Saturday, 18 July 2026

சக்திவேல்


ஒருபோதும் அன்பு என்பது ஒரு மக்கள் இயக்கமாக இருந்ததில்லை. உண்மையில் யாருமே சுதந்திரமாக இருக்க வேண்டும் என்று விரும்பியதில்லை. ஒரு சில மனிதர்களின் அன்பினாலும், தீராத பேரார்வத்தினாலும் தான் இந்த உலகம் ஒன்றாகப் பிணைக்கப்பட்டிருக்கிறது. உண்மையில் அது அப்படித்தான் இணைக்கப்பட்டிருக்கிறது. இல்லையென்றால் நீங்கள் எப்போதோ விரக்தியில் மூழ்கியிருப்பீர்கள்.

ஏதாவது ஒரு மத்தியானப் பொழுதில், ஏதாவது ஒரு நகரத்தின் தெருவில் ஜாலியாக நடந்து செல்லுங்கள். உங்களைச் சுற்றியிருப்பவர்களைக் கூர்ந்து கவனியுங்கள். நீங்கள் யாரைப் பார்க்கிறீர்களோ, அவர் வேறு யாருமல்ல, அவர் நீங்களே தான் என்பதை மட்டும் நினைவில் கொள்ளுங்கள். நீங்கள் பார்க்கும் ஒவ்வொரு மனிதரும் நீங்களே தான்.
நீங்கள் அந்த மோசமான
மனிதராக இருந்திருக்கலாம். நீங்கள் அந்த அரக்கனாக இருந்திருக்கலாம் அல்லது அந்த அதிகார வெறி மிக்க
காவல்துறை அதிகாரியாக
இருந்திருக்கலாம். அவர்களைப் போல
மாறாமல் இருக்க, உங்களுக்குள்ளேயே நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.

- ஜேம்ஸ் பால்ட்வின்

No comments:

Post a Comment