வாழ்க்கைக்கு ஹைக்கூ: 07
"இவ்வுலகம்
தேய்ந்து மறையும்
மலை எதிரொலி போல,
வெறுமையானது,
நிலையற்றது."
- ரியோகன்
இந்தக் கவிதை "நிலையாமை" (Impermanence) என்ற பௌத்த தத்துவத்தை மையமாகக் கொண்டது.
ஒரு மலையில் நாம் எழுப்பும் சத்தம் எதிரொலியாகத் திரும்பக் கேட்கும். ஆனால் அந்த எதிரொலி உண்மையானது அல்ல; அது மூல சத்தத்தின் ஒரு பிம்பம் மட்டுமே. மேலும், அந்த எதிரொலி நிரந்தரமானதும் அல்ல; அது சிறிது நேரத்தில் காற்றில் கரைந்து மறைந்துவிடும். ரியோகன் இந்த உலகத்தை அத்தகைய ஒரு 'எதிரொலிக்கு' ஒப்பிடுகிறார்.
நமது வெற்றிகள், தோல்விகள், சந்தோஷம், துக்கம் அனைத்துமே அந்த எதிரொலியைப் போலத் தோன்றி, சிறிது காலம் இருந்து, பின் மறைந்துவிடுபவை.
ஆகவே, நடப்பவற்றை ஒரு சாட்சியாகப் பார்க்கனும். எதிரொலியை ரசிப்பது போல வாழ்க்கையை ரசிக்கலாம், ஆனால் அதைத் துரத்திப் பிடிக்க முயலக்கூடாது. இது மன அழுத்தத்தைக் குறைக்கும்.
"இதுவும் கடந்து போகும்" என்ற மனநிலையை வேண்டும். பெரிய தோல்விகள் வரும்போது, "இது ஒரு எதிரொலி, இதுவும் மறைந்துவிடும்" என்று நினைப்பது மன உறுதியைத் தரும். அதே போல பெரிய வெற்றி கிடைக்கும் போதும் ஓவரா ஆடக்கூடாது.
ஈகோ: நம்மைப் பற்றிய மிகைப்படுத்தப்பட்ட பிம்பங்களைக் கைவிட்டு, எளிமையாக வாழ்வது நிறைவான வாழ்க்கைக்கு வழிவகுக்கும்.
"எதையும் மிகத் தீவிரமாக எடுத்துக் கொண்டு கவலைப்பட வேண்டாம்; எல்லாம் மாறும் தன்மை கொண்டது; அந்த மாற்றத்தை ஏற்றுக்கொண்டு நிகழ்காலத்தில் நிம்மதியாக வாழவேண்டும்" என்பதே இந்த ஹைக்கூவின் சாராம்சம்.
No comments:
Post a Comment