Saturday 17 December 2022

அழகுராஜன்


தான் மேகமாய் 
மிதந்ததை,
பெரும் மழையாய் பொழிந்ததை,
காட்டாற்று வெள்ளமாய் கடந்ததை,
நதியாய் நகர்ந்ததை,
மீண்டும்
கடலானதை,
கடைசிவரை யாரிடமும்
சொல்லவில்லை
அந்த 
மழைத்துளி.

-த. அழகுராஜன்

No comments:

Post a Comment