#கற்கை_நன்றே_142
யார் எதுவும் சாதிக்க போவதில்லையோ அவர்கள் தியாகம் செய்யத் தேவை யில்லை.
சாதிக்கப் போகிறவர்கள் கட்டாயம் நிறைய தியாகம் செய்ய வேண்டும்.
யார் அதிக உயரத்தை எட்டப் போகிறார்களோ அவர்கள் அளப்பரிய தியாகங்களைச் செய்ய வேண்டியது அத்தியாவசிய மாகிறது.
ஜேம்ஸ் ஆலன்
கடந்த வாரத்தில் முகநூலில் ஒரு நண்பர் சந்தேகம் ஒன்றை என்னிடம் கேட்டார். நான் அதற்கு தகுந்த பதிலை ஆதாரங்களுடன் அளித்தேன்.பதிலுக்கு ஒரு சிறிய நன்றி கூட தெரிவிக்கவில்லை.. நான் நன்றியை எதிர்பார்க்கவில்லை ஆனால் ஒரு மரியாதைக்காகவாவது ஒரு தம்ஸ் அப் போட்டிருக்கலாம் என எண்ணினேன்.ஒரு சிலரின் எண்ண ஓட்டங்கள் இவ்வாறெல்லாம் இருக்கிறதே என வியக்கத் தோன்றுகிறது
சமீபத்தில் தீக்கதிர் நாளிதழில் ச. லெனின் எழுதிய மண்ணுயிர்க்கெல்லாம் இனிது எனும் கட்டுரை வாசித்தேன்.அதில்
1995 முதல் 2009 க்குள் பிறந்தவர்களை தலைமுறையினரை ஜெனரேஷன் Generation Z). Q (Gen 2) என்கின்றனர்.தொழில் நுட்ப அறிவில் முந்தைய தலைமுறையினரை விட அறிவு மிக்கவர்களாக உள்ளனர். பணியிலிருக்கும் திறமையானவர்கள் வேலையைவிட்டு செல்வேன் என மிரட்டும்வதும், திறமையற்றவர்ளை
வேலையைவிட்டு நீக்குவதும் சகஜமாகிவிட்டது.
ஜென் சி தலைமுறையினர் குறித்துப் பலதளங்களில் விவாதங்களும் ஆய்வுகளும் தொடர்ந்து நடந்து வருகின்றன. முந்தைய தலைமுறையினரோடு ஒப்பிடுகையில், ஜென் சி-யினர் பொறுப்பற்றவர்கள். எடுத்துக் கொண்ட வேலைகளைச் சரிவர முடிக்கத் தவறுகிறவர்கள், நிர்வாக ஒழுங்குகளை மதிக்க மாட்டார்கள், தங்களை யாரும் கேள்வி கேட்கக் கூடாது எனும் மனநிலை உடையவர்கள், நேரத்திற்கு வருவதும் நேர மேலாண்மையும் இல்லாதவர்கள் என்று மனிதனை அதிகாரிகள் குறைபட்டுக்கொள்வ தாக ஒரு ஆய்வுக்கட்டுரை தெரிவிக்கிறது. ஜென் சி-யினரை பணிக்கு அமர்த்துவதில் 75% மனிதவன் அதிகாரிகளுக்கு விருப்பமில்லை என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பொதுச்சிந்தனைக்கும் இடம் கொடுக்காமல், தான் என்கிற தன்னிலைப் போக்கை மட்டுமே ஜென் சி தலைமுறையிடம் ஆளும் முதலாளித்துவ வர்க்கம் வளர்த்துவிட்டுளளதாக கூறுகிறது.
குறைபாடுடைய முதலாளுத்துவத்திற்கு குறைபாடுடைய ஆற்றலே கிடைக்கிறது.தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபாடின்மை,குறைந்த கூலிக்கு கூடுதல் உழைப்பு என பொறுப்பற்ற முதலாளித்துவத்துக்கு ஒப்புக்கொண்டு வேலை செய்கின்றனர்.தனித்தனி உழைக்கும் எந்திரங்களாக மாறுகின்றனர்.ஒப்பந்த அடிப்படையிலேயே பெருமளவு நியமிக்கப்படுகின்றனர்.அதிக சுரண்டலுக்கு ஆளாகின்றனர்.
தனிநபரின் வாழ்விற்கும் சமூகத்திற்கும் எவ்வித தொடர்பும் இல்லை என நினைக்கிறார்கள். சமூக வளர்ச்சிக்கு தங்கள் பங்ககிப்பை விரும்புவதில்லை. பொது சிந்தனையோ பொதுநலன் சார்ந்த சிந்தனையோ இன்றி இதற்கு எதிர்மாறான சூழலில் இருக்கின்றனர்.புதிய கோரிக்கைகளுக்கு போராடுவதை விடுத்து, தற்போது உள்ள உரிமைகளைப் பாதுகாக்கப் போராடும் நிலைக்கு சமூகத்தைத் தள்ளியுள்ளது.இத்தகைய சூழலில் இவர்களும் இணைந்து செயல்படாமல் தனித்து பயணிக்கின்றனர்.
இவர்களிடம் வாசிக்கும் தன்மை குறைந்து தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்வதோடு நின்றுவிடுகின்றனர்.தற்போதைய நிலையில் பொறுமை இன்றி வேலை அழுத்தமும் மன அழுத்தமும் இருபுறம் அழுத்துகிறது. நெருக்கடிகளை எதிர்கொள்ளாத நிலை ஏற்படுத்துகிறது. உரிமைகளுக்காக போராடும் சிலர் நம்பிக்கை ஏற்படுத்துகின்றனர்.
முதலாளித்துவம் சீர்படுத்த முடியாத அமைப்பு முறையாகும். அதை அழித்தொழிப்பதே நவீன பாட்டாளி வர்க்கத்தின் பணி என்றார் லெனின். ஜென் சி-யினர்தான் இன்றைய நவீன பாட்டாளி கள். குறைபாடுடைய முதலாளித்துவம் அவர்களி டம் திணித்துள்ள குறைபாடுகளைக் களைந்து, அவர்களின் அறிவாற்றலை மன்னுயிர்க் கெல்லாம் இனிதானதாக மாற்றிட அவர்களை அரசியல்படுத்து வதும், அணிதிரட்டுவதும் அவசியமாகிறது.
ஜென் சி-யினருக்கு அடுத்து ஜென் ஆல்ஃபா (Generation Alpha) (2010 - 2024 பிறந்தவர்கள்) தலைமுறை வந்துவிட்டது. அதற்கடுத்து பீட்டா தலைமுறை பிறக்கத் தொடங்கிவிட்டது. இளம் பாட்டாளிகளும், மாணவர்களுமாக உள்ள ஜென் சி-யினரை அணிதிரட்டுவதும் அடுத்தடுத்த தலைமுறையை ஒழுங்கமைத்து கூர்தீட்டுவதும் காலத்தின் கட்டாயமாகும்.
நற்காலை
தோழமையுடன் மணிகண்டபிரபு
No comments:
Post a Comment