#Reading_Marathon2025
#25RM055
Book No:93/100+
Pages:-248
சலூன்
-க.வீரபாண்டியன்
பிம்பங்களற்ற தனிமையில் ஒன்றிலொன்று
முகம் பார்த்தன சலூன் கண்ணாடிகள்.
-நா.முத்துக்குமார்
எல்லோரும் சிறுவயது முதல் மாதந்தோறும் செல்லும் இடம் சலூன் கடை. குழந்தையா இருக்கும்போது பலகை மேல அமர்ந்து முடி வெட்டியது ஒரு காலம் இயற்கை பலருக்கு குறிப்பிட்ட வயதுக்கு பிறகு சலூன் கடைக்கு செல்லும் வாய்ப்பை தருவதில்லை சலூன் கடைகள் என்றாலே நமக்கு மனதுக்கு பிடித்தவர் முடிவெட்டினால் தான் குடும்ப மருத்துவர் நமக்கு நோய்க்கான சிகிச்சை அளித்தது போல ஒரு மனதிருப்தி அடுத்த முறை செல்வது வரை இருக்கும் வேறு யாரையும் யாரேனும் முடிவெட்டி விட்டாலோ மனதுக்கு ஒப்பவே ஒப்பாது மீண்டும் அவரிடம் சென்று முடிவெட்டினால் தான் மனம் திருப்தி அடையும்.
பள்ளிக்கூடத்துக்குச் செல்லும் போது முடியை ஒட்ட வெட்டி விடுங்கள் என்பதுதான் ஒவ்வொரு குடும்பத்தினரும் வேதவாக்கு ஆகும். கையில் பிடிக்க முடி இருக்கக் கூடாது என்பது ஒரு காலத்தில் ஒழுக்கத்தின் மதிப்பீடாக பார்க்கப்பட்டது. கண்ணாடி டப்பாவில் இருந்து பீச்சி அடிக்கும் தண்ணீருக்காக வெட்கப்படாத ஆண்களே இருக்க முடியாது அந்த குதூகலம் இளமையில் அவசியம் அனுபவிக்க வேண்டிய ஒன்று. முன்பு வானொலி ஒலித்துக் கொண்டிருக்கும் அழகிய பாடல்கள் கேட்கும். இன்று தொலைக்காட்சி வந்த பிறகு அதில் பார்க்கும் படங்களும் கேட்கும் பாடல்களும் என்றும் இனியவை தான்.
கதையின் நாயகன் ஆனந்தன் முருகையா அமெரிக்கா செல்வதற்காக அவசரமாய் விமான நிலையம் செல்லும் போது அங்கே முடி வெட்டும் நிலையம் இருக்குமா என்று தன் நண்பரிடம் கேட்கிறார் அவர் இல்லை என்று சொன்னவுடன் அமெரிக்காவில் சென்று வெட்டிக் கொள்ளலாம் என்று கிளம்பும்போது அங்கே பேருந்து ரயிலுக்கு முன்பதிவு செய்வது பல முடி வெட்டுவதற்கும் முன்பதிவு செய்ய வேண்டும் என நினைக்கும் போது ஆச்சரியம் துளிர்க்கிறது அவருக்கு. அப்போது தான் டெல்லியில் பயின்ற போது முடிவெட்டிய தாத்தாவை நினைவு கூறுகிறார். அப்போது தான் முடிவெட்டிய சிறு வயது முதல் யார் யாரெல்லாம் முடிவெட்டினார் என்பதை நினைவு கூறுகிறார்.. நமக்கு ஒன்றாம் வகுப்பு ஆசிரியர் பள்ளியில் பாடம் நடத்தினார் அதுபோல சிறுவயதில் மதுரை செல்வம் அண்ணன், பள்ளியில் பயிலும் போது முத்தையா தாத்தா கல்லூரியில் பயிலும் போது ரோஸ் பவுடர் முகத்தில் தெளிக்கும் மாணிக் பாட்ஷா, டெல்லியில் சந்தித்த மோகன் தாகூர் பிறகு நாகன்னா என ஒவ்வொரு கதாபாத்திரங்களில் வாழ்வியல் நினைவுகளோடு நாவல் பயணிக்கிறது.
எந்த கடையில் முடி வெட்டலாம் என்பது முதன்முறையாக புதிய ஊரில் முடிவெட்ட செல்பவருக்கு இருக்கும் மிகப்பெரிய சவாலாகும். மூன்று கடைகளிலும் இளைஞர் யாரேனும் முடி வெட்டுகிறார்களா என்பதை முதலில் நாம் பார்ப்போம். அவ்வாறு இளைஞர்கள் முடிவெட்டினால் நம்பி அந்த கடைக்கு நுழைவோம் அப்படித்தான் ஆனந்தும் நுழைகிறார் ஒரு கடையில்.
அமெரிக்காவில் வேலை நிமித்தமாக செல்லும்போது கேத்தரின் எனும் பெண்ணுடன் நட்பாக பழகி வருகிறார். அப்போது ஆனந்தனுக்கு கண்ணில் ஒரு பிரச்சனை வரவே மருத்துவர்கள் சில நாட்களுக்கு கணினியை பார்க்கக் கூடாது என கட்டளை இடுகிறார்கள். பின்பு டெல்லியில் வேலை கிடைத்தவுடன் அங்கு வருகிறார். தான் ஆசையாக முடிவெட்டிய கடைகளை பார்க்கிறார் ஆனால் மோகன் தாகூர் அங்கு இல்லை.
சூளைமேட்டில் இருக்கும் குட்டி என்பவரிடம் முடிவெட்டிக் கொண்டு தொலைக்காட்சி பார்ப்பது மிகவும் பிடிக்கும். ஒன்பதாம் வகுப்பு படிக்கும் போது நடைபெற்ற விபத்தில் சலூன் கடைக்காரர் முத்தையா தாத்தா இறந்தது பெரும் சலனத்தை ஏற்படுத்துகிறது. முத்தையா தாத்தா உடன் ஆன சலூன் கடை நினைவுகள் பகிர்ந்து கொள்கிறார் நம்மிடம்.
கல்லூரியில் படிக்கும் போது தன் மாணிக்கம்
சலூன் நினைவுகளை பகிருகிறார் முடி நரைத்தல் வழுக்கை விழுதல் போன்ற பல்வேறு விதமான முடி சம்பந்தமான பிரச்சனைகளுக்கும் தீர்வினை நொடிப்பொழுதில் நமக்கு தருபவர் தான் மாணிக்கம். ஹாஸ்டலில் பயில்வோர் பெரும்பாலும் உடன் இருக்கும் மாணவர்கள் இன்னொரு மாணவருக்கு முடி வட்டி விடுதல் மிகவும் இயல்பான சூழல்.அது போலவே விடுதியில் இருக்கும் சேரன் எனும் மாணவன் முடி வெட்டுவதில் கைதேர்ந்தவன்.
ஆனால் முடி வெட்டுவதில் சிலர் முத்திரை குத்தியதால் சாதி சம்பந்தமான பிரச்சனை எழுந்ததால் சேரன் முடி வெட்டுவதை கைவிட்டு விட்டான்.
அதன் பிறகு ஹைதராபாத்தில் நாகண்ணா தனக்கு முடிவெட்டிய நினைவுகளை பகிர்கிறார். அன்பும் மரியாதையும் கலந்த நாகண்ணாவின் பேச்சு மீண்டும் மீண்டும் பலரையும் கிடைக்க வரத் தூண்டும். தான் பணிபுரிந்த பன்னாட்டு கம்பெனியில் அமெரிக்காவுக்கு நான் சென்றது போலவே அங்கிருந்த கேத்தரினா இந்தியாவுக்கு வந்தார். அவர் என்னுடைய சீனியர் வேலையிலும் வயதிலும் ஆனாலும் நட்புடன் பழகக்கூடியவர். கேத்தரின் சமூக செயல்பாடுகளில் ஆர்வம் மிக்கவர் அமெரிக்க அரசியல் குறித்தும் உலகப் பார்வை குறித்தும் தன்னுடைய ஆழமான கருத்துக்களை உரையாடலும் போது தெரிவிப்பார். திருப்பதியில் இருவகையான நாவிதர்கள் இருந்தனர் ஒருவர் தேவஸ்தானம் மூலமாக நியமனம் பெற்றவர்கள் மற்றவர்கள் தற்காலிக பணிகளில் கூலிமுறையில் ஈடுபடுபவர்கள். ஆனால் அதிலேயே அவ்வாறு நாகண்ணா இல்லாமல் தன்னுடைய தொழில் முறை பயிற்சியில் காலத்துக்கு ஏற்ற மாதிரி இக்காலத்திற்கு ஏற்ற வகையில் தன்னுடைய முடிவெட்டுதலை மாற்றிக் கொண்டார். அவருடைய மனைவியும் ஒப்பனை செய்ய ஆரம்பித்ததால் வாழ்வில் முன்னேற தொடங்கினர்.
தனக்கு முடி வெட்டிய ஐந்து பேரும் ஒன்று சேர்ந்து அமர்ந்து உரையாடினால் எவ்வாறு இருக்கும் என்பதை கற்பனை செய்கிறான் ஆனந்த். ஒவ்வொருவரும் தங்கள் மனதில் உள்ள கேள்விகளையும் பதில்களையும் உரையாடுவதன் வழியே சாதி குறித்து மதம் குறித்து சமூகம் சார்ந்த சிந்தனைகள் குறித்து உரையாடுகிறார்கள்.
*பரந்த சமதள பரப்பில் ஓடும் நதியைப் போல மனம் எவ்விதமான சப்தமும் எழுப்பாமல் காட்சிகளோடு மட்டும் ஓடிக் கொண்டே இருக்கிறது.
*ஆழ்மனது தேங்கி கிடப்பவற்றை கலக்கி விட்டு கலங்கி நினைவுகளை நிதானமாக மேலே மிதக்க விடுகிறது. நேரமாக நேரமாக நினைவுகள் இருட்டு குகைக்குள் இருந்து வரும் மிருகத்தைப் போல துல்லியமாகவும் துணக்கமாகவும் தெரிகின்றன.
*தனக்குத் தேவையானவற்றை தானே தேர்ந்தெடுத்துக் கொள்ளும் பருவத்தில் தான் உண்மையான சுதந்திரம் கிடைக்கிறது.
*மனிதன் காலமெல்லாம் ஆராய்ந்து கொண்டே இருக்க வேண்டிய புதிர்கள் இருக்கின்றன புதிர்கள் அவிழ்ந்து விட்டதாக நினைக்க நினைக்க வினோதங்கள் தலைகாட்டுகின்றன.
*எல்லா குழப்பங்களில் இருந்தும் வெளிவந்துவிட வேண்டும் என்று தான் மனிதன் கடுமையாக முயற்சி செய்கிறான்.
இறந்தவர்களுக்காக முடியை எடுக்கும்போது நாவிதரின் கைகள் தன்னுடைய துத்தகத்தையும் சேர்த்து எடுத்துக் கொள்வது போல இருந்தது. அவர்களுக்கும் குடும்பங்கள் உண்டு .கஷ்டங்கள் உண்டு என்று ஒரு நாவிதரின் பார்வையில் இருந்தும் இந்த நாவல் பயணிக்கிறது. சக மனிதர்களை காவியம் ஆக்கியது போல சலூன் கடைக்காரர்களையும் ஒவ்வொரு நிமிடம் நினைக்க வைத்திருப்பார் இந்த நாவல் முழுவதும்
தொடர்ந்து வாசிப்போம்
தோழமையுடன் மணிகண்ட பிரபு
No comments:
Post a Comment