Sunday 4 December 2022

janakiraman nabakur

காந்தாராவில் ஒரு காட்சி இப்பவும் நினைவில் நிற்கிறது.

சிவாவுடைய அப்பா பூதக்கோளா ஆட்டத்தில் பஞ்சுருளியாக ஆடும் போது, அந்த ஜமீன் வாரிசு, "முன்னாடி எங்க தாத்தா இந்த ஜனங்களுக்கு சும்மா கொடுத்த இந்த நிலத்தை எங்களுக்கு திருப்பித் தரனும்" என்று கேட்பான். பஞ்சுருளியாக இருப்பவர், "அந்த நிலத்தை நிச்சயம் தந்துடலாம்.  ஆனா, உங்க தாத்தா இந்த நிலத்துக்கு பதிலா என் கிட்ட நிம்மதியை வாங்கிக்கொண்டார். நீ அந்த நிம்மதியை திருப்பித் தந்துட்டா, நானும் இந்த நிலத்தை எல்லாம் உனக்குத் திருப்பித் தந்துவிடுகிறேன்" என்பார்.

சில பரிமாற்றங்களில் உணர்வு கலந்திருக்கும். அந்த உணர்வுக்கு மெடீரியலிஸ்டிக்காக எந்த வகையிலும் பணத்தாலோ பொருளாலோ ஈடு செய்யவே முடியாது. பெற்றோர்கள், தமது குழந்தையை வளர்ப்பதற்கு என்ன விலையை வைத்துவிட முடியும்? நண்பனுக்காக அவசரக்காலத்தில் ஓடி வந்து நின்று தோள் கொடுத்த நண்பனின் சேவையை எப்படி ஈடு செய்ய முடியும். 

ஒருவகையில், உணர்வுப் பரிமாற்றம் தான் மொத்த மனித உலகையும் இயக்குகிறது.

-படித்தது

No comments:

Post a Comment