Friday 30 December 2022

janakiraman


யானை வாழ்க்கை 

நாம ஒரு நாளைக்கு சுமார் மூன்று கிலோ உணவை சாப்பிடுகிறோம், ஆறு லிட்டர் தண்ணீர் குடிக்கிறோம். அவை நாம உயிர் வாழத் தேவையான சக்தியை அளிக்கிறது. ஆனால் நாம சாப்பிடுவதால் சுற்றுச்சூழலுக்கு எந்த பயனுமிருப்பதில்லை. 

ஆனால், ஒரு யானை சாப்பிடுவதால் ஒரு காடே உருவாகிறது. ஒரு யானை, ஒரு நாளைக்கு சராசரியாக 200 - 250 கிலோ உணவு சாப்பிடும். ஏறக்குறைய அதனோட உடல் எடையில இருந்து 5 சதவிகித உணவை ஒரு நாளைக்குச் சாப்பிடும். ஒரு நாளைக்கு ஒரு யானை 150 லிட்டர் தண்ணீர் குடிக்கும். 

இந்த 250 கிலோ உணவில் 10 சதவிகிதம் (25 கிலோ) பல வித செடி, கொடி, மரங்களின் விதைகள் இருக்கும். யானைகள் மென்று துப்பியது, கழிவின் மூலம் வெளியேறியது, மரத்தை உலுக்குவதன் மூலம் கீழே உதிர்ந்தது என 10 கிலோ விதைகளும் குச்சிகளும் திரும்ப மண்க்குள் விதைக்கப்படுகிறது. இதன் மூலம், சராசரியா ஒரு யானை ஒரு நாளைக்கு 300 - 500 விதைகளை விதைக்கிறது” 

500 விதைகளில் குறைந்தது 100 விதைகளாவது முளைத்துவிடும். இது மிகவும் குறைந்தபட்ச எண்ணிக்கைதான். அப்படியென்றால், ஒரு யானை ஒரு மாதத்திற்கு 3000 மரங்களை நடுகிறது. வருடத்திற்கு 36 ஆயிரத்து ஐநூறு மரங்கள். 

ஒரு யானை 50 வருடங்கள் உயிர்வாழ்ந்தால், தன் வாழ்நாளில் 18 லட்சத்து 25 ஆயிரம் மரங்கள் வளரக் காரணமாகிறது. 

ஒரு யானையால் ஒரு நாளைக்கு 190 கிலோமீட்டர் நடக்க முடியும். சராசரியா ஒரு நாளைக்கு நான்கு முதல் ஐந்து மணி நேரத்தில் 30 கிலோமீட்டர் தூரம் யானைகள் நடக்கும். மனிதர்களைவிட 2 மடங்கு வேகத்தில் யானைகள் ஓடும். ஒரு நாளில் இரண்டு மணி நேரம் மட்டும் தூங்கி, ஐந்து மணி நேரம் நடத்து மிச்சமிருக்கும் நேரமெல்லாம் யானைகள் சாப்பிட்டுக்கொண்டே இருக்கும். 

இப்படிப்பட்ட வாழ்க்கையை யானைகள் வாழ்வதால் தான் அதன் மூலம் காடுகளும் அதைச் சார்ந்த பல்லாயிரக்கணக்கான பறவைகள், சிறு விலங்குகள், பூச்சிகள் உயிர் வாழ்கின்றன. இதனால், யானை ஓர் மூலாதார உயிரி (keystone species)யாக போற்றப்படுகிறது. 

நமது வாழ்க்கையையும் ஒரு யானை போல மாற்றிக்கொள்ள முடியும். நமது வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து நம்பிக்கையையும், ஆறுதலையும் மற்றவர்களுக்கு விதையைப் போல அளிக்கும் போது நாமும் யானையாகிறோம். நாம் செல்லும் பாதையெங்கும் கதிரியக்கம் போல உற்சாகத்தை பரப்பி மற்றவரையும் ஊக்கப்படுத்தலாம். 

யானை எந்தக் காலத்திலும் தான் ஒரு மிகப்பெரிய அரிய பணியை செய்கிறோம் என்றோ, காட்டையே உருவாக்குகிறோம் என்றோ எந்த வித சுய-கர்வமும், பெருமையும் கொள்வதே இல்லை. அது தனது வாழ்வின் இயக்கமாக, எளிமையாக தனது வாழ்வின் வழியே இயற்கையை புதுப்பித்துக்கொண்டே இருக்கிறது. அதே போல நாமும், நமது சுதர்மமாக நம்பிக்கையை பரப்பி, நம்மிடமிருப்பது பகிர்ந்து பெருமையோ, கர்வமோ, தனி அங்கீகாரமோ கோராமல் வாழமுடியும். அது போன்ற வாழ்க்கை "யானை வாழ்க்கை". 

-janakiraman

No comments:

Post a Comment