'எல்லாருக்கும் ஆச கனவு லட்சியம் எல்லாம் இருக்கும்.
ஆனா அப்பிடி ஆசப்படற விஷயத்துக்காக கடைசி வர வெய்ட் பண்ணி தன்னோட இலக்க அடையறது ஆயிரத்துல ஒருத்தர் தான்.
அதுக்காக மிச்ச 999 பேர் திறமையில்லாதவங்கன்னு இல்ல.... ஜெயிச்ச ஒருத்தர் கிட்ட இருக்க ஏதோவொன்னு இவங்க கிட்ட இல்லாம இருந்திருக்கும். பணம், பழக்கவழக்கம், சின்ன சின்ன ஏமாத்து வேலைகள், தந்திரங்கள்... எல்லாம் சேந்துதான் வெற்றியும் அமையுது.
பொறுமையா காத்திருந்தா என்னிக்காச்சும் ஒருநாள் அதுக்கான பலன் கண்டிப்பா கெடைக்கும்னு பொதுவா சொல்லுவாங்க.... அப்பிடி பொறுமையா காத்திருக்க சூழல் எல்லாருக்கும் அமையறதில்ல.
இன்னிக்கி என் பசிக்கு சோறுபோட என் கலையால முடியலன்னா, அந்த பசிய ஒரு தனிநபர் தாங்கிக்கலாம், புறக்கணிப்ப சிரிச்சிக்கிட்டே கடந்துடலாம். ஆனா அவன் குடும்பம்??? பொறுமையா காத்திருக்க முடியாத குடும்பச் சூழல்ல பொறந்த ஒருத்தனோட கனவையெல்லாம் இந்த உலகம் ஒரு பொருட்டா நினைக்கிறதில்ல.
பல பேர் இந்த போராட்டத்துல சோர்ந்துபோய் வேற வேலைக்குப் போயிடறான். சில பேர் வெளியே வரவே முடியாத ஒரு சுழலுக்குள்ள சிக்கி காணாமப் போயிடறான். இங்க ஒவ்வொரு துறைலயும் ஜெயிச்சவன விட கடைசி வர போராடி எதுமே செய்யமுடியாத ஏக்கத்தோட காணாமப் போனவனுங்களுக்குப் பின்னால லட்சம் கதை இருக்கு.
அதக் கேக்கறதுக்கு எந்தக் காதுகளும் இல்ல.
எல்லாருக்குமே ஜெயிச்சவனோட கதைகள் தான் தேவையா இருக்கு...
உங்க பக்கத்துலயே ஒருத்தன் அவனோட லட்சியத்துல தோத்துட்டு சாதாரணமான ஒரு வாழ்க்கைய வாழ்ந்துட்டு இருக்கலாம்.
எப்பவாச்சும் உங்ககிட்ட ஏதாச்சும் பேசனும்னு வந்தா ரெண்டு நிமிசம் அவனுக்காக ஒதுக்குங்க.
ஜெயிக்காதவன் கிட்ட நீங்க காட்ற உதாசீனம் தான் உலகத்திலயே மிகப்பெரிய வன்முறை.'
- Lakshmi Saravanakumar
No comments:
Post a Comment