Thursday, 8 December 2022

சில ஓட்டல்களின் பெயர்களுக்குப் பின்னால் 'INN' என்ற வார்த்தை வருகிறதே (Hotel Holiday Inn), அதற்கு என்ன அர்த்தம்?



இரண்டு ‘N’ போட்டாலும், அது 'IN' தான். அதாவது, உள்ளே (வசிக்குமிடம்). குறிப்பாக, லண்டனில் வழக்கறிஞர்கள் மட்டுமே தங்கிய லாட்ஜுகளை INN’ என்று அழைத்தார்கள். பதினான்காம்
நூற்றாண்டுக்குப் பிறகு, ஓட்டல்கள் அந்தப் பெயரை எடுத்துக்கொண்டு விட்டன

-மதன்

ரூமி


பிழையற்ற நண்பனை 
நீ தேடினால், 
உனக்கென்று 
ஒரு நண்பனும் 
வாய்த்து இருக்க மாட்டான்.  

-ரூமி

தேவிபாரதி


கோபத்தைத் தாளிடப்பட்ட அறைக்குள்ளும், 
அன்பைப் பொது இடங்களிலும் வெளிப்படுத்தத் தெரிந்துகொள்.

-தேவிபாரதி

Wednesday, 7 December 2022

லதாமகன்


தனிமை துரோகங்களை மட்டுமே நினைவூட்டுகிறது, நம்மைவிட்டுப்போனவர்களை. நம் கனவுகளைச் சிதைத்தவர்களை, நம் தழும்புகளை நமக்குக் கொடுத்தவர்களை, நம் புண்களைக் கீறிவிட்டு அதன் குருதிவழியும் கோலத்தில் தன் ஓவியங்களைக் கண்டெடுத்துச் சென்றவர்களை. களைத்த நாளில் திறந்து நுழையும் கதவு, வெறுமை சூழ் அறை அதன் வெம்மையை நம்மீது பாய்ச்சுவதன் மூலம் நம் வலிகளை மேலெடுக்கிறது. ஒரு வலியை உருவாக்குவதைவிட, அதன் நினைவூட்டுவதுதான் பெரும் துயரம் இல்லையா?

-லதாமகன்

Tuesday, 6 December 2022

ஆண்டன் பெனி


கூரை ஒழுகலுக்கு ஒன்றை அம்மாவும்
மழைத் தண்ணீர்க்கு மற்றொன்றை அக்காவும் 
எடுத்துக்கொள்ள... 
பாத்திரங்களை நிறைக்கிறது 
சமையல் இயலாத நாளில்
ஒரு நல்ல மழை.

-ஆண்டன் பெனி

janakiraman nabalur


மதுரையில் செயல்படும் பிரபல இந்திய - ஜப்பானிய கூட்டு நிறுவனம். அந்த நிறுவனத்தின் தலைவர் ஒரு முறை கூட்டத்தில், தர மேலாண்மை குறித்த அவரது அனுபவ நிகழ்வைப் பகிர்ந்து கொண்டார். 

அவரது நிறுவனத்தில் ஜப்பானிய ஆட்டோமொபைல் நிறுவனங்களுக்கான ஸ்பிரிங், வால்வு போன்றவற்றை தயாரித்து ஏற்றுமதி செய்வார்கள். ஜப்பானிய நிறுவனம் மிக உயரிய தரத்தில் பொருட்களை எதிர்பார்த்ததால் பொருட்களை கவனத்துடன் செய்து அனுப்பினார்கள். நிறைய இழப்பு ஏற்பட்டது. அதனால் அந்த ஜப்பானிய நிறுவனத்துக்கு, ஒரு ஸ்பிரிங்குக்கு ஐம்பது பைசாவை ஏற்றித்தருமாறு இவர்கள் கோரிக்கை வைத்தனர். அந்த ஜப்பானிய நிறுவனம், நேரில் மதுரை வந்து, தொழிற்சாலையை பார்வையிட்டு பிறகு முடிவெடுப்பதாக கூறினார்கள். 

ஜப்பானியர்கள் தொழிற்சாலையை பார்வையிட வந்தபோது, இவர் தமது தொழிற்சாலையில் தரமான தயாரிப்புக்காக என்னவெல்லாம் முறைகளை ஏற்படுத்தியிருக்கிறோம் என்பதை விளக்கினார். அவரது தொழிற்சாலையில் தனியாக ஒரு தர பரிசோதனை மற்றும் கண்காணிப்புக்கு பெரிய டிபார்ட்மெண்ட்டையே ஏற்படுத்தியிருந்தார். சுமார் இருபது தொழிலாளருக்கு ஒரு தரக்கட்டுப்பாட்டு அதிகாரியை நியமித்து, உற்பத்தியாகும் ஒவ்வொறு பொருளையும் கண்காணித்தனர். சிறு குறை இருந்தாலும் அதனை ஒதுக்கி கழிவாக தள்ளினர். இப்படி அனைத்து வழிமுறைகளையும் பார்த்த பிறகு ஜப்பானியர், இவரிடம் "நியாயமாக உங்களுக்கு இனிமேல் ஒரு பொருளுக்கான விலையில் இருபது பைசா குறைக்கத் தான் வேண்டும்" என்று சொன்னதும் இவருக்கு அதிர்ச்சி. 

"தரக்கட்டுப்பாட்டுக்கு தனித் துறையும் நிறைய கண்காணிப்பாளர்களையும் வைத்திருக்கிறீர்கள் என்றால், உங்கள் உற்பத்தியில் நிறைய குறைபாடுடைய பொருட்கள் உள்ளன என்று அர்த்தம். உற்பத்தி செய்யும் தொழிலாளியே தரத்துடன் உற்பத்தி செய்ய ஆரம்பித்தால் இத்தனை கண்காணிப்பாளர்கள் தேவையில்லை. மூலப்பொருள் மற்றும் உற்பத்தி செலவும் உங்களுக்கு கணிசமாக குறையும். வேஸ்டேஜ் ஆனப் பொருட்களை நிர்வகிப்பதும் அதனை அப்புறப்படுத்துவதும் உங்களுக்கு கூடுதல் செலவை ஏற்படுத்துகிறது. ஆகையால், நீங்கள் ஏற்படுத்தும் தேவையற்ற இழப்புக்காக நாங்கள் ஏன் பொருளின் விலையை உயர்த்த வேண்டும்?" எனக் கேட்டனராம். அந்த உரையாடல் நமது நிறுவனத்தின் தலைவருக்கு புதிய சிந்தனையை தந்தது. 

பிறகு ஒவ்வொறு தொழிலாளிக்கும் தரமான உற்பத்தி குறித்து தொடர்ந்து பயிற்சி அளித்து, தொழிற்சாலைக்குள் சிறு சிறு தர-வட்டங்களை உருவாக்கி, அடுத்த சில மாதங்களில் உற்பத்தி செலவை கணிசமாக குறைத்தனர் என்று குறிப்பிட்டார். 

தரமான சேவை அல்லது தரமான உற்பத்தி என்பது வெளியிலிருந்து தரப்படும் மேற்பார்வையாலோ, கண்காணிப்பாலோ வருவதில்லை. அதில் ஈடுபடுபவர் உள்ளார்ந்த தெளிவைப் பெற்று, உற்பத்தியும் தரமும் வேறு வேறு அல்ல என்ற உணர்வை தமக்குள் பெறுவதால் மட்டுமே ஏற்படும். 

-படித்தது

இளந்தென்றல் திரவியம்


வேட்டையில் தப்பிய 
எல்லா மான்களுமே 
புலியை வென்றதாய் தான் 
அர்த்தம் கொள்ளும்!!!

-இளந்தென்றல் திரவியம்

லதாமகன்


தேர்வுகள் நம் சூழலை நிர்ணயிக்கின்றன. சூழல்கள் நம் தேர்வுகளையும், மனிதர்கள் நம் சூழலை உருவாக்குகிறார்கள். நம் சூழலுக்கேற்ற மனிதர்கள் மட்டுமே நமக்கு அமைகிறார்கள்.

-லதாமகன்

இதயத்தில் மட்டும் புற்றுநோய் வராது என்று கூறப்படுவது உண்மையா?



மனித உடலுக்குள் இருக்கும் செல்களில் உள்ள டி.என்.ஏ. தொடர்ந்து மாறுதல்கள் (Mutation)அடைந்த பிறகே, அது கான்சர் செல் ஆக மாறுகிறது. அதற்கு முதலில், செல் சரி பாதியாகப் பிளவு (Divide)அடைந்து பல்கிப் பெருக வேண்டும். பொதுவாக,
இதயத்திலுள்ள செல்கள் பல்கிப் பெருகுவதில்லை. அவற்றுக்கு ரத்தத்தை பம்ப் பண்ணவே முழு நேரமும் தேவைப்படுவதால், divide ஆக நேரம் கிடையாது! ஆகவேதான், இதயத்தில் புற்றுநோய் வருவதில்லை.

-மதன்

Monday, 5 December 2022

பாவ்லோ கொய்லோ


தோரணை எவ்வளவு எளிமையானதாகவும்,
சலனமற்றதாகவும் இருக்கிறதோ அது அவ்வளவு அழகானதாக இருக்கிறது.

பனி அழகாக இருப்பதற்கு காரணம் அது ஒரே ஒரு நிறத்தை மட்டுமே கொண்டுள்ளது தான்.

கடல் அழகாக இருப்பதற்கு காரணம் அதன் மேற்புறம் முற்றிலும் தட்டையாக இருப்பது போல தோன்றுவது தான்.

ஆனால் பனி,கடல் ஆகிய இரண்டுமே ஆழமானவை.
அவை தம்முடைய சொந்தப் பண்புகளை நன்றாக அறிந்துள்ளன



-பாவ்லோ கொய்லோ

இறையன்பு


மற்றவருடைய நேரத்தை வீணடிக்கும் அதிகாரம்  படைத்தவரே மேலதிகாரி

-இறையன்பு

மனுஷ்யபுத்திரன்


“காரணம் சொல்லாமல் தற்கொலை செய்து கொண்டவன், இந்த உலகத்தையே குற்றவாளியாக்கிப் போகிறான்

-மனுஷ்யபுத்திரன்

லதாமகன்


என்னைப் புரிந்து கொள்ளாமல்
இருந்திருந்தால் கூட
போயிருக்கும்

உறுத்தலெல்லாம்

உன் தவறான புரிதலை
விளக்க விரும்பாத
என் நம்பிக்கையின் மீதுதான்

-லதாமகன்

மனுஷ்யபுத்திரன்


நீங்கள் எனக்கு அன்போ, அக்கறையோ  காட்டுவதென்றால் எனக்கு மிகச்சிறிய அன்பை, அக்கறையை மட்டும் காட்டுங்கள்..

நீங்கள் ஒரு பெரிய அன்பைக் காட்டி, நான் அதற்குப் பழகிவிட்டால்,
பின் பாலைவனமான என் இயல்பு வாழ்க்கைக்கு என்னை நீங்கள் திருப்பி அனுப்பும்போது என்னால் திரும்ப முடியாது..

-மனுஷ்யபுத்திரன்

இரண்டாம் உலகப் போரின் போது ஜெர்மனி ஏன் ஈபிள் கோபுரத்தை (Eiffel Tower) அழிக்கவில்லை?



1944 ல் நடந்த இரண்டாம் உலகப்போரில் ஹிட்லரது நாஜிப்படையினரால் , பிரான்சின் தலைநகர் பாரிஸ் கைப்பற்றப்பட்டது. உள்ளே நுழைந்த ஹிட்லர், பிரான்சின் கவர்னரிடம் , ஈஃபிள் டவரை இடித்து விடக் கட்டளையிட்டார்.. ஆனால் அது நிறைவேற்றப் படவில்லை.. சரி மேலே சென்று பார்க்கலாம் என்று ஆசைப்பட்டார். ஆனால் இதைத் தெரிந்து கொண்டு, மேலே செல்ல உதவும், லிஃப்ட் கேபிள் களை அறுத்து விட்டிருந்தனர்.

கிட்டத்தட்ட 1665 படிகள் மேலே ஏறி.. ஜெர்மனியின் ஸ்வஸ்திக் கொடியை பறக்க விட கட்டளையிட்டார்.. மிகவும் கஷ்டப்பட்டு ஏறி..கொடியைப் பறக்க விட, அவ்வளவு உயரத்தில் அசுரத்தனமான காற்று, கொடியை அடித்து கொண்டு போய் விட்டது..மறுபடி ஒரு சிறிய கொடி பறக்க விடப்பட்டது. ஆனால் அதை கீழே இருந்து பார்க்க இயலாத தாகிப் போனது.. ஜஸ்ட் ஒரு க்ளிக்.. முன்பு நின்று ஒரு ஃபோட்டோ எடுத்துக் கொண்டு, அதோடு விட்டு விட்டார்.

-படித்தது

பெருமாள்முருகன்


"பேசற வாயும் திங்கற வாயும் ஒன்னுதான். ஆனாலும் எல்லாத்தயும் பேசீர முடியுமா? இல்ல, எல்லாத்தையும் தின்னர முடியுமா?

-பெருமாள்முருகன்
(பூனாச்சி அல்லது ஒரு வெள்ளாட்டின் கதை நாவலில்)

Sunday, 4 December 2022

சிறுகதை குறித்து


சிறுகதை குறித்து

 "It appears evident, then, that there is a distinct limit, as regards length, to all works of literary art- the limit of a single sitting-..."
 என்கிறார் அவர்.

 அதாவது சிறுகதை என்பது ஓர் அமர்வில் வாசிக்கத் தகுந்ததாய் இருக்க வேண்டும். இதனடிப்படையில் பொதுவாய் இத்தனை சொற்கள் என்று சொல்லி விட முடியாது. ஏனெனில் ஓர் அமர்வில் எவ்வளவு படிப்பது என்பது வாசகருக்கு வாசகர் மாறுபடும்; படைப்புக்குப் படைப்பும் வேறுபடும். காலகட்டத்திற்கேற்பவும் இது மாறுபடும். 

இந்தத் தலைமுறை வாசிக்கப் பொறுமையற்ற ஒன்று. A generation of premature ejaculation in reading!

-எட்கர் ஆலன் போ

janakiraman nabakur

காந்தாராவில் ஒரு காட்சி இப்பவும் நினைவில் நிற்கிறது.

சிவாவுடைய அப்பா பூதக்கோளா ஆட்டத்தில் பஞ்சுருளியாக ஆடும் போது, அந்த ஜமீன் வாரிசு, "முன்னாடி எங்க தாத்தா இந்த ஜனங்களுக்கு சும்மா கொடுத்த இந்த நிலத்தை எங்களுக்கு திருப்பித் தரனும்" என்று கேட்பான். பஞ்சுருளியாக இருப்பவர், "அந்த நிலத்தை நிச்சயம் தந்துடலாம்.  ஆனா, உங்க தாத்தா இந்த நிலத்துக்கு பதிலா என் கிட்ட நிம்மதியை வாங்கிக்கொண்டார். நீ அந்த நிம்மதியை திருப்பித் தந்துட்டா, நானும் இந்த நிலத்தை எல்லாம் உனக்குத் திருப்பித் தந்துவிடுகிறேன்" என்பார்.

சில பரிமாற்றங்களில் உணர்வு கலந்திருக்கும். அந்த உணர்வுக்கு மெடீரியலிஸ்டிக்காக எந்த வகையிலும் பணத்தாலோ பொருளாலோ ஈடு செய்யவே முடியாது. பெற்றோர்கள், தமது குழந்தையை வளர்ப்பதற்கு என்ன விலையை வைத்துவிட முடியும்? நண்பனுக்காக அவசரக்காலத்தில் ஓடி வந்து நின்று தோள் கொடுத்த நண்பனின் சேவையை எப்படி ஈடு செய்ய முடியும். 

ஒருவகையில், உணர்வுப் பரிமாற்றம் தான் மொத்த மனித உலகையும் இயக்குகிறது.

-படித்தது

உலக வரைபடத்தில் அமெரிக்கா முதலில் இருப்பது ஏன்?




உலக வரைபடத்தில் எந்த நாடு முதலில் இருக்கிறது என்பதை விட எந்த நாடு மையத்தில் இருக்கிறது என்பதைத்தான் பார்க்க வேண்டும். காரணம் பூமி உருண்டையை பிளந்து செவ்வகமாக்கும்போது எதை மையமாக வைத்து பிளக்கிறார்கள் என்பதே முக்கியம். இப்போதிருக்கும் உலக வரைபடத்தை பார்த்தால் கிரீஸ் நாடு மையத்தில் இருக்கும். காரணம் முதன்முதலில் உலக மேப்பை உருவாக்கியவர் கிரேக்க நாட்டைச் சேர்ந்த அனாக்ஸிமந்தர். அவர் தன்னுடைய நாட்டை மையத்தில் வைத்து உலக வரைபடத்தை உருவாக்கியதால் அமெரிக்கா அவருக்கு இடதுபுறத்தில் வந்தது. உங்களுக்கு முதலில் இருப்பதாக தோன்றியிருக்கிறது.

Saturday, 3 December 2022

மனுஷ்யபுத்திரன்


தேவைப்பட்டால் பேசுவார்கள்
இல்லாவிட்டால்
பேசாமல் போவார்கள்.

நீங்கள் ஒரு தேநீரை அருந்துவது
உங்கள் விருப்பமே தவிர
அது தேநீரின் விருப்பம் அல்ல.

-மனுஷ்யபுத்திரன்

Friday, 2 December 2022

பிரடெரிக் ஏங்கல்ஸ்


முதலாளியிடம் அடிமையாக, கடைநிலை ஊழியனாக இருப்பவனும் அடிமைப்படுத்த ஒரு ஜீவன் இருக்கிறது. அது அவன் மனைவி

-பிரடெரிக் ஏங்கல்ஸ்

சுப.வீ


தேவைக்குப் பொருள் வாங்குவதற்கும்..ஆசைக்குப் பொருள் வாங்குவதற்கும் பெரிய வேறுபாடு இருக்கிறது.ஏனென்றால் தேவைகளை நிரப்ப முடியும்.ஆசைகளை நிரப்ப முடியாது

-சுப.வீ

எல்லா போனுக்கும் பொதுவான சார்ஜர் உருவாக்குவது சாத்தியாமா?



அலைபேசிகளில் மாடல்களை பொருத்தும், கம்பெனிகளை பொருத்தும், அதன் பேட்டரிகள் வேறு வேறு அளவில் வேறு வேறு ஓல்ட்டேஜ்களும் இருக்கும்.

3.6VOLTS

3.7VOLTS

3.8VOLTS

4.32VOLTS

மற்றும் 4.35 VOLTS என்று வேறுவேறாக இருக்கும்.

எடுத்துக்காட்டாக 4.32 வோல்டேஜ் இருக்கும் பேட்டரி கொண்ட அலைபேசியை 3.7 வோல்டேஜ் கொண்ட சார்ஜரை பயன்படுத்தினால் சார்ஜ் மெதுவாக ஏறிவிடும். ஆனால் வேகமாக இறங்கிவிடும்.

4.32 வோல்டேஜ் பேட்டரியை விட 3.7 வோல்ட் சார்ஜர் 15 மடங்கு மின்னழுத்தம் குறைவானது.

அதுவே 3.7 வோல்ட்டேஜ் இருக்கும் பேட்டரியை பயன்படுத்தும் அலைபேசியை 4.35 வோல்டேஜ் இருக்கும் சார்ஜரை பின் சரியாக பொருந்துகிறது என்று பொருத்தினோமானால் வேகமாக சார்ஜ் ஏறும். நமக்கும் சந்தோசமாக இருக்கும்.ஆனால் பேட்டரி வேகமாக கெட்டுப் போய்விடும். அல்லது பொங்கிவிடும்.

3.7 வோல்ட் பேட்டரியை விட 4.35 வோல்டேஜ் சார்ஜர் 17 மடங்கு மின்னழுத்தம் அதிகமானது.எனவே இரண்டுமே தவறான பொருத்தமற்ற தேர்வுகள்.

நிறைய இடங்களில் அலைபேசி சார்ஜ் போடும்போது வெடித்து விடுகிறது என்பது இதனால் தான். இந்த விவரங்கள் பலருக்கு தெரிவதில்லை. நேரடியாக கம்பெனியை குற்றம் கூறி விடுவோம்.

எனவே மிகச்சரியாக அந்த அலைபேசி எண் மாடலை கூறி வாங்குவது தான் சரி.

எல்லா அலைபேசிகளிலும் ஒரே மாதிரியான வோல்டேஜ் இருக்கும் பேட்டரிகளை பயன்படுத்தினால் ,அனைத்து அலைபேசிகளுக்கும் ஒரே மாதிரியான சார்ஜர் களை உண்டாக்க இயலும்.

மேற்காட்டியவாறு வேறு வேறு வோல்டேஜ்கள் இருக்கும் பேட்டரிகளை பயன்படுத்தினால் ஒரே மாதிரியான சார்ஜர்களை பயன்படுத்த இயலாது.உற்பத்தி செய்யவும் இயலாதுஇயலாது

-படித்தது

முருகேசன்


பொது இடத்துல 
USE ME ன்னு 
குரங்கு பொம்மை 
குப்பை தொட்டியை 
புடிச்சுட்டு நிக்கும்....

ஆனா குப்பை போடுற 
எந்த குரங்கும் 
அதை கண்டுக்காது.

-முருகேசன் கந்தசாமி

One Mile Miracle -janakiraman


One Mile Miracle 

இரண்டு நூற்றாண்டுகளுக்கும் மேலாக மருத்துவர்கள், அறிவியல் அறிஞர்கள், மனித உடலின் ஓட்டத்திறனை ஆராய்ந்து மனித உடலுக்கு ஓடுவதில் ஒரு எல்லை உள்ளது. மனித உடலின் அமைப்புப் படி ஒரு மைல் தொலைவினை 4 நிமிடங்களுக்குள் ஓடுவது என்பது இயலாதது என்று கூறிவந்தனர். அதனை பெரும்பான்மை சமூகமும் ஏற்றுக்கொண்டது. ஆனால் நரம்பியல் நிபுணரும், ஓட்டப்பந்தய வீரருமான, ரோஜர் பேனிஸ்டர் மனிதனால் ஒரு மைல் தொலைவினை 4 நிமிடங்களுக்குள் கடக்கமுடியும் என்று நம்பினார். 

1954ம் வருடம் மே 6ம் தேதி, ஒரு மைல் ஓட்டத்தை 3.59 நிமிடங்களில் ஓடிக்கடந்தார். அதற்கடுத்து, 46 நாட்களில் ஆஸ்திரேலிய ஓட்டப்பந்தய வீரர், ஜான் லேன்டி என்பவர் ரோஜர் பேனிஸ்டருடைய சாதனையை முறியடித்தார். அதே வருடத்தில் இன்னும் சிலர் 4 நிமிடங்களுக்குள் ஓடிக்காட்டினர். 

அடுத்த பத்து ஆண்டுகளில் பலர், நான்கு நிமிடத்துக்குள் ஒரு மைல் தொலைவினை கடந்தனர். தற்போது பல ஆயிரம் ஓட்டப்பந்தய வீரர்கள் இந்த சாதனையை புரிந்து அதனை சாதாரணமான விஷயமாக மாற்றிவிட்டனர். தற்போது, மொராக்கோ நாட்டு வீரர், ஹக்கிம் குரோஷி ஒரு மைல் தொலைவினை 3.43 நிமிடங்களில் ஓடிக்கடந்தது உலகச் சாதனையாக இருக்கிறது. 

200 வருடங்களுக்கும் மேல் மனிதனால் சாதிக்கவே முடியாது என்று கூறிய ஒரு செயலை தனிநபர் ஒருவர், "ஏன் முடியாது?" என்று கேள்வி கேட்டார். அதனை தகர்த்தும் காட்டினார். அவர் தகர்த்ததும், உடனடியாக பல பேர் அதனை செய்யமுடிந்தது. 

இது மனவியல் தொடர்பான தடை தானே தவிர, உடல் தொடர்பானது அல்ல. ஒருவேளை பேனிஸ்டர் அன்று அந்த சாதனையை செய்திருக்கவில்லை என்றால் இன்று வரை மனித குலம் முழுக்க, ஒரு மைல் தூரத்தினை 4 நிமிடங்களுக்குள் மனிதனால் ஓடிக் கடக்கமுடியாது என்று நினைத்திருக்கக் கூடும்.

காலங்காலமாக இருந்த மனத்தடையை ஒருவர் உடைத்ததும், மற்றவராலும் அதே செயலை செய்யமுடிகிறது. மனித மனம், பெருஞ்செயல்கள் புரியக்கூடியவை என்பதை பேனிஸ்டர் உணர்த்தியிருக்கிறார். 

ஜெயிக்கவே முடியவில்லை என்றாலும், "யானை பிழைத்த வேல் ஏந்தல் இனிது" தான்.

-படித்தது

Thursday, 1 December 2022

இறையன்பு


தங்களைப் பிடிக்கத்தான் வருகிறார்களோ என்று எண்ணிக் காகங்கள் எப்போதும் பறக்கின்றன; பிடித்துக்கறி சமைப்பவர்கள் கால்களைச் சுற்றியே கோழிகள் வலம் வருகின்றன. நம்பிக்கெடுவதும் நம்பிக்கையின்மையால் வாழ்வதும் எப்போதும் தொடர்கின்றன.

-இறையன்பு

தஸ்தயேவ்ஸ்கி


இந்த உலகில் உண்மையைப் பேசுவதை விட கடினமானது எதுவுமில்லை.
முகஸ்துதியை விட எளிதானது எதுவுமில்லை.

-தஸ்தயேவ்ஸ்கி

தமிழ்


உறவுகளில்/நட்புகளில்  போலித்தனத்தை நாம் உணரும் போது உறவுகள் முறிவதில்லை. 
உணர்ந்ததை நம்மால் மறைக்க முடியாத கட்டத்தில் தான் உறவுகள் முறிகின்றன.

-தமிழ்

டானிசு


கேள்வி கேட்கப் பயப்படுகிறவர்கள்
எதையுமே தெரிந்து கொள்ள முடியாது.

-டானிசு

நோய் நொடி இல்லாமல் வாழ வேண்டும் என்பதில் நொடி என்றால் என்ன ?




நோய் என்பது தெரியும். உடலுக்கோ மனத்திற்கோ ஏற்படும் நலக்குறைவு. ஒருவர் நோயுறுவதற்கு புறச்சூழலும் காரணமாகலாம். அவருள் நிகழ்வனவும் காரணமாகலாம். நோயில்லாமல் வாழ்வதுதான் பெரும்பேறு. தருமரிடம் வினவப்பட்ட வினா ஒன்று : உலகில் ஒருவர் அடைதற்கரிய செல்வம் எது ? அவருடைய உடல்நலம் (ஆரோக்கியம்) என்பது அன்னார் விடை.  

நொடி என்பது தாழ்வுறுதல். அதுநாள்வரை வாழ்ந்த நிலையிலிருந்து வீழ்ச்சி. நொடித்துப் போதல் என்று சொல்வார்கள். நோய் என்பது உடல்நலக்குறைவு. நொடி என்பது திகழ்நலக்குறைவு. பொருளியல் நோக்கு மட்டுமில்லை. நன்னிலை வீழ்ச்சிகள் யாவும் நொடித்துப் போதலே. 

உடலாலும் தேய்வின்றி, உள்ள பிற நிலையாலும் தாழ்வின்றி வாழ்தலே நோய்நொடியின்றி வாழ்தல்.

-மகுடேசுவரன்