Monday, 8 September 2025

165


#கற்கை_நன்றே_165

பிரச்சினைகளே இல்லாமல் அல்லது பிரச்சினைகளைக் கண்டு ஒதுங்கி வாழ்வதல்ல மன ஆரோக்கியம். பிரச்சினைகளுடன் வாழப் பழகுவது, அதன் தீர்வைத் தேடுவது, அதை நோக்கிப் பயணிப்பது, அந்தத் தீர்வில் இருந்து கற்றுக்கொள்வது, கற்றுக் கொண்டதை வைத்து எதிர்வரும் பிரச்சினைகளைக் கலைவது, அதைத் தடுப்பது என்பவைதான் உண்மையான மன ஆரோக்கியம்.

-சிவபாலன் இளங்கோவன்

Ho'oponopono என்பது ஹவாய் நாட்டின் பழமையான மன்னிப்பு மற்றும் சமரசத்தின் ஆன்மிக நடைமுறையாகும்.இதன் பொருள் சரிசெய்வது அல்லது விஷயங்களை முறையாக திருத்துவது ஆகும்.
இதில், நம் வாழ்க்கையில் ஏற்படும் எந்த பிரச்சனையும், நமது மனதின் பிரதிபலிப்பாகவே விளங்குகிறது.

Ho'oponopono முறையில் தன்னிலை பொறுப்பு (total responsibility) என்பது முக்கியக் கருத்து; அனைத்து அனுபவங்களும் நம்மால் உருவாவதாகக் கருதப்படுகிறது
இதன் அடிப்படை கோட்பாடு—நாம் எதிர்கொள்ளும் எல்லா பிரச்சனைகளுக்கும் நாமே பொறுப்பு! பிறரை குற்றம்சாட்டுவதற்குப் பதிலாக, நம்முடைய உள்ளத்தை பரிசோதித்து, தன்னம்பிக்கை மற்றும் தன்னிலை மாற்றம் மூலம் வெளிப்புற உலகை மாற்றலாம். “I am sorry, Please forgive me, Thank you, I love you” எனும் நான்கு முக்கியமான வார்த்தைகளின் மூலம், மனதின் ஆழத்திலிருந்து நம் துன்பங்களை தீர்த்துக்கொள்ளலாம் என்கின்றனர்.
தொடர்ந்து இதனை சொல்லும் போது மாறுபட்ட எண்ணங்களை மாற்றலாம்.

அமெரிக்காவில் தற்போது இக்கருத்து குழந்தைகளுக்கு வேறு ஒரு முறையில் சொல்லப்ப்பட்டு வருகிறது. எந்த பிரச்சனைக்கும் உன் பார்வையிலிருந்து அணுகி முடிவெடு என்பது.இது மிகவும் கடினமான ஒன்றுதான்.நாம் சந்திக்கும் பிரச்சனைகளுக்கு நாமே காரணம் என்பதை உணர்வதாகும். ஆனால், இதை ஏற்றுக்கொள்வது மிகுந்த சக்தி வாய்ந்த ஒரு முடிவாகும். ஏனெனில், பிறரை குற்றம்சாட்டாமல், நாமே நம் வாழ்க்கையை மாற்றும் சக்தி கொண்டவர்கள் என்பதை உணர முடியும். இதனால், நாம் நம்மை வளர்த்துக்கொண்டு, மன அமைதியை அடையலாம்

நாம் நினைப்பதற்கும் உண்மையிலேயே நிகழ்வதற்கும் இடையே ஆழமான தொடர்பு இருக்கிறது. Ho'oponopono-வில், நமது மனதின் ஆழத்தில் பதிந்துள்ள துரிதமான எண்ணங்கள், பழைய நினைவுகள், கோபம், வருத்தம் ஆகியவை நம் வாழ்க்கையில் பிரச்சனைகளை உருவாக்குகின்றன. நாம் நம் உள்ளத்திலேயே இந்த எண்ணங்களை மாற்றி அமைத்தால், நம் சுற்றியுள்ள உலகமும் அதற்கேற்ப மாறத் தொடங்கும்.

 உதாரணமாக, ஒருவருக்கு வேலை இடத்தில் தொடர்ந்து பிரச்சனைகள் ஏற்பட்டால், அவர் தனது உட்புற உணர்வுகளை மாற்றினால், வேலை இடத்தில் நல்ல மாற்றங்கள் தானாகவே ஏற்படும் என்கிறார்கள். வேலை மீதான வெறுப்பே சலிப்படைய வைக்கிறது.இந்த வெறுப்பை நாம் மாற்றுவதன் மூலம் வேலை குறித்த நம் எண்ணம் மாற்றமடைகிறது.

 எந்த ஒரு பிரச்சனையும் நேர்ந்தாலும், அது நம்மிடம் ஏன் வந்தது என்பதை உணர்ந்து, மனதிற்குள் Ho'oponopono மந்திரங்களை சொல்லி, தன்னிலை மாற்றத்தை ஏற்படுத்தினால், வாழ்க்கை சிறப்பாக மாறும்.

காபியின் தரம் என்பது, கோப்பைகளால் தீர்மானிக்கப்படுவதில்லை. வாழ்க்கையில் முழுமை என்பது, நம்மைச் சுற்றி இருக்கும் மற்றவர்களால் தீர்மானிக்கப்படுவதில்லை.
சிறந்த கோப்பைகளைப் பற்றியே யோசிக்கும் நமக்கு, பல சந்தர்ப்பங்களில் காபியின் சுவை தெரிவதில்லை.அதே போல் பணத்தையும் பதவியையும் விடாமல்

துரத்தும் நாம், அவற்றை விடவும் முக்கியமான வாழ்க்கையை அனுபவிக்கத் தவறி விடுகிறோம். நமது துன்பங்களுக்கு எல்லாம் இந்த தவறான அணுகுமுறை தான் காரணம் என்கிறார் சுகபோதானந்தா

நற்காலை

தோழமையுடன் மணிகண்டபிரபு

No comments:

Post a Comment