Tuesday, 20 January 2026

tea-8


#மனசுக்கு_ஒரு_தேநீர்_8

Procrastination எனும் வார்த்தை அண்மையில் பிரபலமடைந்து வருகிறது.இதன் பொருள் அனைவருக்கும் தெரிந்தது தான்..
"செய்ய வேண்டிய காரியங்களைத்  தொடர்ந்து தள்ளிப்போடுவது 

இப்போது செய்ய முடியும் வேலை என்பதை அறிந்திருந்தும்,
“சிறிது நேரம் கழித்து செய்வோம்”,
“நாளை பார்த்துக் கொள்வோம்” என்று மனம் காரணங்கள் சொல்லி ஒதுக்கிவைப்பதே Procrastination.
பணியை தொடங்குவதில் சுணக்கம், கடினமானதை தவிர்ப்பது, அவசரப்பட்டு செய்வதில் ஒரு அலட்சியம் போன்றவை. 

எதிர்காலம் எங்களுக்கு என்ன வைத்திருக்கிறது?”
“What the future has in store for us”

“எதிர்காலத்தை ஒரு களஞ்சியம் அல்லது பொக்கிஷப் பெட்டி போலக் கற்பனை செய்கிறது மனது.ஆனால் நிகழ்கால வாய்ப்புகள், சவால்கள் அனைத்தும் செய்தால் தான் அது பொக்கிஷமாக மாறும்.உடனே தைத்தால் ஒன்பது கிழிசலை தவிர்க்கலாம் என்பது பழமொழி. ஆகவே எந்த ஒரு செயலையும் விரைந்து செய்ய வேண்டும்.

ஒரு மனிதன் விஷ அம்பால் காயமடைந்தான்.
அவன், “அம்பு எங்கிருந்து வந்தது? யார் எய்தார்?” என்று கேள்விகள் கேட்டு காலம் தாழ்த்தி..
அந்த நேரத்தில் சிகிச்சை பெறாமல் இறந்தான். தேவையற்ற கேள்விகளை விட, தீர்வில் கவனம் செலுத்து என்கிறது புத்தம்

எய்தற் கரியது இயைந்தக்கால் அந்நிலையே
செய்தற் கரிய செயல்

*கிடைப்பதற்கரிய காலம் வந்து வாய்க்குமானால் அப்போதே தாம் செய்வதற்கு அரியவான செயல்களை செய்து முடித்தல் வேண்டும் என்கிறார்
திருவள்ளுவர்

புத்தம் புது காலை

தோழமையுடன் மணிகண்டபிரபு

No comments:

Post a Comment