Thursday 15 December 2022

உமா மகேஸ்வரி


சிகரமென்பது, கற்பனையின் கூவலைப் போல ஒரு மிக உயர்ந்த புள்ளியன்று. அது எல்லாவற்றிலும் மேலான, அனைத்தையும் தாழ்த்துகிற உன்னத நிலையுமல்ல,அது சமதளம்.உயர்வு தாழ்வு, ஆனந்தம், சந்தோசம் அத்தனையும் கொட்டி நிரப்பப்பட்ட சமன்நிலையின் நிதான வெறுமை. கீழிருக்கும் போது மேலேயும், மேல் நிற்கையில் கீழேயும், தாவ முனைகிற தவிர்க்கவியலாத் தத்தளிப்பு

-உமா மகேஸ்வரி

No comments:

Post a Comment