#மனசுக்கு_ஒரு_தேநீர்_27
மனித வாழ்க்கையில் தவிர்க்க முடியாத ஒரு உணர்ச்சி தான் frustration விரக்தி அல்லது எண்ணக்குலைவு ஆகும். நாம் எதிர்பார்த்தது நடக்காமல் போகும் போது, முயற்சிகள் பலனளிக்காத போது, அல்லது சூழ்நிலைகள் நம்மை கட்டுப்படுத்தும் போது உருவாகும் அந்த உள் அழுத்தமே frustration.
ஒரு மாணவன் கடினமாக படித்தும் தேர்வில் எதிர்பார்த்த மதிப்பெண் பெறாமல் போனால், ஒரு தொழிலாளி உழைத்தும் உயர்வு கிடைக்காமல் இருந்தால், அல்லது நம்முடைய உறவுகளில் புரிதல் இல்லாமல் போனால்—இந்த எல்லா தருணங்களிலும் frustration தோன்றுகிறது.
frustration என்பது முழுக்க முழுக்க தீமையானதல்ல. அது ஒரு signal—நாம் எதையாவது மாற்ற வேண்டும், வளர வேண்டும் என்று சொல்லும் ஒரு உள் அழைப்பு.ஆபிரகாம் லிங்கன் தேர்தலில் தொடர் தோல்விகளால்.. மனமொடிந்து இருளில் செல்லும்போது ஒரு இடத்தில் இடறுகிறார்..அப்போது சொல்லிக்கொள்கிறார்
I have stumbled, but I have not fallen
நான் இடறிவிட்டேன் ஆனால் கீழே விழவில்லை என எண்ணிக்கொண்டு மீண்டும் போட்டியிட்டு வெற்றி பெறுகிறார்.
frustration என்பதை ஒரு தோல்வி என்று பார்க்காமல், வளர்ச்சிக்கான ஒரு படிக்கட்டு என்று பார்க்கச் சொல்லுகிறது.
வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்கள் யாரும் frustration-ஐ தவிர்க்கவில்லை. அவர்கள் அதை சமாளிக்க கற்றுக்கொண்டார்கள். உதாரணமாக, ஆயிரக்கணக்கான முயற்சிகளுக்குப் பிறகு தான் மின் விளக்கை கண்டுபிடித்த Thomas Edison. அவர் தோல்வியை frustration-ஆக பார்க்காமல், “இது வேலை செய்யாத வழி” என்று எடுத்துக்கொண்டார்.
“I have not failed. I've just found 10,000 ways that won't work.” – Thomas Edison
இந்த மனப்பாங்கு தான் frustration-ஐ சக்தியாக மாற்றுகிறது.
நமது எதிர்பார்ப்புகளை நியாயமான அளவில் வைத்துக்கொள்வது
பொறுமையை வளர்த்துக்கொள்வது
தோல்விகளை பாடமாக எடுத்துக்கொள்வது,மெல்ல மெல்ல இலக்கை அடைய கற்றுக் கொடுக்கிறது.
வீழ்வது தவறு அல்ல, எழுந்து நிற்பதுதான் முக்கியம்.
முடிவாக, frustration என்பது நம்மை தடுக்க வரவில்லை; அது நம்மை தள்ளிச் செல்ல வருவது. அதை சரியாக புரிந்து கொண்டால், அது நம்முடைய பலமாக மாறும். வாழ்க்கையில் மனக்கசப்பை வெற்றி நோக்கி மாற்றும் திறன் தான் உண்மையான அறிவு.
“Frustration is not the end of the road; it is the beginning of a better path.”
புத்தம் புது காலை
தோழமையுடன் மணிகண்டபிரபு
No comments:
Post a Comment