சின்னச்சின்ன நற்காரியங்களைச் செய்வதில் கவனம் செலுத்தும்போது, மனம் வலுப்பெற்று எல்லையற்ற தயாள மனப்பான்மையை வளர்க்கிறது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், உங்களுக்கென ஒதுக்கப்பட்ட வேலையைச் செய்வதற்கும், செய்ய வேண்டிய மிச்சமுள்ளவற்றைத் திட்டமிட மட்டும் இங்கில்லை. உங்களுக்கான நாட்களை வெறும் வேலைகளால் மட்டுமே நிரப்ப வேண்டியதில்லை. சுத்தம் செய்ய வேண்டிய, சேகரித்து வளர்த்தெடுக்க வேண்டிய சின்னச்சின்னக் காரியங்களிலும் தொடர்ந்து கவனம் செலுத்துங்கள்.
குறித்த எல்லாம் முடிந்த பிறகு, உதாரணமாக, சமையலறையில், மதிய வேலையை முடித்தவுடன், இன்னும் கவனிக்க வேண்டியவை ஏதுமுள்ளனவா எனும் விவரத்தையும் கவனியுங்கள். ஒவ்வொரு நாளும் இரண்டு கூடுதல் காரியங்களைத் தேடி நிவர்த்தி செய்யுங்கள். ஒதுக்கப்பட்டவற்றை மட்டுமே செய்யும் வழக்கதை விட்டுவிடுங்கள். சின்னச்சின்னக் காரியங்களைக் கவனித்துச் செயலாற்றுவதில் தான் அருங்குணங்கள் வளரும்.
~ தனிசாரோ பிக்கு
"எல்லையற்ற இதயத்தை வளர்த்துக் கொள்ளுங்கள்" உரை
-அமலன் ஸ்டான்லி
No comments:
Post a Comment