Monday, 11 August 2025

148


#கற்கை_நன்றே_148

தூண்டிலின் நோக்கம் மீனைப் பிடிப்பது.மீனைப் பிடித்ததும் தூண்டிலை மறந்துவிட வேண்டும்.சொற்களின் நோக்கம் கருத்தைத் தெரிவிப்பது.கருத்துக்கள் தெரியப்படுத்தப் பட்ட பிறகு சொற்களை மறந்துவிட வேண்டும்.

சொற்கள் தகவலுக்காக உருவாக்கப்பட்டவை.ஆனால் நாம் சொற்களை பிடித்துக் கொண்டு தகவல்களை மறந்துவிடுகிறோம்

-சங் சூ

ஒவ்வொரு சொல்லும் நம் எண்ணத்தில் அதிர்வுகளை உண்டாக்குகின்றன. அந்த அதிர்வுகள் நேர்மறையாக இருக்கும் போது நமக்கு தன்னம்பிக்கை ஏற்படுகிறது. அதுவே எதிர்மறையாய் மாறுகிறபோது அது எண்ணங்களில் தாக்கத்தை ஏற்படுத்தி நமக்கு மன அழுத்தத்தையும் அச்சத்தையும் தருகிறது. 

ஐந்து வயது வரை எதனையும் கற்றுக் கொள்ளும் திறமை உள்ள குழந்தை பள்ளிக்குள் நுழைந்தவுடன் ஒரு கட்டுப்பாட்டுக்குள் வரும்போது.. உன்னால் முடியாது, உனக்கு வராதா என்ற சொல்லை கேட்கும் போது குழந்தை கடைசி வரை அதிலிருந்து வெளிப்பட முடியாமல் திணறுகிறது.
அதனால்தான் எம் எஸ் உதயமூர்த்தி போன்ற அறிஞர்கள் நம்பு தம்பி நம்மால் முடியும் ,உன்னால் முடியும் என்ற சொற்களை அதிகம் பயன்படுத்தினர்.

ஒரு விவசாயி அழகான கன்றுக்குட்டியை வாங்கிய அதை தோளில் மேல் ஏற்றிக்கொண்டு தனது கிராமத்தை நோக்கி சென்று கொண்டிருந்தார் மூன்று திருடர்கள் அவரை ஏமாற்றி அந்த கன்றுக்குட்டியை திருடுவது என்பது என்று முடிவு செய்தார்கள் முதல் திருடன் அவர் முன்னாள் சென்று ஐயா நாயை போய் ஏன் தோளில் உட்கார வைத்துள்ளீர்கள் என்றான் விவசாயிக்கு ஆச்சரியம் இது நாய் இல்லை கன்றுக்குட்டி என்றால் அவனோ நீங்கள் நாயை கன்று கட்டி என்று எப்போது சொல்லத் தொடங்கினீர்கள் என்று கேட்டு வட்டு சென்று விட்டான்.

இரண்டாவது திருடன் அடுத்ததாக சென்று நாயை போய் தோளில் வைத்துள்ளீர்களே? இது சாஸ்திரத்துக்கு விரோதம் இல்லையா? என்றார். இப்போது மீண்டும் விவசாயி இது கன்றுக்குட்டி என்று வலியுறுத்துகிறார். நீங்கள் போய் மருத்துவரை பாருங்கள் என்று சொல்லிவிட்டு அவன் சென்று விடுகிறான். இப்போது மூன்றாவது திருடன் வந்து ஐயா வீட்டிற்கு இந்த நாயையா கூட்டிப் போகிறீர்கள் என்றான். விவசாயி இப்போது அவருக்கு குழப்பம் ஏற்பட்டு கன்று குட்டியின் கயிறை தூக்கி வீசிவிட்டு நடந்து சென்றார் திருடர்கள் அந்த கண்டினை பிடித்து வைத்துக் கொண்டு சிரித்துக்கொண்டு சென்றனர். 

இதில் நாய் என்ற ஓர் எண்ணம் முதலில் ஏற்பட்டு, பின்பு சந்தேகமாய் வலுப்பட்டு, இறுதியில் ஒரு தவறான முடிவுக்கு வந்து விடுகிறார். இதேபோல் நம் மீதும் பல்வேறு எண்ணங்கள் தரப்படுகின்றன. திணிக்கப்படுகின்றன. நாம் அவற்றையெல்லாம் உண்மை என்று ஏற்றுக் கொண்டு விடுகிறோம். நமது எண்ணமும் அவர்களின் சொற்களின் பின்னே சென்று விடுகிறது.தேஜ் ஸர்ஶ்ரீ என்பவர் worry fast எண்ணம் எண்ணங்களின் விரதம் அனுசரிக்க வேண்டும் என்கிறார். இது எதிர்மறை எண்ணங்களை குறைத்து நேர்மறை எண்ணங்களை பெருக்குவதற்கு அல்லது எண்ணங்களை அலசுவதற்கு உதவி புரிவதாக சொல்கிறார். தேவையற்ற எண்ணங்களை தவிர்ப்போம் தேவை இல்லை எண்ணங்களை வளர்ப்போம் 

நற்காலை 

தோழமையுடன் மணிகண்ட பிரபு

No comments:

Post a Comment