#Reading_Marathon2026
#26RM009
Book No:23/150+
Pages:-164
அறியாத உறவுகள்
-நிர்மல்
நிர்மல் அவர்களின் கட்டுரைகள் தனித்துவமானவை. ஆழ்ந்த உண்மைகளை மிக எளிதாக வெளிப்படுத்துவார்.வாசிக்கும் போதே சிந்திக்கவும் வைப்பவர். எந்த வார்த்தை விரயமும் இன்றி மொழியை சிக்கனமாக பயன்படுத்துவர். இந்த உழைப்பைப்பற்றிய சிந்தனையை நமக்கு தருபவை.நான்கு அத்தியாங்களில் உழைப்பு குறித்த விழிப்புணர்வை நாம் பார்க்கைத் தவறிய உழைப்பு குறித்த கோணங்களில் நம்மை பார்க்க வைக்கிறது.
தொழில் நுட்ப வளர்ச்சியில் எதிர்காலத்தில் உடல் உழைப்பு இருக்குமா எனும் கேள்விக்குறி நம்முள் இயல்பாகவே எழும். காலம் பதில் சொல்லும் என கடந்தி போனாலும் உழைப்பு குறித்த வரலாறை நாம் தெரிந்து கொள்வது அவசியம்.உழைப்பு ஒருபோதும் அதே மதிப்பில் நாம் பண்டமாற்று செய்ய முடியாது.பொருளாதாரத்தை முன்னிறுத்தி உழைப்பை செய்தாலும் அதில் மனிதனின் திறமை வெளிப்படுகிறது. கூலியுடன் நமக்கான அங்கீகாரமும் நமக்கு கிடைக்கிறது.
மனித உழைப்பு எவ்வாறெல்லாம் பரிமாற்றமடைகிறது என்கிறார்.. உதாரணத்திற்கு சந்தைகளின் உழைப்பின் பலனை பொருளாக மாற்றுதல்,வங்கிகள் உழைப்பின் பலனை சேமிக்க வைக்கிறது, நிறுவனங்கள் கூட்டு முயற்சியாக உழைப்பை ஒருங்கிணைக்கிறது என்பதாக அதன் பல்வேறு பரிமாற்றங்களை எடுத்துரைக்கிறார்.
உழைப்பின் தோன்றல்களை ஆதிச்சுவடுகளான கல்வெட்டில் இருந்தும் வரலாற்று ஆதாரங்களிலிருந்தும் உழைப்பின் ஆதி வரலாற்றை ஆய்வு நோக்கில் எடுத்துச் சொல்லியுள்ளார்.
/ 'Cemetery' என்பது 'Koimeterion' எனப்படுகிற 'உறங்கும் இடம்' என்று பொருள் தரும் கிரேக்கச் சொல்லிலிருந்து உருவானது 'Grave' என்பது 'குழி'எனப்படும் பழமையான ஜெர்மானியச் சொல்லிலிருந்து வந்ததாக அறியப்படுகிறது. ஆனால், தமிழில் நாம் இன்றும் நீத்தார் உறைவிடத்தை 'கல்லறை' என்றே அழைக்கிறோம்/
/தமிழில் 'கல்' என்றால் 'பாறைக் கற்கள்' எனப் பொருள் படும். அதேபோல் 'கல்' என்றால் கல்வி, கற்றல் என்றும் பொருள். இப்படியான பெருங்கற்களை, மனிதர்கள் தங்களின் கூட்டுழைப்பால் பெயர்த்து எடுத்துக்கொண்டு வந்து நிலைநிறுத்தும் தொழில்நுட்பம்தான் மனிதர்கள் கற்றுக்கொண்ட முதல் பாடமாகவும், மற்றவர்களுக்குக் கற்றுக்கொடுத்த முதல் திறனாகவும் இருந்திருக்கும்./
தேனீக்களும் கூட்டு உழைப்பு செய்கின்றன. ஆனால் மனிதர்களின் கூட்டு உழைப்பு பரிணாமம் அடைந்திருப்பதால் பலருக்கும் வேலை அதிகம் கிடைத்திருக்கிறது.
இப்படியான மனிதர்களின் உழைப்புச் சூழலில்தான் இங்கிலாந்தில் 1771ல் ரிச்சர்ட் ஆர்க்ரைட் தொழிற்சாலையை உருவாக்கினார்.இதே போல் பல தொழிற்சால உருவாக முதலாளி தொழிலாளி என வர்க்கம் உருவாகியது.வேலைப்பளு அதிகரித்தது.1908ம் ஆண்டு பிப்ரவரி 7, ம் தேதி கோரல்மில் தொழிலாளர் போராட்டம் வரலாற்றில் பெரிய திருப்புமுனையாக அமைந்தது. வ.உ சி தேச விடுதலை போராட்டதுக்கு தூண்டுகோலாக அமைந்து இந்தியாவிலேயே முதல் வேலைநிறுத்தம் நடந்து வரலாற்று பெருமையைச்சேர்த்தது. இதன் பலனாக தொழிலாளர் கோரிக்கை ஏற்கப்பட்டது.உழைப்பு சுரண்டலை எதிர்த்து போராட தொழிலாளர்களுக்கு உத்வேகமும் அளித்தது.மேலும் பணிப்பாதுகாப்பு, பணிநேரம் முறைமை, விடுமுறை போன்ற கண்ணியமான பணிச்சூழலை பெற்றுத் தந்தது.இதற்கு முன்னோடியாக அமைந்தது கார்ல் மார்க்ஸின் சிந்தனையும் முழக்கமும் ஆகும்
/கார்ல் மார்க்ஸ் எழுதிய 'மூலதனம்'(Das Kapital) என்ற நூலில், முதலாளித்துவச் சமூகத்தில் மனித உழைப்பு (Labour Power) ஒரு தனித்துவமான பண்டமாக (Commodity) மாறிவிடுவதைச் சுட்டிக்காட்டினார். “மற்ற பண்டங்களைப் போலவே, மனிதர்களின் உழைப்பு என்ற சக்தியும் சந்தையில் வாங்கப்பட்டு, பின்னர் விற்கப்படுகிறது. தொழிலாளி தனது உடல் மற்றும் மன உழைப்புத் திறனை. 'கூலி' என்ற விலைக்கு முதலாளியிடம் விற்கிறான். ஆனால், உழைப்பு என்பது வெறும் பண்டம் மட்டுமல்ல. அது ஒரு சிறப்புத் தன்மை கொண்டது. இதுவே மதிப்பை உருவாக்கும் ஒரே ஆதாரம் (Source of value)" என்றார் மார்க்ஸ்./
உழைப்பை ஓர் ஆன்மிக நோக்கில் ஒழுங்காகப் பார்த்தல், மனவலிமையை வளர்த்தல்.மேலும் இதற்கு வலு சேர்க்கும் வகையில் பற்றுதல் இல்லாமல் உழைக்கிற சக்திதான் யோகத்தின் அடிப்படை" என்கிறார் விவேகானந்தர்.
"தேன் சுவைக்க வந்த தேனீ. தேனில் சிக்கிவிடுவதைப் போல. நாமும் அப்படியே - ஓர் இலக்கைத் தேர்ந்தெடுத்து, அதில் அடிமையாகிறோம். உழைக்கும்போது நாம் அதில் மூழ்கி விடுகிறோம். அந்த வேலை வெற்றிபெறாவிட்டால் மனதிற்குள் உடைந்துபோகிறோம். வெற்றி என்பது நல்ல முறையில் மேற்கொள்ளப்பட்ட முயற்சியின் விளைவே" என்பதை அவர் வலியுறுத்துகிறார்.
இந்தியர்களின் உழைப்பை வணிக உத்தி மூலமாக ஆங்கிலேயர் எவ்வாறு அடிமைப்படுத்தினர் என்றும்,அதனை தொடர்ந்து தொழிலாளர் இயக்கங்கள் எவ்வாறு எழுச்சி பெற்றது என்பதனையும் கூறியுள்ளார்.கணினி வருகை, ஏ.ஐ எனும் செயற்கை நுண்ணறவு வருகைக்கு பின் உழைப்பில் ஏற்பட்ட மாற்றம் பற்றி கூறுகிறது.
இயந்திர கற்றல் செயற்கை நுண்ணறிவின் அடிப்படை.லேபிளிங், அல்காரிதம் பொன்ற நுட்பங்களை தேவையானதை கற்பிப்பதற்கு பல இலட்சம் மனிதர்களின் மறைமுக உழைப்பு தேவைப்பட்டுள்ளது. மாற்றங்களினால் மனித உழைப்பு எவ்வாறு மடைமாற்றப்பட்டுள்ளது. சொல்லப்போனால் மனித உழைப்பை அல்காரிதம்கள் நேரிடையாக நிர்வகிக்கத் தொடங்கி உள்ளன.
தாஜ்மஹாலை கட்டியவர் ஷாஜகான் என்றே சொல்கிறோம்.ஆனால் அதில் பல ஆயிரம் தொழிலாளர்களின் உழைப்பு மறைக்கப்பட்டுள்ளது. இன்றுதொழில்நுட்பங்களும் அதனையேதான் செய்துவருகின்றன
உழைப்பு என்றவுடன் உடல்சார்,அறிவுசார் உழைப்பு எனப் பிரித்து அதில் உள்ள இடைவெளிகளை பற்றி கூறியுள்ளார்.
எனவே ஏ.ஐ செய்யும் மாயை வேலை இழப்பா?வேலை மறைப்பா என்பதை குறித்த தெளிவான விளக்கங்களை அளித்துள்ளார்.
இணைய வசதி வந்தபின் காலை முதல் மாலை வரை இருந்த பணி கலாச்சாரம் தற்போது மாறியுள்ளது. எப்போது வேண்டுமானாலும் வேலை வாங்கிக் கொள்ளலாம்.மனித வளம் அதிகம் இருப்பதால் குறைவான ஊதியத்தில் வேலை செய்யும் கிக் வேலை, ப்ளாட்பார்ம் வேலைகள் பெருகிவிட்டன.ஒரு ப்ளம்பர் ஒரு சிறு வேலைக்கு ஆயிரம் ரூபாய் கேட்டார்.அதேநேரம் ஒரு மாத ஊதியத்தில் ஏழாயிரம் ஊதியத்துக்கு வேலை பார்க்கும் நிலையும் உள்ளது என ஜெயமோகன் ஒரு இடத்தில் கூறியுள்ளார். மாத ஊதியம் பெறுவோரிடம்
உழைப்பு மலிவாக பார்க்கபடுகிறது.
உழைப்பு குறித்த உன்னத உரையாடலாக இந்நூல் உள்ளது
தொடர்ந்து வாசிப்போம்
தோழமையுடன் மணிகண்டபிரபு
No comments:
Post a Comment