Sunday, 7 September 2025

164


#கற்கை_நன்றே_164

ஊடலில் பிடிவாதம் கூடாது.ஊடல் ஊறுகாயை போல் இருக்க வேண்டும்.அவ்வப்போது தொட்டுக் கொள்ளலாம்.உணவு போல் உட்கொண்டால் வெறுப்புதான் மீதமாகும்.

-சங்கப்பாடலில்

பிடிவாதங்கள் ஆரம்பத்தில் நன்றாய் இருக்கும்..விரும்பியது கிடைக்கும் போது சிறந்த உக்தியாக தெரியும். ஆனால் காலப்போக்கில் தளர்ந்து விடும்.அன்பின் முன் மட்டும் பிடிவாதம் குறையும்.குறிப்பிட்ட வயதுக்கு மேல பிடிவாதங்களுக்கு மருந்தாக சமரசமே தீர்வாக மாறுகிறது. சமரசங்களே அன்பு அதுவே வாழ்க்கையாக மாறிவிடுகிறது.

பிடிவாதத்தை பலர் விடாமுயற்சி 
 என்று குழப்பிக் கொள்கிறார்கள்.
விடாமுயற்சி என்பது, ஒரு செயலில் பல முறை தோற்றாலும், மனம் தளராமல் வெற்றி இலக்கை அடைய தொடர்ந்து அச்செயலை செய்து முடித்தல்.

பிடிவாதம் என்பது எப்பாடு பட்டாவது (நல்லது , அல்லது) எச்செயலை செய்தாவது, தனக்கு வேண்டியதை அடைவது. இரண்டுக்கும் பல ஒற்றுமைகள் இருப்பது போல தோன்றினாலும், இரண்டும் வெவ்வேறானவை

நாம் அன்றாடம் சந்திக்கும் நபர்களில் கீழ் காணும் நபர்களையும் கடந்து செல்கிறோம்.

பிடிவாத மனிதர்கள் ஐந்து வகைகளில் இருப்பதாக பெர்னார்டு பெர்னோவிஜ் கூறுகிறார்

1.I know all:எனக்கு எல்லா தெரியும் எனும் அகங்காரம் அதிகம்.மற்றவர் பேசிக் கொண்டிருந்தாலும் தான் சொல்ல நினைப்பதை சொல்லிக் கொண்டே இருப்பார்

2.Grenade:சிறிய விஷயத்தை பெரியது போல் சொல்லுவார். தாம் சொல்வதை மட்டும் மற்றவர் கேட்க வேண்டும் என நினைப்பவர்

3.Missing track:முக்கிய விசயத்தை விட்டுவிட்டு சிறிய விசயத்தை அதிக நேரம் விவாதிப்பது.

4.Negative:எந்த விஷயத்தையும் இல்லை,கிடையாது என்பது.இவர்களை ஒப்புக் கொள்ள வைப்பது கடினம்

5.May be:எந்த விசயத்தையும் ஆதரிக்க மாட்டார்.முடிவெடுக்க நீண்ட நேரம் ஆகும்

கொள்கைப் பிடிப்புடன் கூடிய பிடிவாதம் வாழ்வை முன்னேற்றும்.. ஆனால் வீண்பிடிவாதம் நம் சிந்தனையை சிதைக்கிறது. பிடிவாதத்திற்கான கடிவாளம் போடுவதே சிறப்பு. பிடிவாதத்தை நேர்மறையில் செலுத்துவது சிறப்பு.
காத்திருப்பதற்கும்
பொறுத்திருப்பதற்கும்
ஒரு பற்றுதல் வேண்டும் என்கிறார் மனுஷ்.அந்த காத்திருப்பு மனநிலை நல்ல விஷயங்களில் பொறுத்திருந்து விடாமுயற்சியுடன் தொடர உதவும்.

நற்காலை

தோழமையுடன் மணிகண்டபிரபு

No comments:

Post a Comment