Wednesday, 16 July 2025

132


#கற்கை_நன்றே_132

வேலை மகிழ்ச்சி தரும் போது,
வாழ்க்கை சந்தோஷமாகிறது.

வேலை கடமையாகும் போது,
வாழ்க்கை அடிமைத்தனமாகி விடுகிறது.

- மாக்சிம் கார்க்கி

நவீன காலங்களில வேலை என்பது வெறுப்பை கொட்டும் இடமாகப் பார்க்கப்படுகிறது.உற்சாகமற்ற வேலையை இனிப்பு போன சூயிங்கம்மை மெல்வது போல சாரமற்றதாய் பார்க்கப்படுகிறது. வேலை மீதான் உற்சாகம் குறைந்து கொண்டே வருகிறது. அதிக வேலை செய்பவர்களை பார்த்து.. குறைவால வேலை செய்பவர் ஏமாளி போல பார்க்கிறார்.இவ்லோ வேலை செய்றியே உனக்கு என்ன அவர்டா கொடுக்கப் போறாங்க? எனக் கேட்கிறார்கள்.மனம் உடனே ஒப்பீடு செய்து சுயபரிசோதனை செய்கிறது. அப்படி உழைக்கனுமா என எண்ணி நம்மை நாமே கேள்வி கேட்கிறோம். வேலை மீதான வெறுப்புனர்வோடு இந்த விரக்தியும் சேர்ந்து கொள்கிறது.

வேலைசெய்வதற்கான உற்சாகமின்மைதான் இதற்கெல்லாம் காரணமென நார்மன் வின்செண்ட் பீல் குறிப்பிடுகிறார்.அவர் மேற்கோள் சொல்கிறார்..

உளவியல் மருத்துவரான டாக்டர் ரோலோ மே. நியூயார்க்கில் ஒரு கூட்டத்தில் பேசியபோது,"வாழ்வில் திறம்பட இயங்குவதற்கு உங்களுக்கு உதவி செய்யும் ஓர் அம்சம்தான் உங்களுடைய ஆளுமை. ஒவ்வொருவரிடமும் இரண்டு விதமான ஆளுமைத் திறன்கள் இருக்கின்றன. நீங்கள் மற்றவர்மீது எப்படிப்பட்டதொரு தாக்கத்தை விளைவிக்கிறீர்கள் என்பது ஒன்று. மற்றவர்கள் உங்கள்மீது எத்தகைய தாக்கத்தை விளைவிக்க நீங்கள் அனுமதிக்கிறீர்கள் என்பது இரண்டாவது. இவை இரண்டும் சேர்ந்ததுதான் உங்களுடைய ஆளுமை," என்று குறிப்பிட்டார்.

டேல் கார்னகி வேலை குறித்த உற்சாகத்தைப் பெறுவதற்கு.. தான் வேண்டுமென்றே வேலை,பணம், சொத்துக்கள்,புகழை இழந்துவிட்டதாக கற்பனை செய்வேன்.கடும் வேதனையில் குதிப்பேன்.பின் நான் எவற்றையெல்லாம் இழந்திருக்கவில்லை என் கணக்கிட்டு பல மடங்கு உற்சாகத்தையும், புத்துணர்வையும் மீட்டெடுப்பேன் என்றார்.

மற்றொரு உத்தி, உங்கள் வேலையை வேறு ஒருவர் எப்படிப் பார்ப்பார் என்ற கேள்வியை உங்களுக்கு நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள். அந்த நபர் அந்த வேலையை எப்படிச் செய்வார் என்று உங்கள் கற்பனைக் குதிரையைத் தட்டிவிடுங்கள். தனக்குக் கொடுக்கப்படும் எந்த வேலையையும் மிகச் சிறப்பாகச் செய்யும் ஒரு நபராக அவர் இருக்கக்கூடும். சுவாரசியமற்றது என்று நீங்கள் கருதிய அந்த வேலைக்கு உயிரூட்ட அவர் எந்தவிதமான நடவடிக்கைகளை எடுப்பார்? அவற்றையெல்லாம் யோசியுங்கள்.

பின் அவற்றை உங்கள் வேலையில் பயன்படுத்தத் தொடங்குங்கள். ஆனால் உங்களால் அந்த நபரைவிடச் சிறப்பாகச் செய்ய முடியும். ஏனெனில், உங்கள் வேலையில் உங்களுக்கு அந்த நபரைவிட அதிக அனுபவம் இருக்கிறது. உங்களுக்கு நன்கு பரிச்சயமானதொரு வேலையில் உங்களால் புதிய கற்பனை வளமிக்க ஏதாவது ஒரு மாற்றத்தைக் கண்டிப்பாகப் புகுத்த முடியும். இப்புதிய அணுகுமுறை உங்களுக்கு உங்கள் வேலையில் உற்சாகத்தையும் வலுவையும் அளிக்கும்.

எந்தவொரு நாளையும் உற்சாகத்தால் நிரப்பினால்.. அந்த நாள் உங்களுக்கு தன்னால் முடிந்த அளவு அனைத்தையும் திருப்பி அளிக்கும்.

நற்காலை

தோழமையுடன் மணிகண்ட பிரபு

No comments:

Post a Comment