Thursday, 27 August 2026

55


பாரதி ஒரு பார்வை
-வலம்புரி ஜான்

பாரதி- மின்னலை விழுங்கி, மின்சாரத்தைக் கொப்பளித்தவன்

ஆதிக்க வெள்ளத்தின் அடியில் கிடந்தாலும்-பாதிக்கப்படாத பாஸ்பரஸ் அவன்

வலம்புரி ஜான் பாரதி குறித்து எழுதிய வரிகள்

பாரதி குறித்து வரும் புத்தகங்கள் பாரதி குறித்த மதிப்பினை இன்னும் உயர்த்துவதாகும். அதிலும் இப்புத்தகம் இன்னும் ஒரு படி மேல். பாரதியை வெறுமனே சிலாகிக்காமல் தன் மொழித்திறத்தால் கற்பனை திறத்தால் அவன் தொட்ட உச்சத்தை படிக்கும் போது ஏன் அவரை சிலாகிக்க வேண்டும் எனும் உண்மையும் உரைத்துள்ளது.

சாதிக்கு எதிரான பார்வை பாரதியின் பாடலில் உள்ளது போல் அவரின் வாழ்விலும் அதை கடைபிடித்தாரா? எவ்வாறு என்பதை ஆய்வு செய்கிறது.
விடுதலை ஒன்றே குறிக்கோள்.எனும் நோக்கில் காந்தி திலகர் வரிசையில் பாரதியும் செயல்பட்டுள்ளார்.

பாரதியின் எழுத்துக்களில் உள்ள முரண்களை பற்றி பேசுகிறார். அச்சம்தவிர் எனில் ஏன் பாண்டிச்சேரியில் இருக்க வேண்டும், பெரிதினும் பெரிது கேள் எனில் ஏன் காணி நிலம் கேட்கிறார். எழுத்துக்கும் வாழ்க்கைக்கும் இடையில் இடைவெளி கூடாது என விவரித்து ஏன் என்பதற்கு சரியான காரணத்தையும் அடுக்குகிறார். பாரதியின் தீர்க்கதரிசன நினைவு எவ்வளவு நுட்பமானது என்பதை உணரவைக்கிறார் வலம்புரியார்.

பெண்களை எத்தனையோ கவிஞர்கள் புகழ்ந்துள்ளனர். தள்ளியும் உள்ளனர். பாரதி மட்டுமே பெண் விடுதலை குறித்தும் பெண் அடிமைப்பட்டுள்ளார் எனும் நெருப்பு விதைகளை ஊன்றியன். சிந்தித்தவன்.

'பெண்டாட்டி தனியடிமைப் படுத்த வேண்டிப்
பெண்குலத்தை முழுதடிமைப் படுத்தலாமோ?

எனும் வரியில் பெண்டாட்டி அடிமையாக நினைக்கலாம் அவன் பிள்ளை மனைவி மகள்,மருமகள் என அத்தனி பேரும் அடிமைப்படுத்த பட்டிருப்பதாக தெரிவிக்கிறார். சந்திரிக்கையின் கதையில் விதவையின் மறுமணம் பற்றி எழுதுகிறார்.

எங்கிருந்து பார்த்தாலும் வானம் ஒன்றுதான் என்பது வைரமுத்து அடிக்கடி பயன்படுத்தும் வார்த்தை. வல்ம்புரியாரும் எல்லா சமயங்களும் அன்பை போதிப்பதாக ஒரு கட்டுரைக்கு இத்தலைப்பில் தான் கருத்து சொல்லியிருப்பார். உண்மையைத் தேட முயற்சிக்கிறவன் எங்கிருந்தும் தேடட்டும்.இந்தப்வழி ஒன்றே சரியானது என்கிற முரட்டுத்தனமான மூடத்தனத்திலிருந்து மாத்திரம் தன்னை விடுவித்துக் கொண்டால் போதுமானது இல்லையெனில் மண்டைக்காடுகளே உலகமெஙகிலும் தொடர்கதைகளாகும்.

இன்றில்லாமல் போகலாம் நாளை மறுநாள்.. என்றாவது ஒரு நாள்..இந்த என்றாவது ஒரு நாள் இருக்கிறதே அதுதான் வாழ்க்கை என்கிறார். இப்படித்தான் பாரதி ஆடுவோமே பாடலை எழுதுகிறார்.'பொழுது புலர்ந்தது யாம் செய்த தவத்தால்.. என நம்பிக்கையூட்டியவர்.கடுகளவு விசுவாசம் உனக்கு இருந்தால், இந்த மலையை நோக்கி, நீ நகர்ந்து சென்று கடலிலேவிழு என்றால் விழுந்துவிடும் என்பதாக நம்பிக்கை ஊட்டும் கருத்துகளை பல்வேறு இடங்களில் மேற்கோளாக கூறுகிறார்.

கவிதை என்பது ஒரு Impulsive rebellion against the already existed scheme of ideas

என கவிதை உருவாக காரணம் என்ன என அலசுகிறார்.தன்னில் முரண்படுபவன் எழுதுகிறான்.சமாதானத்துடன் இருப்பவர் சத்தமில்லாமல் இருக்கிறார்.தண்ணீர் விடாத செடியில் முதலாக பட்டுப்போவது தளிர்தான் அந்த தளிரே கவிஞன். புதுக்கவிதை என்பது வசந்தத்தின் வரவு.வரலாற்றின் விளைச்சல். காலத்தின் கட்டாயம். என நவீன கவிதை குறித்தும் பாரதியின் கவிதை குறித்தும் பாரதிக்கு பின்னால் வந்த கவிஞர்களின் கவிதை குறித்தும் பேசியுள்ளார்.

கரும்புத் தோட்டத்திலே உழைத்து உழைத்து ஓடாகிப் போகிற பாரத மாதர்களுக்காக அவன் அழுகிறான். அதைச் சொல்லுகிறபோது, 'விம்மி விம்மி விம்மி விம்மி அழும் குரல் கேள் காற்றே' என்று நான்கு தடவை சொல்லுகிறான். குசேல பாக்யானத்தில் வரும் குசேலரை அழைப்பான் கண்ணன். 'வம்மின் வம்மின் வம்மின்' என்று அழைப்பான். நான்காவது முறை அவர் அப்படிச் சொல்லமாட்டார். காரணம் தமிழ் அப்படிச் சொல்ல விடவில்லையாம். மூன்று முறை அழைத்ததும் கேட்டதால் வந்தார். அவல் தந்தார்; ஆவலை நிறைவேற்றிக் கொண்டார். குசேலர் பிழைத்தார்.ஆனால் பாரதி நான்கு முறை சொல்லுகிற ஆறுதல் பிறக்காத என தேறுதல் குறித்து. பாரதியின் எழுத்தை நுட்பமாக ஆராய்கிறார்.

வந்தே மாதரம் என்பது இந்திச் சொல் அல்ல வங்க சொல்..அதன் அர்த்தம்.மாநிலத்தாயை வணஙகுவது. Textம்  notes ம் போடுகிற வழக்கத்தை ஆரம்ப்பித்தது பாரதியே.

வயிற்றுக்கு சோறிட வேண்டும் என்கிறான். சாப்பிட்டேன் என்று எப்போது சொல்வோம்.வயிறு ஆரச் சாப்பிட்டால் தானே.வருந்துகின்ற பசி ஆறச் சோறிட வேண்டும் என பொறுமையாக புரிந்து கொண்டால் அர்த்தம் புதிது.

ஒளவையின் பாடலையும்.மேற்கோள் சொல்கிறார் ஓதாமல் ஒருநாளும் என் வரும். படிக்காமல், வாசிக்காமல் என இருந்திருக்கலாம்.“எந்த நாளும் கல்வி கற்காமல் இருக்கக் கூடாது. கற்காமல் என்பது நாம் புதிதாக ஒன்றை கற்றுக் கொள்ள வேண்டும். வெறுமனே வாசித்தால்.மட்டும் போதாது எனும் பொருளும் உண்டு
அன்றாடம் படி புதிதாக உரக்க படி என்கிறார்.

பாரதி திலகர் பிரிவை சார்ந்தவராய் இருந்தாலும் காந்தியை பழித்தவர் அல்ல.அடிமைத்தனம் போக்கப்பட வேண்டும் என்பதில் ஆசை கொண்டவர்.அதனால் தான் அவர் பாடாதது தாலாட்டுப்பாடல் மட்டுமே.
விடுதலை தாகத்தை அனைவருக்கும் தம் எழுத்தின் மூலம் பறைசாற்றியவர்.அதோடு தமிழ் மக்கள்.அறிந்து கொள்ள வேண்டிய முற்போக்கு விசயங்களை தம் எழுத்தில் வடித்தார்.இது போன்ற ஆய்வுக்கட்டுரைகளை எழுதுவதற்கு பாரதியை முழுமையாக படித்தால் மட்டும் போதாது அதே சிந்தனையில் இருக்கும் மற்ற இலக்கியங்களையும் அறிந்து தக்க இடத்தில் மேற்கோள் காட்ட வேண்டும். சங்க இலக்கியம், உலக இலக்கியம், பைபிள்,  சிவ புராணம், ஆழ்வார் பாசுரம் என அனைத்தும் தக்க இடத்தில் தந்து அனைத்து கட்டுரைகளையும் திறன்பட திறனாய்வு செய்துள்ளார் வலம்புரி ஜான்

தொடர்ந்து வாசிப்போம்

தோழமையுடன் மணிகண்டபிரபு

No comments:

Post a Comment