Friday, 8 August 2025

ஜானகிராம்


இன்று உலக பழங்குடிகள் தினம் - வாழ்க்கை குறித்த ஆப்ரிக்க தேசத்து பழங்குடினரின் சொலவடைகள்: 

1. “வேகமாக செல்ல விரும்பினால், தனியாகச் செல்லுங்கள். தொலைவுக்கு செல்ல விரும்பினால், ஒன்றாகச் செல்லுங்கள்.”
அர்த்தம்: குழுவாக இணைந்து செயல்பட்டால் நீடித்த வெற்றியை அடையலாம்.

2. “ஞானம் ஒரு பவோபாப் மரம் போன்றது; ஒரே மனிதன் அதைத் தழுவ முடியாது.”
அர்த்தம்: யாருக்கும் முழுமையான அறிவு இல்லை — முழு உண்மையை அறிய பிறரின் பார்வையும் தேவை.

3. “உள்ளுக்குள் பகைவர் இல்லாவிட்டால், வெளியிலிருந்து வரும் பகைவர்கள் உங்களை காயப்படுத்த முடியாது.”
அர்த்தம்: உள்ளார்ந்த அமைதியும் தன்னம்பிக்கையும் வெளிப்புற ஆபத்திலிருந்து காக்கும்.

4. “கிராமம் ஒரு குழந்தையை புறக்கணைத்தால், அந்த வெப்பம் மொத்த கிராமத்தை எரித்து விடும்.”
அர்த்தம்: சமூகம் ஆதரவற்றவர்களை புறக்கணித்தால் அவர்கள் எதிர்ப்பு மற்றும் அழிவுக்குத் தள்ளப்படுவர்.

5. “மழை ஒரே வீட்டின் கூரையில் மட்டும் பெய்யாது.”
அர்த்தம்: நன்மை, தீமை எல்லோருக்கும் வரும் — யாரும் விலக்கு அல்ல.

6. “கைகளை கழுவ தெரிந்த குழந்தை மூப்பர்களுடன் உணவருந்தும்.”
அர்த்தம்: மரியாதை, ஒழுக்கம், தயாரிப்பு ஆகியவை ஞானிகளிடையே இடம் பெறச் செய்கின்றன.

7. “சிறந்த சமையல் பாத்திரமாக இருந்தாலும் அது தானாக உணவைத் தராது.”
அர்த்தம்: வளங்கள் இருந்தாலும், செயல் மற்றும் முயற்சி இல்லாமல் பயன் இல்லை.

8. “சிங்கம் பேச கற்றுக்கொள்ளும் வரை, வேட்டையின் கதை எப்போதும் வேட்டைக்காரனைப் புகழும்.”
அர்த்தம்: வரலாறு அதைச் சொல்பவரால் வடிவமைக்கப்படுகிறது; குரல் கேட்கப்படாதவர்கள் மறக்கப்படுவார்கள்.

9. “ஒரே வளையல் சிணுங்காது.”
அர்த்தம்: ஒரே மனிதன் தனியாக பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியாது — ஒத்துழைப்பு அவசியம்.

10. “இரவு எவ்வளவு நீண்டிருந்தாலும், விடியல் வரும்.”
அர்த்தம்: எந்தத் துன்பமும் என்றென்றும் நீடிக்காது; நம்பிக்கை எப்போதும் பிறக்கும்.

-பகிர்வு

No comments:

Post a Comment