன் உள்ளது.
தொடர்ந்து வாசிப்போம்
தோழமையுடன் மணிகண்டபிரபு
No comments:
Post a Comment