#மனசுக்கு_ஒரு_தேநீர்_3
ஜப்பானில் குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுக்கும் போதே 'கேன்பாரு' (Canbaru)எனும் ஒரு ஜப்பானியச் சொல்லை சொல்லி வளர்க்கிறார்கள். அதன் பொருள்
விடா முயற்சியைக் கைவிடாதே” எது உன்னுடைய முழுத் திறமையோ அதை நன்றாகச் செய்வதிலே முழு கவனஞ் செலுத்து என்று சொல்லிக் கொடுக்கப்படுகிறது!
நேற்று என்னவெல்லாம் செய்தீர்கள் என்று ஒன்றுவிடாமல், உங்களால் பட்டியலிட முடியுமா? முடியாது. ஏனென்றால், அதில் இரண்டு, அல்லது மூன்று சதவீத வேலையைத்தான் நீங்கள் கவனத்தில் பதித்துச் செய்திருப்பீர்கள். மற்றச் செயல்கள் எல்லாம் கவனமின்றி, உங்கள் மனம் ஒருமுகப்படாமல் செய்யப்பட்டவை.
நீங்கள் வேலை மும்முரத்தில் இருப்பதை விட குருட்டுச் சிந்தனையில் இருக்கும் நேரமே அதிகம். அப்புறம் எப்படி நேரம் போதுமானதாக இருக்க முடியும்? மனித மனம் மிகப் பெரும் சக்தி வாய்ந்தது. அதை முறையாகப் பயன்படுத்துவது எப்படி என்று அறிந்து கொண்டு விட்டீர்களென்றால், அற்புதமான பல செயல்களைப் புரிவீர்கள் என்கிறார் ஆண்ட்ரூ கார்னகி
எல்லோருக்கும் எல்லாவற்றுக்கும் நேரம் தாராளமாய் உண்டு. நாம்தான் நேரத்தை சரியாய் பயன்படுத்துவதில்லை. நேரம் நம்மை கட்டுப்படுத்தக் கூடாது. அது நம் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும்
இப்பொழுதே அழகாகி கொள்.
இப்பொழுதே சந்தோசமாக இரு.
இப்பொழுதே துவங்கு.
இப்பொழுதே வாழ்ந்து விடு..!!
எதிர்காலம் ஒன்றும்,
நீ இப்போது வாழ்ந்து கொண்டிருக்கின்ற வாழ்க்கைக்கு பதிலாக
புதிதாக எந்தவொன்றையும் உனக்கு தந்து விடப்போவதில்லை
-ஷம்ஸ் தப்ரீஸி
புத்தம் புது காலை
தோழமையுடன் மணிகண்டபிரபு
No comments:
Post a Comment