மனத்தில், ஆழத்தில் பீதி அதுபாட்டிற்குப் புழுப்போலத் துளைத்துக் கொண்டே இருந்தது. மேலே மட்டும் சமாதானம் கொஞ்ச ஒரு தரம் அந்த திகில் மேல் மட்டத்திற்கு வந்து தலை எடுக்கும். உடம்பு பதறும் நெஞ்சு உலரும் அடிவயிறு கலங்கும் முகம் விகாரமடையும் மறுபடியும் மெதுவாகச் சமாதானத்தின் பலம் அதிகமாகும். பயத்தைக் கீழே அமுக்கிவிடும்.சுகமோ துக்கமோ எந்த நிலைமையிலும் நீடிக்க முடியாது என்பதற்கு மனித சுபாவத்தில் இதுவும் ஓர் அத்தாட்சியோ?'விடியுமா?' சிறுகதையில் இருந்து..-கு.ப.ராஜ கோபாலன்
No comments:
Post a Comment