Monday 5 December 2022

இரண்டாம் உலகப் போரின் போது ஜெர்மனி ஏன் ஈபிள் கோபுரத்தை (Eiffel Tower) அழிக்கவில்லை?



1944 ல் நடந்த இரண்டாம் உலகப்போரில் ஹிட்லரது நாஜிப்படையினரால் , பிரான்சின் தலைநகர் பாரிஸ் கைப்பற்றப்பட்டது. உள்ளே நுழைந்த ஹிட்லர், பிரான்சின் கவர்னரிடம் , ஈஃபிள் டவரை இடித்து விடக் கட்டளையிட்டார்.. ஆனால் அது நிறைவேற்றப் படவில்லை.. சரி மேலே சென்று பார்க்கலாம் என்று ஆசைப்பட்டார். ஆனால் இதைத் தெரிந்து கொண்டு, மேலே செல்ல உதவும், லிஃப்ட் கேபிள் களை அறுத்து விட்டிருந்தனர்.

கிட்டத்தட்ட 1665 படிகள் மேலே ஏறி.. ஜெர்மனியின் ஸ்வஸ்திக் கொடியை பறக்க விட கட்டளையிட்டார்.. மிகவும் கஷ்டப்பட்டு ஏறி..கொடியைப் பறக்க விட, அவ்வளவு உயரத்தில் அசுரத்தனமான காற்று, கொடியை அடித்து கொண்டு போய் விட்டது..மறுபடி ஒரு சிறிய கொடி பறக்க விடப்பட்டது. ஆனால் அதை கீழே இருந்து பார்க்க இயலாத தாகிப் போனது.. ஜஸ்ட் ஒரு க்ளிக்.. முன்பு நின்று ஒரு ஃபோட்டோ எடுத்துக் கொண்டு, அதோடு விட்டு விட்டார்.

-படித்தது

No comments:

Post a Comment