Sunday 25 December 2022

பேயும் தெய்வமும்-janakiraman


பேயும் தெய்வமும்

“பேயாய் உழலும் சிறுமனமே!
பேணாய் என் சொல். இன்று முதல்
நீயாய் ஒன்றும் நாடாதே!
நினது தலைவன் யானே காண்”

இது மகாகவி பாரதியின் மிக முக்கிய கவிதைகளின் ஒன்று. இந்தக் கவிதையில் மனதை "பேய்" என்கிறார். தமிழில் “பே” எனும் ஒற்றை எழுத்துக்கு, அச்சுருத்தக்கூடியது, அருவெறுப்பானது என்ற அர்த்தமுள்ளது. அச்சுருத்தக்கூடிய ஒன்றை, பேய் என அழைக்கிறோம். 

இன்னொறு பரிமாணத்தில் பேயின் குணங்களாக பொது சமூகம் தொடர்ந்து சிலவற்றை கூறி வருகிறது. எதிலும் திருப்தியடையாத, ஒன்றிலிருந்து வேறொன்றிக்கு தாவக்கூடிய, நமது தெளிவை அழித்து நோய்மையில் தள்ளக்கூடிய, காரணமே இல்லாமல் பேராசை, வெறுப்பு, கோபம், விரக்தி ஆகியற்றை கொண்டிருப்பவைகளை, பேய் என்கிறோம். நமது மனமும் அறிவு சொல்வதைக் கேட்காமல் அதன் போக்கில், கட்டுபாடில்லாமல் இயங்கும் போது அது பேயாகிறது. 

இந்த கவிதையில் "உழலுதல்" எனும் வார்த்தையும் முக்கியம். உழலுதல் என்றால், அலைதல்; சுற்றித்திரிதல்; நிலைகெடுதல் என்று அர்த்தம். எந்த முன்னேற்றமும் இல்லாமல் பேராசை, கோபம், வெறுப்பு, விரக்தி ஆகியவற்றை சுமந்துகொண்டு சும்மா சுற்றித்திரியும் சிறுமை கொண்ட மனம் நம்முடையது என்கிறார் பாரதி. 

மனப்பேய் பற்றி கண்ணதாசன் கூறும் போது, "காரணம் இல்லாமல் கற்பனைகளை வளர்த்துக் கொண்டு கலங்குகிறது. நடந்துபோன காலங்களுக்காக அழுகிறது. நடக்கப்போகும் எதிர்காலத்தைக் கண்டு அஞ்சுகிறது. அடுத்தவர்களுக்கு ஆறுதல் சொல்ல முனைந்து நிற்கிறது. அந்த ஆறுதல் தனக்கே தேவைப்படும்போது சக்தியற்றுப் போய் விடுகிறது" என்கிறார். 

பத்தாயிரம் ரூபாய்க்கு ஒரு செல்போன் வாங்கியிருப்போம். பதினைந்தாயிரத்தில் இன்னும் நல்ல மாடல் இருந்தா, அதை வாங்கலாமோ என மனம் அலைபாயும். அது கிடைத்ததும், அடுத்து 25,000, ஒரு லட்சம் என்று நமது செல்போன் ஆசையின் அளவு அதிகமாகிக்கொண்டே செல்லும். இதே போலத் தான், வீடு, சொத்து, தங்கம், வாகனங்கள், ஆடை என அனைத்திலும் ஒரு நிறைவு இல்லாமல் அடுத்தடுத்து என எப்போதும் மற்றவரிடம் இருப்பதைப் பார்த்து பேராசை கொண்டு, வாழும் நாட்களை நிம்மதி இல்லாமல் செய்துவிடுகிறது பேய் மனம். 

ஜப்பானிய ஜென் மார்கம் இதனை, "Wandering Mind" என்று குறிப்பிடுகிறது. சீடன் ஒருவன் குருவிடம், ஒரு கொடியைக் காண்பித்து, "குருவே, அங்கு காற்று அசைகிறதா, அல்லது கொடி அசைகிறதா?" என்று கேட்கிறான். குரு, "இரண்டுமில்லை, உனது மனம் தான் அசைகிறது" என்கிறார். மனம் தான் அனைத்தையும் கற்பனை செய்துகொள்கிறது, பார்க்கின்றவற்றை பற்றி, எந்த தீர்ப்பும் எழுதாமல், வெறுமனே பார்வையாளராக இருக்கும் அசைவற்ற மனமே, விழிப்புணர்வின் விதையாய் இருக்கும்.  

இந்த உழலுதலை நிறுத்த அறிவு செயல்பட வேண்டும். அதையே தான் பாரதியும் “நினது தலைவன் யானே காண்”. என்கிறார். அந்தத் தலைவன், நமக்குள் இருக்கும் ஆன்மா அல்லது அறிவாக இருக்கலாம். பேய் மனது தனது இயல்பு இல்லை என அதனை தன்னிலிருந்து வேறுபடுத்தி, அதனை கட்டுப்படுத்தும் அறிவே "நான்" என்று அறிவது மிக முக்கியம்.

"பேயாய் உழலும் சிறு மனமே" என்று கூறிய அதே பாரதி தான், "தெய்வம் நீ என்று உணர்" என்றும் கூறுகிறார். நாம் பேயா, தெய்வமா எனத் தீர்மானிப்பது நம்மிடமே இருக்கிறது.

-janakiraman

“பேயாய் உழலும் சிறுமனமே!
பேணாய் என் சொல். இன்று முதல்
நீயாய் ஒன்றும் நாடாதே!
நினது தலைவன் யானே காண்”

இது மகாகவி பாரதியின் மிக முக்கிய கவிதைகளின் ஒன்று. இந்தக் கவிதையில் மனதை "பேய்" என்கிறார். தமிழில் “பே” எனும் ஒற்றை எழுத்துக்கு, அச்சுருத்தக்கூடியது, அருவெறுப்பானது என்ற அர்த்தமுள்ளது. அச்சுருத்தக்கூடிய ஒன்றை, பேய் என அழைக்கிறோம். 

இன்னொறு பரிமாணத்தில் பேயின் குணங்களாக பொது சமூகம் தொடர்ந்து சிலவற்றை கூறி வருகிறது. எதிலும் திருப்தியடையாத, ஒன்றிலிருந்து வேறொன்றிக்கு தாவக்கூடிய, நமது தெளிவை அழித்து நோய்மையில் தள்ளக்கூடிய, காரணமே இல்லாமல் பேராசை, வெறுப்பு, கோபம், விரக்தி ஆகியற்றை கொண்டிருப்பவைகளை, பேய் என்கிறோம். நமது மனமும் அறிவு சொல்வதைக் கேட்காமல் அதன் போக்கில், கட்டுபாடில்லாமல் இயங்கும் போது அது பேயாகிறது. 

இந்த கவிதையில் "உழலுதல்" எனும் வார்த்தையும் முக்கியம். உழலுதல் என்றால், அலைதல்; சுற்றித்திரிதல்; நிலைகெடுதல் என்று அர்த்தம். எந்த முன்னேற்றமும் இல்லாமல் பேராசை, கோபம், வெறுப்பு, விரக்தி ஆகியவற்றை சுமந்துகொண்டு சும்மா சுற்றித்திரியும் சிறுமை கொண்ட மனம் நம்முடையது என்கிறார் பாரதி. 

மனப்பேய் பற்றி கண்ணதாசன் கூறும் போது, "காரணம் இல்லாமல் கற்பனைகளை வளர்த்துக் கொண்டு கலங்குகிறது. நடந்துபோன காலங்களுக்காக அழுகிறது. நடக்கப்போகும் எதிர்காலத்தைக் கண்டு அஞ்சுகிறது. அடுத்தவர்களுக்கு ஆறுதல் சொல்ல முனைந்து நிற்கிறது. அந்த ஆறுதல் தனக்கே தேவைப்படும்போது சக்தியற்றுப் போய் விடுகிறது" என்கிறார். 

பத்தாயிரம் ரூபாய்க்கு ஒரு செல்போன் வாங்கியிருப்போம். பதினைந்தாயிரத்தில் இன்னும் நல்ல மாடல் இருந்தா, அதை வாங்கலாமோ என மனம் அலைபாயும். அது கிடைத்ததும், அடுத்து 25,000, ஒரு லட்சம் என்று நமது செல்போன் ஆசையின் அளவு அதிகமாகிக்கொண்டே செல்லும். இதே போலத் தான், வீடு, சொத்து, தங்கம், வாகனங்கள், ஆடை என அனைத்திலும் ஒரு நிறைவு இல்லாமல் அடுத்தடுத்து என எப்போதும் மற்றவரிடம் இருப்பதைப் பார்த்து பேராசை கொண்டு, வாழும் நாட்களை நிம்மதி இல்லாமல் செய்துவிடுகிறது பேய் மனம். 

ஜப்பானிய ஜென் மார்கம் இதனை, "Wandering Mind" என்று குறிப்பிடுகிறது. சீடன் ஒருவன் குருவிடம், ஒரு கொடியைக் காண்பித்து, "குருவே, அங்கு காற்று அசைகிறதா, அல்லது கொடி அசைகிறதா?" என்று கேட்கிறான். குரு, "இரண்டுமில்லை, உனது மனம் தான் அசைகிறது" என்கிறார். மனம் தான் அனைத்தையும் கற்பனை செய்துகொள்கிறது, பார்க்கின்றவற்றை பற்றி, எந்த தீர்ப்பும் எழுதாமல், வெறுமனே பார்வையாளராக இருக்கும் அசைவற்ற மனமே, விழிப்புணர்வின் விதையாய் இருக்கும்.  

இந்த உழலுதலை நிறுத்த அறிவு செயல்பட வேண்டும். அதையே தான் பாரதியும் “நினது தலைவன் யானே காண்”. என்கிறார். அந்தத் தலைவன், நமக்குள் இருக்கும் ஆன்மா அல்லது அறிவாக இருக்கலாம். பேய் மனது தனது இயல்பு இல்லை என அதனை தன்னிலிருந்து வேறுபடுத்தி, அதனை கட்டுப்படுத்தும் அறிவே "நான்" என்று அறிவது மிக முக்கியம்.

"பேயாய் உழலும் சிறு மனமே" என்று கூறிய அதே பாரதி தான், "தெய்வம் நீ என்று உணர்" என்றும் கூறுகிறார். நாம் பேயா, தெய்வமா எனத் தீர்மானிப்பது நம்மிடமே இருக்கிறது.

-janakiraman

No comments:

Post a Comment