Sunday 25 December 2022

பிச்சைக்காரன்


இயேசு நாதர் ஒரு கூட்டத்தில் பேசிக்கொண்டு இருந்தார். அப்போது யாரோ தன்னை தொடுவதை உணர்ந்து திரும்பி பார்த்தார். ஒரு பெண். பயங்கர நோயாளி. அவர் அங்கியின் நுனியை தொடுவதை பார்த்தார்.
என்னம்மா செய்கிறாய் என்றார்... எனக்கு பயங்கர துன்பங்கள்..உங்களை தொடுவதால் , என் நோய் தீரும் என நம்புகிறேன் என்றாள் அவள்.
இயேசு மனம் மகிழ்ந்து , சரி உன்னை குணமாக்கி விட்டேன் என சொல்லி அவள் குணம் அடைந்து இருந்தால் அது மொண்ணையிசம்..
பரமபிதா உன்னை குணமாக்கி விட்டார் என சொல்லி இருந்தாலும் அது மொண்ணையிசம்தான்..
இயேசு என்ன சொன்னார் என்பது ஆழமானது...
உன் விசுவாசம் உன்னை ரட்சித்தது என்றார்..

இதுவா  அதுவா என குழம்பாமல்  ஏதோ ஒன்றை  விசுவாசியுங்கள்   மனதுக்கு உண்மையாக  இருங்கள்..   கடவுளே  இல்லை என நம்பினால்  அந்த நம்பிக்கைக்கு உண்மையாக  இருங்கள்..இலக்கியம்   தொழில்    உங்களது  காதலி   காதலன் என ஏதோ ஒன்றில்  முழு விசுவாசம்  வையுங்கள்

இயேசுவை   நம்புபவர்  வேறு  தெய்வங்களை  நம்புவோர்   கடவுள் இல்லை  என  நம்புவோர்     நம்பிக்கைகள்  ஏதுமற்ற தேடலாளர்கள்   அனைவர்க்கும்   நல்வாழ்த்துகள்

-பிச்சைக்காரன்

No comments:

Post a Comment