Tuesday, 13 January 2026

சொக்கன்


இந்த மாத 'அந்திமழை' இதழில் கலை இயக்குநர் தோட்டா தரணியின் பேட்டியைப் படித்துக்கொண்டிருந்தேன். அதில் ஒரு பகுதி எனக்கு மிகவும் பிடித்திருந்தது:

> நாம் செய்யும் வேலைமீது நமக்குப் பயம் வேண்டும். சின்னதாகக் குடிசைச் செட் போட்டாலும் எனக்குப் பயம் இருக்கும்.

உளவியலாளர்கள் Anxiety (பதற்றக் குறைபாடு) பற்றிப் பேசுகையில், நம்முடைய அன்றாடப் பணிகளைச் செய்யும்போது நமக்குள் சிறிதளவு பதற்றம் இருந்தால் அது நம் வாழ்க்கையைப் பாதுகாப்பாக்குகிறது, நேர்த்தியாகச் செலுத்துகிறது என்பார்கள். அந்த அச்சம் அளவுக்கு மீறினால்தான் சிக்கலாகிவிடுகிறது. கட்டுக்குள் இருந்தால் அதுவும் ஒரு நல்ல, பயனுள்ள கருவிதான். கலைஞர்களுக்கும் அது பொருந்தும் என்பதைத் தோட்டா தரணி மிக அழகாகச் சொல்லிவிட்டார்.

ஆக, அச்சம் என்பதும் வலிமையடா!

No comments:

Post a Comment