Tuesday, 12 August 2025

149


#கற்கை_நன்றே_149

போட்டிக்கும்... பொறாமைக்கும் என்ன வேறுபாடு?

 அடுத்தவர்களைவிட நாம் உயரமாக இருக்க வேண்டும் என முனைவது போட்டி. நம்மைவிட மற்றவர்கள் குள்ளமாக இருக்க வேண்டும் என நினைப்பது பொறாமை. செயல்பாட்டில் இருக்கிறது போட்டி. வயிற்றெரிச்சலில் இருப்பது பொறாமை!

-இறையன்பு

எட்மண்ட் ஹிலாரி எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த முதல் மனிதர். அவரிடம் பலரும் கேள்வி கேட்டார்கள். அதில் ஒரு முக்கியமான கேள்வி 

நீங்கள் மலை ஏறிய போது எது உங்களுக்கு மிகவும் சவாலாக இருந்தது? குளிரா? பனிப் பாறைகளா? சுவாசிப்பா என்று பலரும் பல மாதிரி கேட்டார்கள்.

ஹிலாரி நீங்கள் கூறிய எந்த விஷயம் எனக்கு சவாலாக இல்லை. ஆனால் அவ்வப்போது என் உள்ளத்தில் தோன்றிய ஒரு எண்ணத்தை வெல்வதை எனக்கு சவாலாக இருந்தது. அதாவது "உன்னால் இந்த சிகரத்தை அடைய முடியாது. பலரும் முயன்று தோற்றுப் போயிருக்கின்றார்கள். உயிரைக் கூட விட்டிருக்கின்றார்கள். எனவே உன் முயற்சியை விட்டுவிடு" என்று என் மனதில் தோன்றிய எதிர்மறை எண்ணம் தான் எனக்கு சவாலாக அமைந்தது. ஆயினும் நான் அந்த எண்ணத்தை புறந்தள்ளி, விடாமல் போராடியதால் வெற்றி பெற்றேன் என்று சொன்னார். நாம் வெற்றி கொள்வது மலைகளை அல்ல நம்மை நாமே என்று இறுதியாக கூறினார்.

நாம் நம்முடைய எண்ணங்களை மாற்றிக் கொள்ளாமல் எதுவும் மாறப்போவதில்லை. ஆனாலும் நம் மனது உண்மையில் அதிர்ஷ்டத்தை நம்பிக் கொண்டிருக்கிறது. யாராவது ஒருவர் கடவுள் ரூபத்தில் வந்து நமக்கு உதவுவார் என்றும், கடவுளே வந்து உழைக்காமல் ஏதேனும் ஒரு பலனை தருவார் என்றும் நாம் எண்ணிக் கொள்கிறோம்.

சமீபத்தில் இணையத்தில் படித்த ஒரு கதை நினைவுக்கு வருகிறது. 
ஒருவன் காலையில் தூங்கி எழுந்தான்...

காலையில் ஒருவன் எழுந்து கொள்ளும் போது
சுவரில் மாட்டப்பட்டிருந்த கடிகாரத்தில் 9 ஆகிவிட்டதை காட்டும் விதமாக 9 மணிஅடித்து ஓய்ந்தது....

குளித்து முடித்து... காலண்டரில் தேதியை கிழித்தான்... 8-ம் தேதி‌ போய்.. இன்று தேதி 9 எனக்காட்டியது...
.
வங்கிக்கு சென்றுவரலாம் என்று வங்கிக்கு செல்ல ஆட்டோ பிடித்தார்...
அதில் ஆட்டோ எண் 9 என வட்டம் போட்டு எழுதியிருந்தது...

வங்கியில் இறங்கி வங்கியில் நுழையும்போதுதான் கவனித்தான் வங்கியின் க‌தவு எண் 99 என இருந்தது..

வங்கியின் உள்ளே சென்று கணக்கரிடம் தன்னுடை பாஸ்புக்கை காண்பித்து பண இருப்பை சரிப்பார்த்தான் அதில் 9 இலட்சங்கள் உள்ளது எனக்காட்டியது...

இவனுக்கு ஆச்சரியமாக இருந்தது...
என்ன காலையில் இருந்து நமக்கு 9 எண் மட்டுமே கண்ணில் படுகிறதே என்று அப்போதுதான் அவனுக்கு நினைவுக்கு வந்தது...

இன்று ஏதோ நமக்கு இந்த 9 என்ற எண்ணில் அதிர்ஷ்டம் இருக்கிறது என்று நினைக்கிறேன்...
இந்த அதிர்ஷ்டத்தை எப்படியாவது பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று நினைத்தான்...

அதன்படி அந்த 9 இலட்சத்தையும் எடுக்க செக் எழுதி கொடுத்தான்...
அவனுக்கு வந்த டோக்கன் எண் 999
அவனுக்கு மிகுந்த ஆச்சரியம்...

 அப்போதுதான் அவனுக்கு குதிரைப்பந்தையம் நினைவுக்கு வந்தது...நேராக குதிரைப்பந்தையம் நடக்கும் அந்த இடத்துக்கு சென்றான்..வாயில் எண் 9 வழியாக உள்நுழைந்தான்.... 9-வது போட்டியில் பங்கெடுத்துக்கொண்டான்....
பந்தையமாக நான் 9 இலட்சத்தை கட்டுகிறான். 10 குதிரைகள் ஓடியதில் குதிரை எண் 9 என எண்கொண்ட குரையின் மீது தன் மொத்தப்பணத்தையும் கட்டினான்....

போட்டி துவங்கியது...
குதிரைகள் சீறிப்பாய்ந்து ஓடின...
பந்தையம் கட்டியவர்கள் பரபரப்பாய் ஆரவாரம் செய்துக்கொண்டிருந்தார்கள்....
போட்டி முடிந்தது....

இவன் பணம் கட்டிய குதிரை ஒன்பதாவதாக வந்தது....

நற்காலை

தோழமையுடன் மணிகண்ட பிரபு

No comments:

Post a Comment