Wednesday, 30 July 2025

96


#Reading_Marathon2025
#25RM055

Book No:96/100+
Pages:-206

நிறை செம்பு
நீரில் விழும் பூக்கள்
-கழனியூரன்

கிராமிய எழுத்துக்களையோ நாட்டார் வாழ்வியல் குறித்த செய்திகளை படிக்கும் போது நம்மளுக்கு வாசிப்பு அனுபவத்தோடு ஆச்சரியமும் ஏற்படுகிறது நாம் பார்க்கத் தவறிய அல்லது நம்முடைய முன்னோர்களின் வாழ்வியல் முறைகளை நாம் கண்டுகொள்ள பெரிதும் உபயோகமாய் இருப்பது நாட்டார் வழக்கில் தான் நாட்டார் மக்களின் நம்பிக்கை எவ்வாறு எல்லாம் அக்காலத்தில் இருந்து வந்தது என்பதனை செவி வழியாக கேட்டு அதனை பதிவு செய்வது என்பது மிகப்பெரிய வேலை அந்த வேலையை களனியூரன் அவர்கள் அடுத்த தலைமுறை மக்களுக்கு கொடுத்துள்ளார்.

தமிழர் நாட்டார் மரபுகளில் மறைந்து போன அல்லது பதிவு செய்யப்படாத பல வரலாற்று தடயங்களை ஆய்வு மூலமாக புத்தகங்கள் விளக்குகின்றன இந்நூல் நம் நிலம் சார்ந்த மக்களின் வாழ்க்கை மரபு மற்றும் எதார்த்தங்களை நம் கண் முன் கொண்டு வந்து நிறுத்துகிறது.

நாம் அன்றாடம் பயன்படுத்தும் பாய் குறித்த வரலாற்று தகவல்களை சுவாரசியமாக பதிவு செய்துள்ளார். உதாரணத்திற்கு சாணம் மெழுகிய வெற்றி தரையில் படுத்து உறங்கிய ஆதி மனிதன் பாய்களை பின்ன ஆரம்பித்தான். தென்னை ஓலையில் பாய்களை தயாரித்து வெளிப்புறமாக வரும்படி பின்னியது..அது அவனுக்கு சுகமாகவும் குளிர்ச்சியாகவும் இருந்தது. இதேபோல் பனை ஓலையை வெட்டி  விசிறி போல் விரித்து அதன் மேல் மண்ணை அல்லது மணலை அள்ளிப் போட்டு வைத்தால் படுப்பதற்கு பனை ஓலையால் ஆன இரண்டு பாய்கள் கிடைத்து விடும்.இப்படி பாய்களின் வரலாறும் அதனை பயன்படுத்திய முறைகளும் பாய்கள் எவ்வாறு எல்லாம் மேம்பட்டு கொண்டு வந்தன என்பதையும் கூறியுள்ளார்.

நாட்டார்களின் நம்பிக்கைகள் என்றாலே அவை மூடநம்பிக்கைகள் என்பது தான் நம் நினைவுக்கு வரும். காரண காரிய தொடர்புகளுக்கு உட்பட்டு சான்றுகளின் வாயிலாக நிறுவ முடிந்ததை தனனம்பிக்கை எனவும்,அவை இல்லாமல் காரண காரிய தொடர்பின் வாயிலாகவோ விளக்க முடியாதவற்றை மூடநம்பிக்கை எனவும் நாட்டுப்புறவியல் துறை சார்ந்த ஆய்வாளர்கள் கூறுகின்றார்கள். தனிமனிதர்களின் நம்பிக்கையாக உதித்து காலப்போக்கில் அவை சமுதாய நம்பிக்கைகளாக மாற்றம் பெறுகின்றன அதற்கு உதாரணமாக ஒரு கதையையும் இதில் கூறியிருக்கிறார்.
 

துக்க வீட்டிற்கு வந்தவர்களை வா என்று கேட்கக் கூடாது. அதேபோல் போகும்போது போய் வருகிறேன் என்று சொல்லிக் கொள்ளாமல் கிளம்புவது நல்ல நம் பிள்ளைக்கு அடையாளம் சொல்லாமல் கொள்ளாமல் போகிறது என்ற பழமொழி இதன் அடியாக பிறந்தது. இது ஒரு உளவியல் சார்ந்த நம்பிக்கையாக பார்க்கப்படுகிறது.

முயல் நட்டிய வேலியைத் தாண்டாது வெட்டிய குளத்தில் தண்ணீர் குடிக்காது.இது வேட்டைக்காரர்களின் நம்பிக்கை இது.

ஆதிமனிதன் காடுகளில் வாழ்ந்தான். இப்போது இருப்பது போன்று அப்போது மருத்துவர்கள் இல்லாவிடில் மனிதர்களைப் போலவே விலங்குகளுக்கும் வைத்தியம் பார்த்தவர்கள் தான் நாட்டு வைத்தியர்கள் என்று அழைக்கப்பட்டனர். மிருகங்களுக்கான நாட்டு வைத்திய முறைக்கு வாகடம் என்று பெயர். இத்தகைய வைத்திய முறை வாய்மொழி வடிவிலேயே பாதுகாக்கப்பட்டு வந்தது. இதில் குதிரை வாகடம் கழுதை வாகடம் பசு வாகடம் என்று தனித்தனி நூல்களும் பின் நாட்களில் எழுதி வைக்கப்பட்டன. திருநெல்வேலியில் ஆசிரியர் அவர்கள் தொகுத்த நோய்களின் பட்டியல் கொடுக்கப்பட்டுள்ளது. மாடுகளுக்கு எந்த வகையான நோய்கள் வரும்.. அமுரி நோய், இந்து நோய், குதிரை படுவன் என பல்வேறு நோய்களும் அதற்கான தீர்வுகளும் கொடுக்கப்பட்டுள்ளன.

அறிவியல் சார்ந்த நம்பிக்கைகளாக தென்கோடியில் வெள்ளி தோன்றினால் அந்த ஆண்டு பஞ்சம் நிலவும் .கர்ப்பிணி பெண்கள் மலை ஏறக்கூடாது ஏனெனில் கரு கலைந்து விடும். ஈர ஆடைகளை அணிந்து கொண்டு மங்கள காரியங்களில் ஈடுபடக்கூடாது. ஏனெனில் அதிக நேரம் உடுத்திக் கொண்டு இருப்பதால் தன் உடலின் தட்பவெப்ப நிலை சீர்குலையும். விக்கலை நிறுத்த அதிர்ச்சி வைத்தியம் கொடுப்பது. அன்னத்தை வீசி எறிய கூடாது அதாவது வீசி எறிந்து வீணாக்கக்கூடாது. மூஞ்சூர் எலியை கொன்றால் தலைவலி வரும் என்பது மூஞ்சூர் என்பது அரிய வகை உயிரினம் அதனை அழியாமல் காக்கும் பொருட்டு அவ்வாறு சொல்லி இருக்கிறார்கள். வெறும் உரலை ஆட்டக்கூடாது. அவ்வாறு ஆட்டினால் அதன் உட்புறம் கல் கரைந்து அதிகமான சத்தம் ஏற்படும்.

இவை தவிர மறைவாய் சொன்ன கதைகள், குழந்தைகளுக்கு பாடும் தாலாட்டு, முஸ்லிம் நாட்டார் இயல் தாலாட்டு, அன்னபூரணியின் அவல கதை, விடுகதை, பேய் கதைகள், புராண விருச்சத்தில் வரும் கிளைக் கதைகள் எவ்வாறு நாடாரியோடு தொடர்பு கொண்டு உள்ளன என்பதை பற்றியும் அங்கு நாட்டாரியியலில் மக்களை ஆண்ட சிறு அரசர்கள் பற்றிய கதைகளும் தெருக்கூத்தும் கொடுக்கப்பட்டுள்ளன.

நாட்டின் நிலவியல், வாழ்வியல், மற்றும் மரபுகள் பற்றிய புதிரானத் தொடர்புகளை ஆராய்கிறார்.கடந்த காலங்களோடு இணைந்திருக்கும் மரபு அம்சங்கள் எவ்வாறு தொடர்ந்து வாழ்வோடு இன்று நிறைந்துள்ளன என்பதை இந்நூல் விவரிக்கிறது.நமக்குத் தெரிந்த மரபு, மரபு வழக்கங்கள் மீது புதிய பார்வையை ஏற்படுத்துகிறது

தொடர்ந்து வாசிப்போம் தோழமையுடன் மணிகண்ட பிரபு

No comments:

Post a Comment