#Reading_Marathon2026
#26RM009
Book No:31/150+
Pages:-711
ஒரு தூக்குக் கைதியின் வாக்குமூலம்
- தூக்கு செல்வம்
இந்த ஆண்டு புத்தக திருவிழாவில் பல பிரபலங்கள் பரிந்துரைத்த புத்த்கம் இது.இதற்கு திருடன் மணியன் பிள்ளை புத்தகத்தை மணியன் எழுதியது போல. இப்புத்த்கத்தை தூக்கு செல்வம் எழுதியுள்ளார்.தூக்கு கைதி செல்வம் 1998 ம் ஆண்டு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு 2012ல் குடியரசு தலைவரால் ரத்து செய்யப்பட்டு வாழ்நாள் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு உள்ளார். செல்வம் எந்த குற்றத்திற்காக தண்டனை பெற்றார் என்பதும், சிறை வாழ்க்கைக்கு எவ்வாறு ஆளானார் ,
என்பதே புத்தகம்.
சிறை துறை பற்றி சமீபத்தில் ஜூனியர் விகடனில் தொடராக வந்தது.அதற்கு முன் தியாகு எழுதிய சுவருக்குள் சித்திரங்கள் வாசித்துள்ளேன். சினிமாவிலும் கமலின் மகாநதிதான் ஜெயில் பற்றிய சித்திரத்தை யதார்த்தமாய் காண்பித்தது. அதற்கு பின் நெட்ப்ளிக்ஸில் திஹார் சிறை குறித்த தொடரும் அங்கு நடைபெறும் நிகழ்வை உள்ளது உள்ளபடியே காண்பித்திருக்கும்.
பணம் படைத்தவர்களும், உயர் சாதியினரும் தூக்கு மேடைக்கு வருவதில்லை.ஏழை எளிய குரலற்றவர்கள்தான் வருகின்றனர் எனும் நடைமுறை யதார்த்தத்தை பிரதிபலிக்கிறது.
"வெளிச்சத்தில் வாழும் மனிதர்களே உங்களை ஓர் இருள் சூழ்ந்த உலகத்துக்குள் அழைத்துச் செல்கிறேன் என ஆரம்பிக்கும் என்னுரையில் தனிமை குறித்த மனநிலையை உணர்த்துகிறது. காலம் கடுங்காவலில் வைத்த வலியை தருகிறது. திரைப்படங்களில் வரும் சிறைக்காட்சிகள் போலியானவை என கூறி சாதி அடிப்படையிலான பாகுபாடுகள் உள்ளதென கூறுகிறார்.சிறை குறித்த வரலாற்றையும் இறுதியில் கொடுத்துள்ளார்.
நீதிபதி தண்டனை வழங்கியதும் பாளையங்கோட்டை நடுவண் சிறைக்கு சுமந்து செல்லும் வாகனத்திலிருந்து துப்பறியும் பாணியில் புத்தகம் துவங்குகிறது. செல்வத்தின் இளமை பருவம், பள்ளிப் படிப்பு, சிறுவயதில் பார்த்த முதல் பிணம், இரண்டாம் பிணத்தின் பிண்ணனிக் கதை, பால் துரை மாமாமின் வளர்ப்பில் விரிகிறது.
முன்பகை காரணமாக வெட்டுப்பட்டு வயலில் குத்துயிராய் கிடந்த செல்வத்தின் மரணவலி நமக்கும் படிக்கும்போது வருகிறது. பழிவாங்கலில்.செல்வம் ஈடுபடுகிறபோது சொல்கிறான்
"மனித குலத்திற்கே முதன்மையானது பழி உணர்ச்சி. பழி வாங்குவதில் குரூரமும் சந்தோஷமும் எப்போதும் இருந்து கொண்டே இருக்கும். வன்முறை பாதைக்குள் ஒரு முறை நுழைந்தால் மீண்டும் திரும்பிவர முடியாது. அந்த ஒரு வழிப்பாதையில் நாங்கள் இருவரும் மிகவும் வேகமாக ஐயப்பனை நோக்கி சென்றுகொண்டிருந்தோம் என்று.
ஐயப்பன் உயிரிழந்த பின்பு லிங்கத்தின் நட்பு செல்வத்தை காப்பாற்றியது.அதன்பின் அய்யாவு, பிரபு என நீளும் பட்டியலுடன் அடுத்தடுத்து நிகழும் சம்பவங்கள் ஒரு திரில்லர் நாவல் போல விரிகிறது.இரண்டாம் பாகத்தில் போலிஸிடன் சரணடைந்த பின் வரும் ஜெயில் அனுபவங்கள் நம்மையும் சிறை கைதி போல உணரச் செய்கிறது.
விடியற்காலை மலத்தை பேப்பரில் சுற்றி வைத்திருந்து, காலை ஆறுமணிக்கு கதவு திறக்கப்பட்டதும் கொண்டு சென்று எறிய வேண்டும்.
மேலும் ஜெயிலில் உள்ள வகைகள்,
அறைகளின் அமைவிடம், ஒரு கைதியை 3 பேர் மனுப்போட்டு பார்க்க முடியும்,சிறைக்குள் நடக்கும் மோதல்கள்,கைதிகள் விடுப்பு, திறந்த வெளி சிறையில் இருந்தால் தண்டனை நாள் பாதியாகும் என பல சிறை பற்றிய அறியாத பல செய்திகள் வருகிறது. செல்வம் சிறைக்கைதிகளுக்கான பல உரிமைகளை பெற்றுத் தருகிறார். சிறை அதிகாரிகளின் குணங்கள், சட்ட ஆணைகள் பற்றிய விபரங்களை புத்தக வாசிப்பின் மூலம் அனுபவங்களின் மூலம் அறிந்து தந்துள்ளார்.அந்நாளில் இவருடன் பிரேமானந்தா, வீரமணி உள்ளிட்ட பலரும் சிறையில் இருந்துள்ளனர்.
சென்னை, திருச்சி, பாளை
பாளை, கடலூர், நெல்லை உள்ளிட்ட சிறை அனுபவங்கள் விரிவாக எழுதியுள்ளார்.ஒவ்வொரு ஆண்டும் நடந்த சிறைச்சாலை மரணங்களையும் பதிவு
செய்துள்ளார்.காவிரி நதிநீர் பிரச்சினை உண்ணாவிரதம், புலிகள் பிரச்சினைகள்,செம்மொழி மாநாடு, சிறைக்கு வரும் அரசியல் கட்சி தலைவர்கள் என ஒவ்வொரு ஆண்டும் நடந்த நிகழ்வுகள் பதிவாகி சுவாரஸ்யபடுத்தியுள்ளார்.
வேலூர் சிறையில் முருகன் சாந்தன் பேரறிவாளன் ஆகியோரிடம் பழகிய அனுபவங்களை விவரித்திருப்பார்.
தான் செய்த குற்றங்களை சுய இரக்கமின்றி உள்ளது உள்ளபடியே
விவரித்திருப்பார்.நான்கு அறைக்ள் தான் அங்கு நடைபெறும் வழக்கமான சம்பவங்கள் தான் ஆனால் பக்கத்துக்கு பக்கம் அனுபவ சுவடாய், த் ரில்லாய் செல்கிறது.
2017ம்.ஆண்டு சேலம் சிறையில் நடந்த புத்தக கண்காட்சி தான் வாசிப்பு பக்கம் செல்வத்தை திசை திருப்பியது எனலாம்.ஒரு புத்தகம் என்ன செய்யும் என்பதை அடிக்கடி கேட்பதுண்டு. அது நிகழ்த்தும்.மாயம் அற்புதமானது.எழுதுவதற்கு முகிலன்
என்பவரின் ஊக்குவிப்பு குறித்து கூறுகிறார்.அதன்பின்பு வாசிப்பு வாசகர் வட்டம் சிறையில் நடைபெற்ற கலந்துரையாடல் பற்றியும் பிரபலங்களுடன் பேசியதையும் பகிர்ந்து கொள்கிறார் 2023ம் ஆண்டு ஒரு வழக்கில் பத்ரி சேஷாத் ரி செல்வத்துடன் இருந்த போதுதாம் இந்நூல் வடிவம் பெற விதை போட்டார்.
மூன்றாம் பாகத்தில் சிறை குறித்த அனுபவத்தை மடலாக வடித்துள்ளார்.
~படித்ததில் பிடித்தது
*புதிதாக சிறைக்கு வருபவர்களுக்கு தொற்று நோய் அறிகுறி இருப்பதை கண்டறிய 2-3 நாட்கள் தனிமை சிறையில் அடைத்த. வைப்பார்கள்
*போதைகளில் முதன்மையானது கையில் ஆயுதம் ஏந்துவதுதான்
*வெட்டரிவாளை கையில் எடுத்தவனுக்கு ஒரு நிரந்தர நண்பன் இல்லாமல் போகலாம்,ஆனால் நிரந்தர எதிரி உருவாகிக் கொண்டே இருப்பான்
*பஞ்சாப் பிரிவினைவாத காலிஸ்தான் இயக்கத்தை ஒடுக்க 1985ல் இயற்றப்பட்ட சட்டமே தடா சட்டம்
*சுற்றுச்சுவர்களையும் கம்பிக்கதவுகளையும் விட அச்ச உணர்வுதான் சிறைசாலைகளுக்கு பலமான பாதுகாப்பு
*1837ல் சென்னையும், 1880ல் பாளையும்,1865 திருச்சியும் ஆங்கிலேயர்களால் கட்டபட்ட சிறைகளாகும்
*பகையின் தொடக்கமும் முடிவும் மனிதனின் கையில் இல்லை
*சிறையாளிக்கு சிறையில்தரும் உடைதான் மன அழுத்தம் தரும் முதல் விஷயம்
*மனித மூளை அளவில் சிறிதாக இருந்தாலும், அதன் செயல்பாடுகளையும் சிந்தனை திறன்களையும் அளவிட முடியாது.
*2013ம் ஆண்டு சிறையாளிகளுக்கு தொலைபேசி வசதி கொண்டு வரப்பட்டது.வாரம் ஒரு முறை 6 நிமிடங்கள் பேசலாம்.கட்டணம் ரூ30
*சாந்தனின் கவிதை கொஞ்சம் மனம் கனக்க வைக்கிறது
வேர் இல்லை
நெடுங்காலமாக வாழ்கிறது
தூக்கு மரம்
*ஆங்கிலேயர் காலத்தில் சிறையில் பாம்பு ஒன்றை பிடித்துக் கொடுத்தால்.தண்டனை காலம் 2 மாதம் முதல் 3 மாதம் வரை குறைக்கப்படும். தற்போது கடைபிடிப்பதில்லை.
இப்புத்தகத்தின் ஒரு சிலவற்றை மட்டுமே பகிர்ந்துள்ளேன். பக்கத்துக்கு பக்கம் ஏதேனும் ஒரு நிகழ்வு அது முடிந்தவுடன் அடுத்தது என நீள்கிறது.சிறை குறித்து அங்குலம்.அங்குலமாக பேசியுள்ளார். அத்தனை அதிகாரிகளையம் நினைவில் வைத்து எழுதியுள்ளார். வித்தியாசமான வாசிப்பு அனுபவம்
தொடந்து வாசிப்போம்
தோழமையுடன் மணிகண்டபிரபு
No comments:
Post a Comment