Tuesday, 22 July 2025

91


#Reading_Marathon2025
#25RM055

Book No:91/100+
Pages:-158

‘எழுதித் தீராத பக்கங்கள்’

- செல்வம் அருளானந்தம் 

விண்வெளி வீரர் யூரிககாரின் விண்வெளி பயணத்தில் பூமியைப் பார்த்து.. என் பூமி எவ்வளவு அழகாக இருக்கிறது. வெளியே வந்து பார்க்கும் போது தான் நாம் வாழும் வாழ்க்கை, ஊர், நாடு எவ்வளவு அழகென்று தெரியவரும். இப்புத்தகத்தின் முக்கிய அம்சமே ஊரைவிட்டு செல்லும் அகதியாக செல்லும் ஒருவன்.. இறுதவரை பிறந்த நாட்டை நினைத்து வாழ்வதுதான்.புலம்பெயர் வாழ்க்கையின் பெருந்துணை  பகல் கனவுகள்தான்.இறந்தபின் வரும் பிணம் எனும் பெயர்போல நாட்டை விட்டு சென்றால் அகதி எனும் பெயர்தான் சொந்தம்.

தழும்புகளைத் தடவிக்கொண்டே காயங்களை பற்றிப் பேசும் போது அதுவலியாகத் தெரியாது.. அனுபவமாகத் தெரியும்.கஷ்டமான வாழ்க்கையை பின்னால் எண்ணிப் பார்க்கும் போது அது சாகசமாகத் தெரியும். நாமா அந்த சவால்களைத் தாண்டி வந்தோம் என எண்ணத்தோன்றும்.எழுத்தாளர் இனப்போராட்டத்தால் புலம்பெயர்ந்த

துக்க அனுபவத்தினை இப்புத்தகத்தில் பதிவு செய்துள்ளார்.
வாழ்க்கை மற்றும் போராட்டங்களின் கசப்பையும், இனிமையையும் சமநிலையில் கூறுகிறார்.

தன்னைப்ப்போலவே அயல் நாட்டில் புலம்பெயர்ந்த ஒருவரை சந்தித்து உரையாடுகிறார்.அதில் கேலியும் கிண்டலும் தெரிகின்றன.மதுவுடன் சமையல் செய்யப்படும் ஆண்கள் கடந்த கால ஏக்கச் சுவைகளில் ஒன்றாகும்.புன்னகையும் வெரிகுட் எனும் வார்தையும் சிறந்த சமாளிப்பு எந்திரமாக பயன்படுகிறது.

பிரான்ஸ், கனடா,ஜெர்மன் என புலம்பெயர் வாழ்வு அமைந்தது. உணவுச்சாலையில் பாத்துரம் கழுவுதல்,துப்புரவு, வீட்டுவேலை என இவைமூன்றும்தான் பெரும்பாலும் வழங்கப்படும். மொழி தெரியாததால் அடிக்கடி வேலை இழப்பு என தன் அனுபவத்தை கூறுகிறார். ஒரு இடத்தில் விசா பேப்பரை அங்குள்ள அலுவலரிடம் காட்டிய போது.. அவர் சிறுகதை வாசிப்பது போல நீண்ட நேரம் எடுத்துக் கொண்டார் என்பார்.

அங்கு பணிபுரியும் ஒரு பெண் வெரிகுட் என்றாள்.அதற்கு பெரிய அர்த்தமெதுவும் அவளிடம் இருப்பதாக தெரியவில்லை என்று பகடி செய்கிறார்.

அயல்நாட்டு நண்பர்களுடன் சேர்ந்து குடிப்பது கேளிக்கையில் ஈடுபடுவது என செல்லும் போது..உள்ளூரில் ஜாதி பார்க்கும் அவர்கள் அங்கு சென்றவுடன் யாரும்  ஜாதி பார்க்கவில்லை என்பது பெரும்வியப்பாய் பட்டது அவருக்கு.

ஆனால் அரசியல் பேசுகிறார்கள்.  தமிழ் தேசியத்துக்கும் கம்யூனிஸ்ட்டும் இடையில் வாக்குவாதம் செய்கிறார்கள்.ரசிக சண்டை எம். ஜி.ஆர், சிவாஜிக்குமிடையே நடக்கும்.

ஞாயிற்றுக்கிழமை சமையல் இடியாப்பத்துக்கு முயன்று முறுக்கு தின்று மகிழ்வதுதான்.மண்ணின் மனம் போல் இனிய மணம் ஏதுமில்லை.

அந்த வீட்டின் ஜன்னல் சுவரிலும் இருந்தது..கூரையிலும் இருந்தது எனும் வரி சிந்திக்க வைக்கும்படி இருந்தது.ஆசிரியர் தனது சொந்த அனுபவங்களை மிக நுட்பமாகவும், நேர்மையாகவும் பகிர்கிறார். குறும்பான நகைச்சுவை, வாழ்க்கைப் பெருமூச்சு, பழக்கம் மற்றும் சூழல் வித்தியாசங்கள் – என்பவற்றை ஒவ்வொரு கட்டுரையிலும் வாசகன் உணர முடிகிறது.

 முதல் தலைமுறை புலம்பெயர் வாழ்வில் வரும் சிரமங்கள், எதிர்ப்புகள், மற்றும் சோகம் வரை, மனதைத் துளைக்கும் வகையில் வெளிப்படையாகக் கூறுகிறார். துயரமான அனுபவங்களைக் கூட நகைச்சுவையாக எழுதும் அவர் செம்மையான மனநிலையை வெளிப்படுத்துகிறார்.

பிரான்சில் தங்கியிருக்குமிடத்தில் வேறு ஒரு தமிழர் தங்க வருகிறார். அப்போது போர் பதட்ட சூழல்..இருப்பது பிரான்ஸ் என்றாலும் இலங்கையில் நடப்பது அவர்களுக்கு பதட்டத்தையே தருகிறது.
தாயகம் பற்றிய ஏக்கமும் புதிய சூழலுக்கிடையே உள்ள ஒட்டாத வாழ்வும் அவர்களை அலைகழிக்கிறது. தனிமையான பொழுதுகளில் மெல்லிய விளக்கொளியில்  ஊரில் உள்ளவர்களை நினைக்க வைக்கிறதுஎன்பது நமக்கும் ஏக்கத்தை வரவைக்கிறது. 

தயக்கங்கள் சோர்வாக்கும் போது காரணத்தோடும் காரணம் இல்லாமலும் மகிழ்ச்சி தரும் வேளையில் சில இடங்களை தேடி வருவார்.பாரிஸ் நகர சுய நினைவுகளில் மூழ்குவதற்கான இடம் அது.தன்னைத் தவிரி எல்லாரும் சந்தோசமாய் இருப்பது எரிச்சல் தரும் விஷயம்.விதியை நோவதைத் தவிர வேறு என் செய்ய முடியும். வேறு நாட்டிற்கு பறக்க வேண்டிய நேரம் வந்து..அட்லாண்டிக்சமுத்திரத்தில் பறப்பதுடன் இந்த வாழ்வியல்  அனுபவம் தொடர்கிறது

தொடர்ந்து வாசிப்போம்

தோழமையுடன் மணிகண்டபிரபு

No comments:

Post a Comment