ஆப்ரிக்க தேசத்தின் பழங்குடியின கிராமத்திற்கு ஓர் ஆய்வுக்காக சென்றிருந்த ஒரு மானுடவியலாளர், அங்கு இருந்த சிறுவர்களுக்காக ஒரு விளையாட்டை திட்டமிட்டார்.
ஒரு மரத்தடியில், கூடை நிறைய சாக்லெட்களை வைத்துவிட்டு, அந்த மரத்திலிருந்து 100 அடிகள் தள்ளி குழந்தைகளை நிற்க வைத்தார். அந்த குழந்தைகளிடம், “நீங்கள் அனைவரும் அந்த மரத்தை நோக்கி ஓட வேண்டும். யார் முதலில் அந்த மரத்தை அடைகிறார்களோ அவர்கள் மொத்த சாக்லெட்களையும் எடுத்துக் கொள்ளலாம்” என்று கூறினார்.
அந்த சிறுவர்கள் ஓடுவதற்கு பதிலாக, அனைவரும், ஒன்றாக இணைந்து, தமது கைகளை பிடித்துக்கொண்டு, நடந்து சென்று ஒரே நேரத்தில் அந்த மரத்தை அடைந்தார்கள். கூடையில் இருந்த சாக்லெட்களை அனைவரும் தமக்குள் சமமாக பங்கிட்டு உண்டு மகிழ்ந்தனர்.
ஆய்வாளருக்கு ஆச்சரியம், “ஏன் நீங்க போட்டியிடாமல், இப்படி அனைவரும் இணைந்து வந்தீர்கள்?” என்று கேட்டபோது, அந்த குழந்தைகள், “உபுண்டு” என்றனர். பழங்குடியின மொழியில், உபுண்டு என்றால், “மற்றவர் வருத்தப்படும் போது ஒருவர் எப்படி மகிழ்ச்சியாக இருக்க முடியும்” என்ற அர்த்தத்தை தரும்.
“நாம் என்பதாலேயே நான்”. இதுவே உபுண்டு. சமகால போட்டி சமூகத்துக்கு மிகவும் தேவையான பண்பு இது. போட்டிகளில் வெல்வதன் மூலம் ஒருவருக்கு கிடைக்கும் மகிழ்ச்சியை விட, இருப்பதை பகிர்ந்து அடையும் மகிழ்ச்சியிலேயே மனிதம் தழைக்கிறது.
-ஜானகிராமன் நாபலூர்
No comments:
Post a Comment