Saturday, 6 September 2025

மகாத்மா காந்தியை, காந்தியடிகள் என்று முதல் முதலில் எழுதியவர் திருவிக. சிலப்பதிகாரத்தில் வருகிற கவுந்தியடிகளைப் பற்றிப் படித்தபோது, மகாத்மாவை காந்தியடிகள் என்று எழுத வேண்டும் என்று அவருக்குத் தோன்றியிருக்கிறது. தொடர்ச்சியாக அவர் அப்படியே எழுதிக்கொண்டிருந்ததைக் கண்டு பலரும் காந்தியடிகள் என்றே எழுத ஆரம்பித்து, அது நிலைத்துவிட்டது.ஆனால் அன்னி பெசண்ட்டை ‘அன்னை வஸந்தை’ என்று திருவிக எழுதியிருக்கிறார். அது நிலைக்கவில்லை.(கு. அழகிரிசாமியின் நான் கண்ட எழுத்தாளர்கள் நூலில் படித்தது.)

No comments:

Post a Comment